முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Metooவும் மத-ஒழுக்கவாதிகளும்: அப்பாலே போ சாத்தானே! (2)


Image result for metoo india

செக்ஸை ஒரு ஒடுக்குமுறை ஆயுதமாய் பார்க்கும் நோக்கு பெண்ணியத்தை ஒழுக்கவாதிகளின் அணியில் கொண்டு சேர்த்தது. ஒழுக்க யுத்தத்தில் விக்டோரிய தலைமுறையினர் செயல்பட்டது போன்றே அமெரிக்காவில் எழுபது, எண்பதுகளில் பெண்ணியவாதிகள் நடந்து கொண்டனர். அவர்கள் போர்னோகிரபியை தடை செய்ய கோரினர்; விபச்சாரத்தை முடக்க போராடினர். திறந்தவெளி செக்ஸ், ஓரின செக்ஸ் ஆகியவற்றை எதிர்த்தனர். இதை இரண்டாம் அலை பெண்ணியத்தின் செக்ஸ் யுத்தம் என அழைக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பெண்ணியம் இரண்டாய் பிரிந்ததுநேர்மறை-செக்ஸ் பெண்ணியவாதிகள் மற்றும் போர்னோகிராபி-எதிர்ப்பு பெண்ணியவாதிகள். நேர்மறை-செக்ஸ் பெண்ணியவாதிகள் போர்னோகிராபியை ஒரு மாற்று பாலியல் வழியாய், விபச்சாரத்தை ஒரு பாலியல் தொழிலாய், தனிமனித உரிமையாய் அவர்கள் கண்டனர். ஆனால் போர்னோகிரபி-எதிர்ப்பு பெண்ணிவாதிகளோ போர்னோ மற்றும் பாலியல் தொழிலை பெண்ணுடல் மீது செலுத்தப்படும் ஆணாதிக்க ஒடுக்குமுறையாய், வன்முறையாய் மட்டுமே கண்டனர்.


