Skip to main content

ரஜினிகாந்தும் காவிரி நீரும்

Image result for rajinikanth modi
ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரின் பேட்டியை - வழக்கமான ரஜினி அரசியலுக்கு எப்பத்தான் வருவாருங்க டைப் பேட்டி - சன் டிவியில் பார்த்தேன். ராஜ் பகதூர் டிவியில் அரசியல் பேசி பரிச்சயமற்றவர் ஆகையால் அவரது பேச்சில் அப்பாவித்தனமும், அதனூடே உண்மையும் அவ்வப்போது பளிச்சிட்டது.
 இந்த வகையான பேட்டிகள் இப்போது ஒளிபரப்பாவது முக்கியம். ஏனெனில் ரஜினி கட்சி ஆரம்பித்த பின் பாஜக நியமிக்கும் நேர்த்தியான தந்திரமான பேச்சாளர்கள், தரகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ரஜினியை சூழ்ந்து கொள்வார்கள். கச்சிதமா தந்திரமாய் அவர்கள் பேசுவார்கள். ரஜினி உண்மையில் என்ன தான் யோசிக்கிறார், என்ன தான் பண்ணுகிறார், அவரைச் சுற்றி என்ன தான் நடக்கிறது என நமக்கு தெரியாமல் போகும். ஆனால் ராஜ் பகதூர் போன்றவர்களோ ஒரு கண்ணாடிச் சுவர் போல. அவர் பேசுகையில் அவர் ஊடாக  நாம் நிறைய கவனித்து புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலே எனக்கு இப்பேட்டி பிடித்திருந்தது.

 உ.தா, இப்படி ஒரு கேள்வி:ரஜினி ஒரு அரசியல் தலைவராக இயங்கும் சந்தர்ப்பம் வரும் போது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை வருகிறது. அவர் கர்நாடகத்தின் மண்ணின் மைந்தன், ஆனால் தமிழக மக்களின் பிரதிநிதி. இப்போது அவர் என்ன முடிவெடுப்பார், யாரை ஆதரிப்பார்?” இதற்கு ஒரு பயிற்சி பெற்ற அரசியல் பேச்சாளர்ரஜினி ஒரு தமிழக தலைவராக எப்போதும் தமிழக நலன் சார்ந்து மட்டுமே சிந்திப்பார். அதில் துளியும் ஐயம் கொள்ள அவசியம் இல்லை.என பொதுப்படையாய், ஆனால் பொய்யான, பதிலை அளித்திருப்பார். ஆனால் ராஜ் பகதூர் தன் இதயத்தில் இருந்து, வெளிப்படையாய் இவ்வாறு சொல்கிறார்:இல்லிங்க ரஜினி கர்நாடகாவை சேர்ந்தவர் என்கிறதால அவரால அங்க போய் நமக்காக பேச முடியும்.
உடனே நிருபர் கேட்கிறார்:அப்படீன்னா காவிரி நீர் வாங்கிக் கொடுத்து விடுவாரா?”
ஆமாங்க வாங்கித் தருவார், கொஞ்சமா வாங்கித் தருவார்.

இந்தகொஞ்சமாமுக்கியமான சொல். இது அவரையும் அறியாமல் அவர் வாயில் இருந்து நழுவி விழுந்த சொல். ரஜினி எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பற்றி அவரை நெருக்கமாய் அறிந்த உற்ற நண்பர் ராஜ் பகதூர் என்ன நினைக்கிறார் என நாம் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம். ரஜினி என்ன செய்வார்? அவர் கர்நாடகாவையும் பகைக்க மாட்டார், தமிழகத்துக்காய் துணிச்சலாய் இறங்கவும் மாட்டார். குழம்பிப் போவார். நிறைய யோசிப்பார். இரு தரப்புக்காகவும் இரண்டு பக்கமும் நிறைய பேசுவார். கடைசியில் ஒன்றுமே பண்ண மாட்டார். பூசி மொழுகிக் கொண்டே இருப்பார். தன் நண்பர் இப்படித் தான் பண்ணுவார் என ராஜ் பகதூர் சொல்ல நினைக்கவில்லை. சொல்லவும் மாட்டார். ஆனால் அவர் மனதுக்குள் ரஜினி பற்றி இருக்கக் கூடிய பூடகமான சித்திரம் இருக்கிறது. அதுவே அவரையும் அறியாமல் இங்கே வெளிப்பட்டிருக்கிறது. அவர் வாயில் இருந்து நழுவியகொஞ்சமாகஎனும் சொல் இதை நமக்கு தெளிவாக காட்டி விட்டது. இப்படி நழுவி விழும் சொற்களை பிராயிட் parapraxis என்றார். இதை கவனித்து அலசினால் சொல்பவரின் மனதுக்குள் என்ன நடக்கிறது என்பதை நாம் ஊகித்து விடலாம்.

