Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரஜினிகாந்தும் காவிரி நீரும்

Image result for rajinikanth modi
ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரின் பேட்டியை - வழக்கமான ரஜினி அரசியலுக்கு எப்பத்தான் வருவாருங்க டைப் பேட்டி - சன் டிவியில் பார்த்தேன். ராஜ் பகதூர் டிவியில் அரசியல் பேசி பரிச்சயமற்றவர் ஆகையால் அவரது பேச்சில் அப்பாவித்தனமும், அதனூடே உண்மையும் அவ்வப்போது பளிச்சிட்டது.
 இந்த வகையான பேட்டிகள் இப்போது ஒளிபரப்பாவது முக்கியம். ஏனெனில் ரஜினி கட்சி ஆரம்பித்த பின் பாஜக நியமிக்கும் நேர்த்தியான தந்திரமான பேச்சாளர்கள், தரகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ரஜினியை சூழ்ந்து கொள்வார்கள். கச்சிதமா தந்திரமாய் அவர்கள் பேசுவார்கள். ரஜினி உண்மையில் என்ன தான் யோசிக்கிறார், என்ன தான் பண்ணுகிறார், அவரைச் சுற்றி என்ன தான் நடக்கிறது என நமக்கு தெரியாமல் போகும். ஆனால் ராஜ் பகதூர் போன்றவர்களோ ஒரு கண்ணாடிச் சுவர் போல. அவர் பேசுகையில் அவர் ஊடாக  நாம் நிறைய கவனித்து புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலே எனக்கு இப்பேட்டி பிடித்திருந்தது.

 உ.தா, இப்படி ஒரு கேள்வி:ரஜினி ஒரு அரசியல் தலைவராக இயங்கும் சந்தர்ப்பம் வரும் போது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை வருகிறது. அவர் கர்நாடகத்தின் மண்ணின் மைந்தன், ஆனால் தமிழக மக்களின் பிரதிநிதி. இப்போது அவர் என்ன முடிவெடுப்பார், யாரை ஆதரிப்பார்?” இதற்கு ஒரு பயிற்சி பெற்ற அரசியல் பேச்சாளர்ரஜினி ஒரு தமிழக தலைவராக எப்போதும் தமிழக நலன் சார்ந்து மட்டுமே சிந்திப்பார். அதில் துளியும் ஐயம் கொள்ள அவசியம் இல்லை.என பொதுப்படையாய், ஆனால் பொய்யான, பதிலை அளித்திருப்பார். ஆனால் ராஜ் பகதூர் தன் இதயத்தில் இருந்து, வெளிப்படையாய் இவ்வாறு சொல்கிறார்:இல்லிங்க ரஜினி கர்நாடகாவை சேர்ந்தவர் என்கிறதால அவரால அங்க போய் நமக்காக பேச முடியும்.
உடனே நிருபர் கேட்கிறார்:அப்படீன்னா காவிரி நீர் வாங்கிக் கொடுத்து விடுவாரா?”
ஆமாங்க வாங்கித் தருவார், கொஞ்சமா வாங்கித் தருவார்.

இந்தகொஞ்சமாமுக்கியமான சொல். இது அவரையும் அறியாமல் அவர் வாயில் இருந்து நழுவி விழுந்த சொல். ரஜினி எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பற்றி அவரை நெருக்கமாய் அறிந்த உற்ற நண்பர் ராஜ் பகதூர் என்ன நினைக்கிறார் என நாம் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம். ரஜினி என்ன செய்வார்? அவர் கர்நாடகாவையும் பகைக்க மாட்டார், தமிழகத்துக்காய் துணிச்சலாய் இறங்கவும் மாட்டார். குழம்பிப் போவார். நிறைய யோசிப்பார். இரு தரப்புக்காகவும் இரண்டு பக்கமும் நிறைய பேசுவார். கடைசியில் ஒன்றுமே பண்ண மாட்டார். பூசி மொழுகிக் கொண்டே இருப்பார். தன் நண்பர் இப்படித் தான் பண்ணுவார் என ராஜ் பகதூர் சொல்ல நினைக்கவில்லை. சொல்லவும் மாட்டார். ஆனால் அவர் மனதுக்குள் ரஜினி பற்றி இருக்கக் கூடிய பூடகமான சித்திரம் இருக்கிறது. அதுவே அவரையும் அறியாமல் இங்கே வெளிப்பட்டிருக்கிறது. அவர் வாயில் இருந்து நழுவியகொஞ்சமாகஎனும் சொல் இதை நமக்கு தெளிவாக காட்டி விட்டது. இப்படி நழுவி விழும் சொற்களை பிராயிட் parapraxis என்றார். இதை கவனித்து அலசினால் சொல்பவரின் மனதுக்குள் என்ன நடக்கிறது என்பதை நாம் ஊகித்து விடலாம்.

