அபிலாஷ் மொழிபெயர்த்து தொடர்ந்து இங்கு பதிந்துவரும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைக் கவனித்து யாரேனும் எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. சிறப்பான மொழிபெயர்ப்பு. மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் லயத்தைப் பற்றிக்கொண்டு ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்ப்பது ஒரு சுகானுபவம். மொழிபெயர்ப்பிலும் அவை முழுமை குன்றாத பிரதிகளாக வருவதைக் காண்பது நிறைவு. இதனால் இம்மொழிபெயர்ப்புகள் எளிதானவை எனப் பொருளாகாது. மனுஷ்யபுத்திரனின் ‘சிக்னேச்சர்’ தமிழ்ப் பதங்களுக்கு நேரான ஆங்கில வார்த்தைகளுக்காக சிலநேரம் நின்று தவமிருக்க வேண்டியிருக்கும். மனுஷ்யபுத்திரனின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு செம்பதிப்பாக இந்திய அளவில் கொண்டு செல்லப்படுமானால் தமிழ்க்கவிதைகளின் செறிவானதொரு பக்கத்தை இந்திய இலக்கிய உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். பாராட்டுகள் அபிலாஷ்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்