மூன்றாவது டெஸ்டில் இந்தியா முதலில் மட்டையாடி 307 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் இழந்துள்ளது. இதுவரையிலும் இந்தியா தடுமாறி ரொம்ப கேவலமாய் சொதப்பி வந்துள்ளதைப் பார்த்தவர்கள் இந்த ஸ்கோரைக் கண்டு சபாஷ் என சொல்லலாம். ஆனால், இந்த ஆடுதளம் சற்றே மெத்தனமானது. இதில் முன்னூற்று சொச்சம் நல்ல ஸ்கோர் அல்ல. நாளைக் காலை இந்தியா மளமளவென விக்கெட்டுகளை தியாகம் செய்து ஆல் அவுட் ஆனால் ஆட்டத்தில் தோற்பது உறுதி.
இந்தியா எந்தெந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?
1) ஹர்த்திக் பாண்டியா இன்னும் சரளமாய் ஆட வேண்டும்.
தன் இயல்பை முழுக்க மாற்றாமல் ஆட வேண்டும். அவர் இப்போதைக்கு புஜாரா பாணியில் ஆட
முயல்கிறார். அதிக ரிஸ்க் எடுக்காமல் சம்பிரதாயமாய் ஆடி அரை சதம் அடித்து விட்டு
ஆக்ரோசமாய் ஆடலாம் என நினைக்கிறார். ஆனால் அவருக்கு இரு சிக்கல்கள். அ) அப்படி
ஆடுவதற்கான தொழில்நுட்பத் திறன் அவருக்கு இல்லை. ஆக, தன்
இயல்புக்கு மாறாய் ஆடும் போது அவர் 50% குறைபட்ட வீரராக
மாறுகிறார். மாறாக அவர் வந்ததுமே முதல் முப்பது பந்துகளை அடித்தாடினார் என்றால்
ஒரு நல்ல பந்துக்கு அவர் வீழும் போது குறைந்தது 40-50 அடித்திருப்பார்.
அவர் பந்து வீச்சாளர்களுடன் அதிகமும் ஆட வேண்டி இருப்பதால் பாஸிட்டாக ஆடுவது
அவசியம்.
2) இந்த டெஸ்டில் குறைந்தது 400வது அடிக்காவிட்டால் ரிஸ்க். நாளை காலை பாண்ட் அடித்தாட வேண்டும்; அல்லாவிடில் இந்தியா 330க்கு ஆல் அவுட் ஆகி விடும்.
3) இந்த ஆடுதளத்தில் ஆண்டர்ஸன் மற்றும் பிராட் தாம்
வீசும் 30 பந்துகளில் 5 பந்துகளாவது
விக்கெட் எடுக்கும் பந்துகளாக வீசுவார்கள். இந்த ஐந்தில் பேட்ஸ்மேன் எட்ஜ்
கொடுத்து விட வாய்ப்பதிகம். ஆக இந்திய தொடர்ந்து தடுத்தாடிக் கொண்டே இருப்பது
அடித்தாடுவதை விட ஆபத்தானது.
4) மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களின் போது short
of the lengthஇல் பந்து சற்று தாழ்வாக வரும். அப்போது
எல்.பி.டபுள்யோ, டிராக் ஆன், அண்டர்
எட்ஜ் ஆகிய முறைகளில் அதிக விக்கெட்டுகள் விழும். சுழலர்களும் ஜொலிப்பார்கள். ஆக
முதல் இன்னிங்ஸில் இந்தியா 330க்கு சுருண்டு விட்டால்
இங்கிலாந்து அதைத் தொடர்ந்து நன்றாய் மட்டையாடி 120 லீட்
பெற்று விட்டால் ரெண்டாவது இன்ங்க்ஸில் இந்தியா 270க்கு ஆல்
அவுட் ஆக வாய்ப்பதிகம். இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 120-140 இலக்கை அடைய வேண்டும் எனும் நிலை வந்தால் சற்று நெருக்கடியுடன் அதை
அடைந்து விடுவார்கள். ஆக, முதல் இன்னிங்ஸ் தான் இந்தியாவின்
தலைவிதியை தீர்மானிக்கும்.
Comments