முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிம்பன்ஸிகள் செய்த கொலை (1)

Image result for chimpanzee violence

அன்புள்ள அபிலாஷ்,

உங்களின் யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா கட்டுரையை படித்தேன். உலகம் முழுக்க ஆயுதம் ஒரு பண்டமாக மாறியதும் ஆயுதத்துக்காக இன்று யுத்தங்கள் நிகழ்வதும் சோகமான உண்மையே. 

ஆனால் இந்த நிலை ஆதி முதல் இப்படியே தொடர்கிறதா என்று யோசிக்கும்போது, நெடுநாட்களுக்கு முன் டிஸ்கவரி சேனலில் பார்த்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. ஒரு சரணாலயத்தில் இருபது சிம்பன்சி குரங்குகள் ஒரு குழுவாக வாழ்கின்றன. அந்த குழுவில் திசை மாறி வந்த ஒரு புதிய சிம்ப் சேர முயற்சிக்கிறது. இந்த புதுவரவை சில சிம்ப்கள் வெறுக்கின்றன. இந்த வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு கட்டத்தில் அந்த மொத்த குழுவும் அந்த புதிய சிம்ப்ஐ அடித்து உதைத்து மரத்திலிருந்து தள்ளிவிடுகின்றன. சிறிது நேரத்தில் அந்த சிம்ப் செத்துவிடுகிறது. அந்த சிம்ப்களுக்கு இது ஒரு கொலை என்று தெரிவதற்கு முன்பே அது நிகழ்த்தப்பட்டுவிட்டது. இதற்கான காரணம் ஒரு தற்காப்பு. இது என் இடம் அதன் எல்லைக்குள் வராதே, இது என் குழு இதில் சேராதே, இது என் பெண் துணை இதனை சீண்டாதே என்கின்ற தற்காப்பு. ஆயுதங்களின்றி ஒரு குழுவாக இதை செய்கின்றன.


ஆனால் இந்த தற்காப்பிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. இதே சிம்ப் குழுவை ஒரு சிங்கம் தாக்கினால், என்னதான் அவை தற்காத்துக்கொள்ள முயன்றாலும் ஒரு இரு இழப்புக்கள் நிகழத்தான் செய்யும். தம்மைவிட வலுவான ஒரு எதிரியிடமிருந்து காத்துக்கொள்ள ஆயுதங்கள் பயன்படுத்த துவங்கியிருக்கலாம். ஆதி மனிதனால் நெருப்பும் இதற்காகவே முதலில் பயன்படுத்தப்பட்டது. தற்காப்பிற்காக ஆயுதம் என்று இருந்த நிலை எப்பொழுது மாறியது?

சிறு குழுக்களாக இயங்கிக்கொண்டிருந்த தங்களுக்குள் சுய நிறைவு பெற்றிருந்த அதுவரை தற்காப்பிற்காக மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்திய ஆதி மனிதன் , பெருங்குழுக்களாக வளர ஆரம்பித்ததும் அவனது தேவை பெறுக ஆரம்பிக்கிறது. அதை நிறைவுசெய்ய மற்ற குழுக்களிடமிருந்து தனக்கு தேவையானதை பறிப்பதற்கு ஆயுதங்களை செய்ய ஆரம்பிக்கிறான். இந்த புள்ளியே ஆயுதத்திற்காக யுத்தம் என்கின்ற நிலையின் தொடக்கம் என்று நினைக்கிறேன்.

இந்த யுத்தம் தேவையை மையப்படுத்தி ஆரம்பித்திருந்தாலும் அதன் இன்றைய நிலை தன் சுகத்திற்காக மற்றவர் வளத்தை சுறண்டவும் தன்னிருப்பை காட்டவும் நம்பிக்கையின் பெயராலும் பெருமையின் பெயராலும் நிகழ்த்தப்படுவது ஆதி மனிதனிலிருந்து நாம் வளர்ந்திருக்கிறோமா அல்லது தேய்ந்திருக்கிறோமா என்ற ஐயத்தை எழுப்புகிறது.
நன்றி,

பிரபு 

(பிரபுவுக்கான என் பதில் அடுத்த பதிவில்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...