சுவாரஸ்யமாய், குடும்ப அமைப்புக்குள் பெண்கள் கிட்டத்தட்ட பாலியல் தொழிலாளியாய் நடத்தப்படுவதுண்டு; எத்தனையோ பெண்கள் விருப்பமற்று பாலுறவில் ஈடுபடுவதும், கணவனின் பார்வை இச்சைக்கு தம் உடலை விருந்தாக்குவதும், தொடர்ந்து குழந்தைப் பேறில் ஈடுபடுவதும் காலங்காலமாய் நடந்து வரும் ஒன்று. தாம்பத்யத்திலும் பெண்ணுடல் ஒரு துய்ப்புக் கருவி தானே. ஏன் பெண்ணியவாதிகள் தாம்பத்ய பாலுறவுக்கு, குழந்தைப்பேறுக்கு எதிராய் கிளர்ந்தெழுந்து போராட்டங்கள் நடத்துவதில்லை? தாம்பத்ய பாலுறவு பெண்ணின் விருப்பத்துடன் நடைபெறுகிறது என ஒரு பெண்ணிவாதி வாதிட்டால், அதையே நாம் விபச்சாரத்துக்கும் சொல்லலாம் தானே என திரும்ப கேட்க முடியும். விபச்சாரம் அடிப்படையில் ஆணின் துய்ப்புக்கானவளாய் பெண்ணை அடையாளப்படுத்துகிறது என்பதே போர்னோ-எதிர்ப்பு பெண்ணியத்தின் பிரதான வாதம். இதே காரணத்துக்காகவே அவர்கள் strip club, sadomasochism ஆகியவற்றையும் எதிர்க்கிறார்கள். நேர்மறை-செக்ஸ் பெண்ணியவாதிகளோ விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் அதை வன்முறையற்றதாய், பாதுகாப்பானதாய் மாற்றலாமே என வாதிட்டார்கள். ஆனால் விபச்சாரம் என்பது போர்னோ-எதிர்ப்பு சாராருக்கு ஒரு அருவருக்கத்தக்க விசயமாகவே எண்பதுகள் வரை தொடர்ந்தது.
அமெரிக்காவில் பெண்ணியத்துக்கும் மதவாத ஒழுக்கவியலுக்குமான தொடர்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே துவங்கி விட்டது. அமெரிக்க பெண்களை பெருமளவில் பால் சமத்துவத்துக்கான போராட்ட களத்திற்கு வரவழைத்தது The Women’s Christian Temperance Union என்ற அமைப்பு. Temperance என்றால் மது, மாது, இறைச்சி ஆகியவற்றை அன்றாட வாழ்வில் தவிர்ப்பது. கிறித்துவ மத நோன்பாக இதைப் பார்க்கிறார்கள். ஆண்கள் மிதமிஞ்சி மதுவருந்துவது குடும்பத்துக்கும் பெண் நலனுக்கும் கேடானது எனும் பார்வையின் அடிப்படையில் மதுவை தடை செய்யக் கோரி Temperance Union அமைப்பு அமெரிக்கா முழுக்க பெண்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தியது. இந்த கிறித்துவ அமைப்பின் போராட்டங்களே பின்னர் ரேடிக்கல் பெண்ணியத்தின் எழுச்சிக்கு வழிகோலியது, முறைமையை ஏற்படுத்திக் கொடுத்தது என்கிறார்கள் அறிஞர்கள்.
 பெண்களுக்கான ஓட்டுரிமைக்காய் இந்த Temperance அமைப்பு போராட வேண்டுமென கோரிக்கை எழுந்த போது அதை ஆரம்பத்தில் அந்த அமைப்பினர் மறுத்தனர். பெண் உரிமை, பெண் சமத்துவம் ஆகியவற்றை ஆண்-பெண் உறவு, குடும்பம் ஆகிய கட்டமைப்புகளைத் தாண்டி சிந்திக்க இந்த ஆரம்ப கட்ட பெண்ணிய போராளிகளுக்கு பெரும் தயக்கம் இருந்ததை முக்கிய பெண்ணியவாதியான சூசன் பலூதி சுட்டிக் காட்டுகிறார்.
 மதவாதிகளுக்கும் பெண்ணியவாதிகளுக்குமான இந்த கைகோர்ப்பு தற்சமயம் வேறு வடிவம் எடுத்துள்ளது: ஆண்களை சாத்தான் என்றும் பெண்களை ஆண்களால் ஏமாற்றப்பட்டு ஏய்க்கப்படும் தேவதைகளாகப் பார்ப்பதும் இன்று வரை metoo இயக்கத்தில் தொடர்வதை சூசன் பலூதி உணர்த்துகிறார் (“The Patriarchs are Falling. The Patriarchy is Stronger than Ever” கட்டுரையில்). சாத்தான்சாத்தானால் வீழ்த்தப்பட்ட ஏவாள் எனும் இருமை கிறுத்துவத்துக்கே உரித்தான ஒன்று. இன்று பெண்ணியவாதம் பரந்துபட்ட அரசியல் சமூக போராட்டங்களாக மலர்வதற்கு, அனைத்து மக்கள் தரப்பினரையும் உள்ளடக்கிய சமூக சீர்திருத்தங்களை நோக்கி ஒரு விரிவான களத்தில் வளர்வதற்கு இந்த இருமை தடையாக உள்ளதை அவர் சுட்டுகிறார். உதாரணமாய், டிரம்பின் அரசாங்கம் அமெரிக்காவில் பெண்களுக்கான வரிச்சலுகைகளை ரத்து செய்துள்ளதை எதிர்த்து ஏங்கல் மற்றும் டிஸ்லர் எனும் போராளிகள் தம்மை போர்ட் நிறுவன அலுவலக வாயிலில் தம்மை சங்கிலியால் பிணைத்து போராடினர். ஆனால் metoo வெளிப்பாடுகளுக்கு கிடைக்கும் கவனத்தில் 10% கூட இவர்களுக்கு கிடைக்கவில்லை. பல கோடிப் பெண்களை இந்த சலுகை ரத்து அடிவயிற்றில் அடிக்கப் போகிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத அரசியல் பொருளாதார எதிரியை எதிர்ப்பதில் பெண்ணியவாதிகளுக்கு பெரிய ஆர்வம் இல்லை. நேரடியான எளிய ஆண் இலக்குகளே அவர்களுக்கு சௌகர்யமாக உள்ளது. ஆணாதிக்கவாதம் என்பதை ஆண்கள் என சுருக்கிக் காண்பது பெண்ணிய அமைப்புகளுக்குபோர் போர் போர்என முழக்கமிடவும், பெரும் ஆதரவாளர் படையை திரட்டவும் சுலபமாக உள்ளது. ஆனால் சாத்தான் vs ஏவாள் எனும் கிறுத்துவ உருவகத்தை விட்டு வெளியே வராத வரையில் பெண்ணிய போராட்டம் ஆணாதிக்கவாதத்தை முறியடிக்க இயலாது என்கிறார் சூசன் பலூதா. அமெரிக்காவில் டிரம்புக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் ஜனாதிபதி பதவிக்கான போட்டி நிலவிய போது சில பெண்ணியவாதிகள் ஹிலாரியை ஒரு சுவாரஸ்யமான காரணத்துக்காக கடுமையாய் எதிர்த்தார்கள்: கிளிண்டனின் பாலியல் மீறல்கள், கள்ள உறவு குறித்த சர்ச்சைகளின் போது ஹிலாரி கிளிண்டனை கடுமையாய் எதிர்த்து விவாகரத்து செய்திருக்க வேண்டும், மாறாக அவர் கிளிண்டனை மன்னித்து ஏற்றிருக்கக் கூடாது, சமரசம் பண்ணியிருக்கக் கூடாது என இந்த ரேடிக்கல் பெண்ணியவாதிகள் கருதினார்கள். ஏன் அப்படி நினைத்தார்கள்?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...