முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினிகாந்தும் காவிரி நீரும்

Image result for rajinikanth modi
ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரின் பேட்டியை - வழக்கமான ரஜினி அரசியலுக்கு எப்பத்தான் வருவாருங்க டைப் பேட்டி - சன் டிவியில் பார்த்தேன். ராஜ் பகதூர் டிவியில் அரசியல் பேசி பரிச்சயமற்றவர் ஆகையால் அவரது பேச்சில் அப்பாவித்தனமும், அதனூடே உண்மையும் அவ்வப்போது பளிச்சிட்டது.
 இந்த வகையான பேட்டிகள் இப்போது ஒளிபரப்பாவது முக்கியம். ஏனெனில் ரஜினி கட்சி ஆரம்பித்த பின் பாஜக நியமிக்கும் நேர்த்தியான தந்திரமான பேச்சாளர்கள், தரகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ரஜினியை சூழ்ந்து கொள்வார்கள். கச்சிதமா தந்திரமாய் அவர்கள் பேசுவார்கள். ரஜினி உண்மையில் என்ன தான் யோசிக்கிறார், என்ன தான் பண்ணுகிறார், அவரைச் சுற்றி என்ன தான் நடக்கிறது என நமக்கு தெரியாமல் போகும். ஆனால் ராஜ் பகதூர் போன்றவர்களோ ஒரு கண்ணாடிச் சுவர் போல. அவர் பேசுகையில் அவர் ஊடாக  நாம் நிறைய கவனித்து புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலே எனக்கு இப்பேட்டி பிடித்திருந்தது.

 உ.தா, இப்படி ஒரு கேள்வி:ரஜினி ஒரு அரசியல் தலைவராக இயங்கும் சந்தர்ப்பம் வரும் போது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை வருகிறது. அவர் கர்நாடகத்தின் மண்ணின் மைந்தன், ஆனால் தமிழக மக்களின் பிரதிநிதி. இப்போது அவர் என்ன முடிவெடுப்பார், யாரை ஆதரிப்பார்?” இதற்கு ஒரு பயிற்சி பெற்ற அரசியல் பேச்சாளர்ரஜினி ஒரு தமிழக தலைவராக எப்போதும் தமிழக நலன் சார்ந்து மட்டுமே சிந்திப்பார். அதில் துளியும் ஐயம் கொள்ள அவசியம் இல்லை.என பொதுப்படையாய், ஆனால் பொய்யான, பதிலை அளித்திருப்பார். ஆனால் ராஜ் பகதூர் தன் இதயத்தில் இருந்து, வெளிப்படையாய் இவ்வாறு சொல்கிறார்:இல்லிங்க ரஜினி கர்நாடகாவை சேர்ந்தவர் என்கிறதால அவரால அங்க போய் நமக்காக பேச முடியும்.
உடனே நிருபர் கேட்கிறார்:அப்படீன்னா காவிரி நீர் வாங்கிக் கொடுத்து விடுவாரா?”
ஆமாங்க வாங்கித் தருவார், கொஞ்சமா வாங்கித் தருவார்.

இந்தகொஞ்சமாமுக்கியமான சொல். இது அவரையும் அறியாமல் அவர் வாயில் இருந்து நழுவி விழுந்த சொல். ரஜினி எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பற்றி அவரை நெருக்கமாய் அறிந்த உற்ற நண்பர் ராஜ் பகதூர் என்ன நினைக்கிறார் என நாம் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம். ரஜினி என்ன செய்வார்? அவர் கர்நாடகாவையும் பகைக்க மாட்டார், தமிழகத்துக்காய் துணிச்சலாய் இறங்கவும் மாட்டார். குழம்பிப் போவார். நிறைய யோசிப்பார். இரு தரப்புக்காகவும் இரண்டு பக்கமும் நிறைய பேசுவார். கடைசியில் ஒன்றுமே பண்ண மாட்டார். பூசி மொழுகிக் கொண்டே இருப்பார். தன் நண்பர் இப்படித் தான் பண்ணுவார் என ராஜ் பகதூர் சொல்ல நினைக்கவில்லை. சொல்லவும் மாட்டார். ஆனால் அவர் மனதுக்குள் ரஜினி பற்றி இருக்கக் கூடிய பூடகமான சித்திரம் இருக்கிறது. அதுவே அவரையும் அறியாமல் இங்கே வெளிப்பட்டிருக்கிறது. அவர் வாயில் இருந்து நழுவியகொஞ்சமாகஎனும் சொல் இதை நமக்கு தெளிவாக காட்டி விட்டது. இப்படி நழுவி விழும் சொற்களை பிராயிட் parapraxis என்றார். இதை கவனித்து அலசினால் சொல்பவரின் மனதுக்குள் என்ன நடக்கிறது என்பதை நாம் ஊகித்து விடலாம்.

