முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்


Image result for india england test
மூன்றாவது டெஸ்டில் இந்தியா முதலில் மட்டையாடி 307 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் இழந்துள்ளது. இதுவரையிலும் இந்தியா தடுமாறி ரொம்ப கேவலமாய் சொதப்பி வந்துள்ளதைப் பார்த்தவர்கள் இந்த ஸ்கோரைக் கண்டு சபாஷ் என சொல்லலாம். ஆனால், இந்த ஆடுதளம் சற்றே மெத்தனமானது. இதில் முன்னூற்று சொச்சம் நல்ல ஸ்கோர் அல்ல. நாளைக் காலை இந்தியா மளமளவென விக்கெட்டுகளை தியாகம் செய்து ஆல் அவுட் ஆனால் ஆட்டத்தில் தோற்பது உறுதி. 
இந்தியா எந்தெந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

1) ஹர்த்திக் பாண்டியா இன்னும் சரளமாய் ஆட வேண்டும். தன் இயல்பை முழுக்க மாற்றாமல் ஆட வேண்டும். அவர் இப்போதைக்கு புஜாரா பாணியில் ஆட முயல்கிறார். அதிக ரிஸ்க் எடுக்காமல் சம்பிரதாயமாய் ஆடி அரை சதம் அடித்து விட்டு ஆக்ரோசமாய் ஆடலாம் என நினைக்கிறார். ஆனால் அவருக்கு இரு சிக்கல்கள். அ) அப்படி ஆடுவதற்கான தொழில்நுட்பத் திறன் அவருக்கு இல்லை. ஆக, தன் இயல்புக்கு மாறாய் ஆடும் போது அவர் 50% குறைபட்ட வீரராக மாறுகிறார். மாறாக அவர் வந்ததுமே முதல் முப்பது பந்துகளை அடித்தாடினார் என்றால் ஒரு நல்ல பந்துக்கு அவர் வீழும் போது குறைந்தது 40-50 அடித்திருப்பார். அவர் பந்து வீச்சாளர்களுடன் அதிகமும் ஆட வேண்டி இருப்பதால் பாஸிட்டாக ஆடுவது அவசியம்.


2) இந்த டெஸ்டில் குறைந்தது 400வது அடிக்காவிட்டால் ரிஸ்க். நாளை காலை பாண்ட் அடித்தாட வேண்டும்; அல்லாவிடில் இந்தியா 330க்கு ஆல் அவுட் ஆகி விடும்.


3) இந்த ஆடுதளத்தில் ஆண்டர்ஸன் மற்றும் பிராட் தாம் வீசும் 30 பந்துகளில் 5 பந்துகளாவது விக்கெட் எடுக்கும் பந்துகளாக வீசுவார்கள். இந்த ஐந்தில் பேட்ஸ்மேன் எட்ஜ் கொடுத்து விட வாய்ப்பதிகம். ஆக இந்திய தொடர்ந்து தடுத்தாடிக் கொண்டே இருப்பது அடித்தாடுவதை விட ஆபத்தானது.


4) மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களின் போது short of the lengthஇல் பந்து சற்று தாழ்வாக வரும். அப்போது எல்.பி.டபுள்யோ, டிராக் ஆன், அண்டர் எட்ஜ் ஆகிய முறைகளில் அதிக விக்கெட்டுகள் விழும். சுழலர்களும் ஜொலிப்பார்கள். ஆக முதல் இன்னிங்ஸில் இந்தியா 330க்கு சுருண்டு விட்டால் இங்கிலாந்து அதைத் தொடர்ந்து நன்றாய் மட்டையாடி 120 லீட் பெற்று விட்டால் ரெண்டாவது இன்ங்க்ஸில் இந்தியா 270க்கு ஆல் அவுட் ஆக வாய்ப்பதிகம். இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 120-140 இலக்கை அடைய வேண்டும் எனும் நிலை வந்தால் சற்று நெருக்கடியுடன் அதை அடைந்து விடுவார்கள். ஆக, முதல் இன்னிங்ஸ் தான் இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...