ரஜினியை பற்றி இன்னொரு கேள்வி அவரது பிரவேசம் எப்போது தமிழக அரசியலில் நிகழும் என்பது. ராஜ் பகதூர் விரைவில் நிச்சயமாய் என்பது. அவர் எச்சில் முழுங்கி முணுமுணுத்த வேறு சில சொற்களில் இருந்து இவ்வாறு தொகுக்க முடிகிறது: ரஜினி இப்போது பிஸியாக இருப்பதால், வேறு ஏதோ சொல்ல விரும்பாத காரணங்களாலும் உடனடியாய் அரசியலில் முழுமூச்சாய் செயல்பட மாட்டார். அவை என்ன காரணங்களாக இருக்கும்?
  1. சினிமா. ரஜினி எனும் பந்தயக் குதிரை மீது பல நூறு கோடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர் சும்மா ஒருநாள் முடிவெடுத்து மற்றவர்களைப் போல் அரசியலில் இறங்க முடியாது. அரசியலில் தோற்றால் அவரால் சினிமாவுக்கு திரும்ப முடியாது. அதனால் ஏற்படும் நட்டம் மீட்டெடுக்க முடியாததாக இருக்கும். ஆனால் சினிமா பணிகளை முழுக்க, முடிந்தளவுக்கு மூட்டை கட்டி பரணில் போட்ட பிறகே அவர் அரசியலுக்கு வருவார்.
  2. ஆனால் ரஜினியின் சினிமா பணிகள், சினிமாவில் அவரது வணிக மதிப்பு அப்படி சுலபத்தில் மூட்டை கட்டக் கூடியதா? நிச்சயம் இல்லை. அப்படி எனில் அவர் ரிஸ்க் எடுத்து அரசியல் நுழைவது பொருளாதார ரீதியாய் எப்படி லாபகரமாய், நடைமுறை நியாயம் கொண்டதாய் இருக்கும்? இங்கு தான் அடுத்த காரணம் வருகிறது. அரசியல் அவருக்கு சினிமாவைப் போன்றே மற்றொரு புரோஜெக்டாக இருக்கப் போகிறது. எப்படி?
கமல், ரஜினி, விஜய், விஷால் என வரும் தேர்தலில் நடிகர்களின் பிரவேசம் பெரும் ஆட்டு மந்தை ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்வது போல் இருக்கப் போகிறது. இந்த மந்தையை வழிநடத்தும் அந்த சிறுவன் தான் பாஜக. பாஜகவின் பிரதான நோக்கம் வாக்குகளை பிரித்து சிதறடிப்பது. பெரும்பான்மையுடன் திமுக வெல்லாமல் பார்த்துக் கொள்வது. ஒருவேளை அப்படி நிகழும் எனில், தமிழ் வாக்காளர்கள் சிதறுவார்கள் தேங்காய் சொல்லுகளை பொறுக்கி ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து பாஜக தலைவர் ஒருவரை முதல்வராக்குவார்கள். இதில் இந்த நடிகர்களுக்கு என்ன பயன்?

இதற்கு முந்தையை தேர்தல்களில் இப்போது போல் முன்னணி நடிகர்கள் பங்கு பெற தயாராக இல்லை. ஒன்று, திராவிட கட்சிகள் அதை விரும்பவில்லை. அக்கட்சிகளை பகைத்து சினிமா வாழ்க்கையை அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் இப்போது பாஜகவின் அரசியல் வியூகங்களின் படி செயல்பட்டால் இந்த நடிகர்களுக்கு இழக்க பெரிதாய் ஒன்றும் இருக்காது. ஏனெனில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தான் வெல்லப் போகிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வியூகங்கள் மண்ணைக் கவ்வினாலும் இந்த நடிகர்களுக்கு பெரிய ஆபத்துகள் இருக்காது. மோடியின் தயவு உள்ளவரை அவர்களுக்கு என்று ஒரு தனியான தவிர்க்க முடியாத அதிகார மையம் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும். ஆக அவர்கள் தம் சினிமா வாழ்க்கையை தொடர முடியும். ஆகையால் தான் அரசியலுக்குள் நுழைய விஜயகாந்த், சரத்குமார் போல தம் மவுசு குறைந்து இல்லாமல் ஆகும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

ஆகை அரசியல் என்பது இவர்களுக்கு ஒரு தற்காலிக புரோஜெக்ட் மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் பாஜக அளிக்கும் சில நூறு கோடிகளை வாங்கி பாதியை செலவழித்து விட்டு மீதியை இருப்பில் வைத்துக் கொள்ளலாம். தோற்றாலும் ஜெயித்தாலும் அவர்களுக்கு இறுதியில் லாபமே.


Comments

vijay said…
.// இந்த மந்தையை வழிநடத்தும் அந்த சிறுவன் தான் பாஜக. பாஜகவின் பிரதான நோக்கம் வாக்குகளை பிரித்து சிதறடிப்பது. பெரும்பான்மையுடன் திமுக வெல்லாமல் பார்த்துக் கொள்வது. ஒருவேளை அப்படி நிகழும் எனில், தமிழ் வாக்காளர்கள் சிதறுவார்கள் தேங்காய் சொல்லுகளை பொறுக்கி ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து பாஜக தலைவர் ஒருவரை முதல்வராக்குவார்கள்//
மிக அருமையான ஓர் எதிர்வு கூறல் .

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...