ரஜினியை பற்றி இன்னொரு கேள்வி அவரது பிரவேசம் எப்போது தமிழக அரசியலில் நிகழும் என்பது. ராஜ் பகதூர் விரைவில் நிச்சயமாய் என்பது. அவர் எச்சில் முழுங்கி முணுமுணுத்த வேறு சில சொற்களில் இருந்து இவ்வாறு தொகுக்க முடிகிறது: ரஜினி இப்போது பிஸியாக இருப்பதால், வேறு ஏதோ சொல்ல விரும்பாத காரணங்களாலும் உடனடியாய் அரசியலில் முழுமூச்சாய் செயல்பட மாட்டார். அவை என்ன காரணங்களாக இருக்கும்?
  1. சினிமா. ரஜினி எனும் பந்தயக் குதிரை மீது பல நூறு கோடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர் சும்மா ஒருநாள் முடிவெடுத்து மற்றவர்களைப் போல் அரசியலில் இறங்க முடியாது. அரசியலில் தோற்றால் அவரால் சினிமாவுக்கு திரும்ப முடியாது. அதனால் ஏற்படும் நட்டம் மீட்டெடுக்க முடியாததாக இருக்கும். ஆனால் சினிமா பணிகளை முழுக்க, முடிந்தளவுக்கு மூட்டை கட்டி பரணில் போட்ட பிறகே அவர் அரசியலுக்கு வருவார்.
  2. ஆனால் ரஜினியின் சினிமா பணிகள், சினிமாவில் அவரது வணிக மதிப்பு அப்படி சுலபத்தில் மூட்டை கட்டக் கூடியதா? நிச்சயம் இல்லை. அப்படி எனில் அவர் ரிஸ்க் எடுத்து அரசியல் நுழைவது பொருளாதார ரீதியாய் எப்படி லாபகரமாய், நடைமுறை நியாயம் கொண்டதாய் இருக்கும்? இங்கு தான் அடுத்த காரணம் வருகிறது. அரசியல் அவருக்கு சினிமாவைப் போன்றே மற்றொரு புரோஜெக்டாக இருக்கப் போகிறது. எப்படி?
கமல், ரஜினி, விஜய், விஷால் என வரும் தேர்தலில் நடிகர்களின் பிரவேசம் பெரும் ஆட்டு மந்தை ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்வது போல் இருக்கப் போகிறது. இந்த மந்தையை வழிநடத்தும் அந்த சிறுவன் தான் பாஜக. பாஜகவின் பிரதான நோக்கம் வாக்குகளை பிரித்து சிதறடிப்பது. பெரும்பான்மையுடன் திமுக வெல்லாமல் பார்த்துக் கொள்வது. ஒருவேளை அப்படி நிகழும் எனில், தமிழ் வாக்காளர்கள் சிதறுவார்கள் தேங்காய் சொல்லுகளை பொறுக்கி ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து பாஜக தலைவர் ஒருவரை முதல்வராக்குவார்கள். இதில் இந்த நடிகர்களுக்கு என்ன பயன்?

இதற்கு முந்தையை தேர்தல்களில் இப்போது போல் முன்னணி நடிகர்கள் பங்கு பெற தயாராக இல்லை. ஒன்று, திராவிட கட்சிகள் அதை விரும்பவில்லை. அக்கட்சிகளை பகைத்து சினிமா வாழ்க்கையை அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் இப்போது பாஜகவின் அரசியல் வியூகங்களின் படி செயல்பட்டால் இந்த நடிகர்களுக்கு இழக்க பெரிதாய் ஒன்றும் இருக்காது. ஏனெனில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தான் வெல்லப் போகிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வியூகங்கள் மண்ணைக் கவ்வினாலும் இந்த நடிகர்களுக்கு பெரிய ஆபத்துகள் இருக்காது. மோடியின் தயவு உள்ளவரை அவர்களுக்கு என்று ஒரு தனியான தவிர்க்க முடியாத அதிகார மையம் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும். ஆக அவர்கள் தம் சினிமா வாழ்க்கையை தொடர முடியும். ஆகையால் தான் அரசியலுக்குள் நுழைய விஜயகாந்த், சரத்குமார் போல தம் மவுசு குறைந்து இல்லாமல் ஆகும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

ஆகை அரசியல் என்பது இவர்களுக்கு ஒரு தற்காலிக புரோஜெக்ட் மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் பாஜக அளிக்கும் சில நூறு கோடிகளை வாங்கி பாதியை செலவழித்து விட்டு மீதியை இருப்பில் வைத்துக் கொள்ளலாம். தோற்றாலும் ஜெயித்தாலும் அவர்களுக்கு இறுதியில் லாபமே.


கருத்துகள்

'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு.
vijay இவ்வாறு கூறியுள்ளார்…
.// இந்த மந்தையை வழிநடத்தும் அந்த சிறுவன் தான் பாஜக. பாஜகவின் பிரதான நோக்கம் வாக்குகளை பிரித்து சிதறடிப்பது. பெரும்பான்மையுடன் திமுக வெல்லாமல் பார்த்துக் கொள்வது. ஒருவேளை அப்படி நிகழும் எனில், தமிழ் வாக்காளர்கள் சிதறுவார்கள் தேங்காய் சொல்லுகளை பொறுக்கி ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து பாஜக தலைவர் ஒருவரை முதல்வராக்குவார்கள்//
மிக அருமையான ஓர் எதிர்வு கூறல் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...