ரஜினியை பற்றி இன்னொரு கேள்வி அவரது பிரவேசம் எப்போது தமிழக அரசியலில் நிகழும் என்பது. ராஜ் பகதூர் விரைவில் நிச்சயமாய் என்பது. அவர் எச்சில் முழுங்கி முணுமுணுத்த வேறு சில சொற்களில் இருந்து இவ்வாறு தொகுக்க முடிகிறது: ரஜினி இப்போது பிஸியாக இருப்பதால், வேறு ஏதோ சொல்ல விரும்பாத காரணங்களாலும் உடனடியாய் அரசியலில் முழுமூச்சாய் செயல்பட மாட்டார். அவை என்ன காரணங்களாக இருக்கும்?
  1. சினிமா. ரஜினி எனும் பந்தயக் குதிரை மீது பல நூறு கோடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர் சும்மா ஒருநாள் முடிவெடுத்து மற்றவர்களைப் போல் அரசியலில் இறங்க முடியாது. அரசியலில் தோற்றால் அவரால் சினிமாவுக்கு திரும்ப முடியாது. அதனால் ஏற்படும் நட்டம் மீட்டெடுக்க முடியாததாக இருக்கும். ஆனால் சினிமா பணிகளை முழுக்க, முடிந்தளவுக்கு மூட்டை கட்டி பரணில் போட்ட பிறகே அவர் அரசியலுக்கு வருவார்.
  2. ஆனால் ரஜினியின் சினிமா பணிகள், சினிமாவில் அவரது வணிக மதிப்பு அப்படி சுலபத்தில் மூட்டை கட்டக் கூடியதா? நிச்சயம் இல்லை. அப்படி எனில் அவர் ரிஸ்க் எடுத்து அரசியல் நுழைவது பொருளாதார ரீதியாய் எப்படி லாபகரமாய், நடைமுறை நியாயம் கொண்டதாய் இருக்கும்? இங்கு தான் அடுத்த காரணம் வருகிறது. அரசியல் அவருக்கு சினிமாவைப் போன்றே மற்றொரு புரோஜெக்டாக இருக்கப் போகிறது. எப்படி?
கமல், ரஜினி, விஜய், விஷால் என வரும் தேர்தலில் நடிகர்களின் பிரவேசம் பெரும் ஆட்டு மந்தை ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்வது போல் இருக்கப் போகிறது. இந்த மந்தையை வழிநடத்தும் அந்த சிறுவன் தான் பாஜக. பாஜகவின் பிரதான நோக்கம் வாக்குகளை பிரித்து சிதறடிப்பது. பெரும்பான்மையுடன் திமுக வெல்லாமல் பார்த்துக் கொள்வது. ஒருவேளை அப்படி நிகழும் எனில், தமிழ் வாக்காளர்கள் சிதறுவார்கள் தேங்காய் சொல்லுகளை பொறுக்கி ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து பாஜக தலைவர் ஒருவரை முதல்வராக்குவார்கள். இதில் இந்த நடிகர்களுக்கு என்ன பயன்?

இதற்கு முந்தையை தேர்தல்களில் இப்போது போல் முன்னணி நடிகர்கள் பங்கு பெற தயாராக இல்லை. ஒன்று, திராவிட கட்சிகள் அதை விரும்பவில்லை. அக்கட்சிகளை பகைத்து சினிமா வாழ்க்கையை அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் இப்போது பாஜகவின் அரசியல் வியூகங்களின் படி செயல்பட்டால் இந்த நடிகர்களுக்கு இழக்க பெரிதாய் ஒன்றும் இருக்காது. ஏனெனில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தான் வெல்லப் போகிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வியூகங்கள் மண்ணைக் கவ்வினாலும் இந்த நடிகர்களுக்கு பெரிய ஆபத்துகள் இருக்காது. மோடியின் தயவு உள்ளவரை அவர்களுக்கு என்று ஒரு தனியான தவிர்க்க முடியாத அதிகார மையம் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும். ஆக அவர்கள் தம் சினிமா வாழ்க்கையை தொடர முடியும். ஆகையால் தான் அரசியலுக்குள் நுழைய விஜயகாந்த், சரத்குமார் போல தம் மவுசு குறைந்து இல்லாமல் ஆகும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

ஆகை அரசியல் என்பது இவர்களுக்கு ஒரு தற்காலிக புரோஜெக்ட் மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் பாஜக அளிக்கும் சில நூறு கோடிகளை வாங்கி பாதியை செலவழித்து விட்டு மீதியை இருப்பில் வைத்துக் கொள்ளலாம். தோற்றாலும் ஜெயித்தாலும் அவர்களுக்கு இறுதியில் லாபமே.


Comments

vijay said…
.// இந்த மந்தையை வழிநடத்தும் அந்த சிறுவன் தான் பாஜக. பாஜகவின் பிரதான நோக்கம் வாக்குகளை பிரித்து சிதறடிப்பது. பெரும்பான்மையுடன் திமுக வெல்லாமல் பார்த்துக் கொள்வது. ஒருவேளை அப்படி நிகழும் எனில், தமிழ் வாக்காளர்கள் சிதறுவார்கள் தேங்காய் சொல்லுகளை பொறுக்கி ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து பாஜக தலைவர் ஒருவரை முதல்வராக்குவார்கள்//
மிக அருமையான ஓர் எதிர்வு கூறல் .

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...