Skip to main content

ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (2)


அன்றாடத்தின் கவனச்சிதறல்களில் இருந்து, வேலையின் அலைகழிப்பில் இருந்து, அபத்தமான மனிதர்களிடம் இருந்து ஒரு எழுத்தாளன் தப்பிப்பது எப்படி? என எனக்கு கீழ்வரும் விசயங்கள் தோன்றுகின்றன:
1)   அன்றாட விசயங்களில், தினசரி சகமனித உரையாடல்களில், சந்திப்புகளில் (நமக்கு பயன்படாது எனத் தோன்றும் சமாச்சாரங்களில்) உணர்ச்சியை வீணடிக்காமல் இருப்பது.

2)   முடிந்த வரை பட்டும்படாமல் நடந்து கொள்வது. எல்லாரிடமும் நடிப்பது. இது போலித்தனமோ பாசாங்கோ அல்ல. இது ஒரு சிறந்த கலை. நீங்கள் ஒருவரிடம் சிரிக்கிறீர்கள். ஆனால் சிரிக்கிறீர்கள் எனும் உணர்வு உங்களுக்குள் உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டை, அலுவலகத்தை, ஒரு பொதுவெளியை ஒரு நாடக அரங்காக பயன்படுத்துகிறீர்கள். இதில் ஒரு தனி சந்தோசம் உள்ளது. முயன்று பாருங்கள். நீங்கள் இயல்பாக உண்மையாக வெளிப்படையாக எல்லா இடங்களிலும் இருப்பது நல்லதல்ல. விரைவில் களைத்து விடுவீர்கள். பொய் அழகானது.
3)   கிடைக்கும் நேரத்தில் எல்லாம் எழுதுவது.
4)   எழுதும் போது நமக்காக ஆற்றலை வளர்த்துக் கொள்வது. இது பயிற்சியின் விளைவாக தானே நிகழும். நான் எழுதி பாதி வாக்கியத்தின் நடுவே லேப்டாப் கீபோர்டில் என்னையறியாது சாய்ந்து உறங்கி இருக்கிறேன். அவ்வளவு கடும் களைப்பிலும் என்னால் இப்போது எழுத முடிகிறது. எழுத கை வைத்ததும் வயாக்ரா உண்ட ஆண்குறி போல் நான் விரைத்துக் கொள்கிறேன், எப்போதும்.
5)   எழுதும் போது மிக உற்சாகமாய், துடிப்பாய் நம்மை வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு பிரமை தான். ஆனால் தொடர்ந்து பயின்றால் நாம் எழுதும் போதே தனி உயிர்ப்புடன் இருப்பதை அறிய முடியும். இதை நான் ஜெயமோகனிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவரை முன்பு அலுவலகத்துக்கு பார்க்க போவதுண்டு. மதியம் குட்டித் தூக்கம் போடுவார். நான் அவர் அருகில் காத்திருப்பேன். அவர் விழித்துக் கொண்டதும் ஸ்விட்ச் போட்ட பொம்மை போல் என்னிடம் இலக்கியம், எழுத்து, வாழ்க்கை என மிகுந்த உற்சாகத்துடன் உரையாட ஆரம்பிப்பார். Lag என்று நாம் இன்று காணொளிகள், மின்கருவிகளுக்கு சொல்வோமே. ஒரு எழுத்தாளன் எனும் கிரீடத்தை அணியும் போது ஜெயமோகனிடம் அரைவினாடி lag கூட இராது. எழுத்தாளன் சோர்வாக இருக்கக் கூடாது, எதிர்மறை சிந்தனைகளை வளர்க்கக் கூடாது என அவர் என்னிடம் வலியுறுத்துவார். தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகள் நம் எழுத்தை பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்பார். ஒரு தேநீர் அருந்துவதைக் கூட அவர் எழுத்தை சுற்றியே திட்டமிடுவார். நம் சூழலில் எழுத்தாளனாய் இப்பண்பு மிக அவசியம்!
6)   இறுதியாக, முழுநேர எழுத்தாளனாய் இருப்பது மேற்குறிப்பிட்ட அல்லல்களில் இருந்து தப்பிக்க நிச்சயம் உதவும். ஆனால் வாழ்க்கையில் ஏதாவது அன்றாட தொந்தரவுகள், குறுக்கீடுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். கொசுவிடம் இருந்து தப்பித்தாலும் அதன் ரிங்காரம் நம்மை விடாது. ஆனால் முழுநேர எழுத்து மிகப்பெரிய சௌகரியமே. அது வாய்க்காதவர்கள் வேறுவகையில் வாழ்க்கையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நிறைய பொருள் ஈட்டி நிலைப்பெற்ற பின் எழுதலாமே?
1)   ஆனால் பத்து வருடங்கள் கழித்து நமக்கு எழுதும் ஆர்வம், தேவை, ஆற்றல் இருக்குமா?
2)   பத்து வருடங்கள் கழித்து நாம் உயிருடன் தான் இருப்போமா?
3)    மேலும் இந்த பத்து வருடங்கள் நான் எழுத்தில் இழக்கப் போவதை எப்படி ஈடுகட்டுவது?
இக்கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. ஆகையால், நான் எதிர்காலத்தில் அமையப் போகும் ஒரு கற்பனையான எழுத்து வாழ்வுக்காக எனது “இன்றை” நடைமுறைத் தேவைகளின் பலிபீடத்தில் வெட்டி சாய்க்க மாட்டேன்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...