முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்


Image result for india england test
மூன்றாவது டெஸ்டில் இந்தியா முதலில் மட்டையாடி 307 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் இழந்துள்ளது. இதுவரையிலும் இந்தியா தடுமாறி ரொம்ப கேவலமாய் சொதப்பி வந்துள்ளதைப் பார்த்தவர்கள் இந்த ஸ்கோரைக் கண்டு சபாஷ் என சொல்லலாம். ஆனால், இந்த ஆடுதளம் சற்றே மெத்தனமானது. இதில் முன்னூற்று சொச்சம் நல்ல ஸ்கோர் அல்ல. நாளைக் காலை இந்தியா மளமளவென விக்கெட்டுகளை தியாகம் செய்து ஆல் அவுட் ஆனால் ஆட்டத்தில் தோற்பது உறுதி. 
இந்தியா எந்தெந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

1) ஹர்த்திக் பாண்டியா இன்னும் சரளமாய் ஆட வேண்டும். தன் இயல்பை முழுக்க மாற்றாமல் ஆட வேண்டும். அவர் இப்போதைக்கு புஜாரா பாணியில் ஆட முயல்கிறார். அதிக ரிஸ்க் எடுக்காமல் சம்பிரதாயமாய் ஆடி அரை சதம் அடித்து விட்டு ஆக்ரோசமாய் ஆடலாம் என நினைக்கிறார். ஆனால் அவருக்கு இரு சிக்கல்கள். அ) அப்படி ஆடுவதற்கான தொழில்நுட்பத் திறன் அவருக்கு இல்லை. ஆக, தன் இயல்புக்கு மாறாய் ஆடும் போது அவர் 50% குறைபட்ட வீரராக மாறுகிறார். மாறாக அவர் வந்ததுமே முதல் முப்பது பந்துகளை அடித்தாடினார் என்றால் ஒரு நல்ல பந்துக்கு அவர் வீழும் போது குறைந்தது 40-50 அடித்திருப்பார். அவர் பந்து வீச்சாளர்களுடன் அதிகமும் ஆட வேண்டி இருப்பதால் பாஸிட்டாக ஆடுவது அவசியம்.


2) இந்த டெஸ்டில் குறைந்தது 400வது அடிக்காவிட்டால் ரிஸ்க். நாளை காலை பாண்ட் அடித்தாட வேண்டும்; அல்லாவிடில் இந்தியா 330க்கு ஆல் அவுட் ஆகி விடும்.


3) இந்த ஆடுதளத்தில் ஆண்டர்ஸன் மற்றும் பிராட் தாம் வீசும் 30 பந்துகளில் 5 பந்துகளாவது விக்கெட் எடுக்கும் பந்துகளாக வீசுவார்கள். இந்த ஐந்தில் பேட்ஸ்மேன் எட்ஜ் கொடுத்து விட வாய்ப்பதிகம். ஆக இந்திய தொடர்ந்து தடுத்தாடிக் கொண்டே இருப்பது அடித்தாடுவதை விட ஆபத்தானது.


4) மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களின் போது short of the lengthஇல் பந்து சற்று தாழ்வாக வரும். அப்போது எல்.பி.டபுள்யோ, டிராக் ஆன், அண்டர் எட்ஜ் ஆகிய முறைகளில் அதிக விக்கெட்டுகள் விழும். சுழலர்களும் ஜொலிப்பார்கள். ஆக முதல் இன்னிங்ஸில் இந்தியா 330க்கு சுருண்டு விட்டால் இங்கிலாந்து அதைத் தொடர்ந்து நன்றாய் மட்டையாடி 120 லீட் பெற்று விட்டால் ரெண்டாவது இன்ங்க்ஸில் இந்தியா 270க்கு ஆல் அவுட் ஆக வாய்ப்பதிகம். இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 120-140 இலக்கை அடைய வேண்டும் எனும் நிலை வந்தால் சற்று நெருக்கடியுடன் அதை அடைந்து விடுவார்கள். ஆக, முதல் இன்னிங்ஸ் தான் இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...