Skip to main content

சிகரெட் புகைக்கும் பெண் (5)


Related image
இன்றைய பெண்களும் சிகரெட்டும்
பெண்களுக்கும் சிகரெட்டுக்குமான உறவு இரு முகங்கள் கொண்டது:
1)   நான் சென்னையில் மாணவிகள் புகைத்து பார்த்ததில்லை. ஆனால் வேலைக்குப் போகும் இளம் பெண்கள் சாலையில் நின்று சிலாக்கியமாய் சிகரெட் ஊதுவைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அப்போது எனக்கு சில விசயங்கள் பட்டன. ஒரு பெண் சிகரெட் புகைப்பது அவளை முரட்டுத்தனமாய், ஆண்மை கொண்டவளாய் காட்டுவதில்லை. கற்பனையில் நாம் அப்படியே நினைத்தாலும் நிஜத்தில் சிகரெட் புகைக்கும் பெண் அழகானவள். அதற்கு பெண்களின் சிகரெட்டின் நீளமும் நளினமும் அவர்கள் சிகரெட்டை கையில் வைத்திருக்கும் தோரணையும் ஒரு காரணம். இப்பெண்கள் நன்றாய் மேக் அப் செய்து தம்மை வசீகரமாய் காட்டக் கூடியவர்கள். லிப்ஸ்டிக் உதடுகள் நடுவே மெல்ல புகையும் அந்த நீள சிகரெட் ஒரு ப்ளோ ஜாப் பிம்பமாய் ஒரு ஆணுக்கு உருமாறுகிறது; இதை அவன் நேரடியாய் கற்பனை பண்ணாமல் இருப்பான். அது அவனுக்கு சற்று விகாரமானது. தான் ரசித்து நேசிக்கும் பெண்ணை அவ்வாறு ஒரு போர்ன் நடிகையாய் பார்ப்பதை விட ரொமாண்டிக்காய் காணவே அவன் விரும்புவான். ஆனால் சிகரெட்டை மெதுவாய் இழுத்து அவள் ஊதுகையில் அக்காட்சிக்கு பின்னணியில் ப்ளோஜாப் காட்சி அவனது பிரக்ஞை மனத்துக்கு வெகு கீழே நிகழ்கிறது (சிகரெட் குறியாகவும் புகை விந்தாகவும் மாறுகிறது). அதுவே ஒரு பெண் சிகரெட் புகைப்பதை கிளர்ச்சியாய் அவனுக்கு மாற்றுகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கையில் ஒரு மத்திய வயது நண்பர் எனக்கிருந்தார். ரொம்பவும் அப்பிராணி. பெண்களை தலை தூக்கிப் பார்த்து பேச மாட்டார். காபி, சிகரெட் பழக்கம் இல்லை. ஆனால் மாலையில் பிரேக் நேரத்தில் அவர் பேருந்து நிறத்தத்தில் வரும் ஒன்றிரண்டு பெண்கள் சிகரெட் இழுப்பதை காண்பதற்காக செல்வார். நான் ஒருநாள் ரகசியமாய் விசாரிக்கையில் அவர் தனக்கு அக்காட்சி ஏன் ஈர்க்கிறது என்பதற்கு மேற்கண்டவாறு சொன்னார். அவர் வெளிப்படையாய் சொன்னதே என் ஆழ்மனமும் அந்நாள் வரை உணர்ந்திருக்கிறது என்பதை நான் அப்போது புரிந்து கொண்டேன்.

2)   நான் பெங்களூர் வந்த பின் ஆணின் அதே எதிர்நிலை மனப்பான்மையுடன், சமூகத்தின் முகத்தில் காறி உமிழ்கிற தோரணையில் சிகரெட் பிடிக்கும் இளம் பெண்களையும் கண்டேன். இவர்களுக்கு சிகரெட் என்பது அழகையும் ஸ்டைலையும் சுட்டும் ஒரு வஸ்து அல்ல. சிகரெட் இவர்களுக்கு தேநீர் போல. மனத்துக்கு தெம்பளிக்கும் இறுக்கத்தை தளர்த்தும் ஒரு மென்-போதைப் பொருள். இத்தகைய மேற்தட்டு மற்றும் உயர் மேற்தட்டுப் பெண்களின் சிகரெட் பழக்கம் கவர்ச்சியானது மட்டுமல்ல, அது கவர்ச்சியற்றதும், பெண்மை நளினத்தை மறுக்கக் கூடியதும் தான். இவர்களை அங்கீகரிக்கும் பொருட்டே பிக்பாஸ்வீட்டில் பொதுவான புகை பிடிக்கும் அறையொன்றை வைத்திருக்கிறார்கள். பெண்கள் புகை பிடிப்பதை இந்நிகழ்ச்சியில் காட்டுவதில்லை என்றாலும், ஸ்மோக்கிங் ரூமில் இருந்து அவர்களின் பேசும் வம்பு, அரட்டைகளை ஒலிபரப்பி தமிழ் ஊடகங்களில் முதன் முறையாய் பெண்கள் அன்றாடம் சிகரெட் பிடிப்பார்கள், தலைப்பின்னிக் கொண்டும், குழாயில் நீர் பிடிப்பதபடியும் மட்டுமல்ல, சிகரெட் ஊதியபடியும் தான் வம்பு பேசுவார்கள், இதில் விநோதமோ கலாச்சார விரோதமோ ஒன்றுமில்லை என மறைமுகமாய் சுட்டிக் காட்டியது விஜய் டி.வி. இந்த பெண்களை நான் எண்பதுகளின் கலகக்கார ரஜினி பிம்பத்துக்கு அருகில் கொண்டு வைப்பேன்.

சிகரெட் எப்படி ஒரு சுதந்திர, கலக, எதிர்ப்பண்பாட்டு குறியீடானது?
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சிக்ரெட் புகைக்கும் பழக்கம் பரவலானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான். முதல் உலகப்போருடன் இது உச்சம் பெறுகிறது. அப்போது இருந்த சித்திரம் சிகரெட் என்பது ஆண்மையின், ஆண் ஆதிக்கத்தின், துணிச்சலின் குறியீடு. ராணுவ வீர்ர்கள் புகைக்கும் பிம்பமானது அப்போது வலுப்பெற்றது. பெண்களும் புகைத்தார்கள்ஆனால் அவர்கள் மேற்தட்டை சேர்ந்த, ஆணுக்கு இணையாய் தம் சுதந்திரத்தை பேண விரும்பிய சீமாட்டிகள்; 1920-40களில் சிகரெட் நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிகழ்ந்த ஒரு முக்கிய மாற்றத்தை கவனித்தனஉலகப்போரில் ஆண்கள் கணிசமாய் உயிரிழக்க மத்திய வர்க்க பெண்கள் பலர் தனியார் நிறுவனங்களில் அதுவரை ஆண்கள் வகித்து வந்த பணிகளில் அமர்ந்தனர். இது பெண்களுக்கு பொருளாதார ரீதியாக சமத்துவத்தையும் சமூக அதிகாரத்தையும் ஓரளவுக்கு வழங்கியது. பெண்ணிய இயக்கத்துக்கு ஒரு பெரும் ஊக்கியாக இது அமைந்தது. இதை பயன்படுத்திக் கொள்ள விழைந்த சிகரெட் நிறுவனங்கள் பெண்களை முன்வைத்து பல விளம்பரங்களை உருவாக்கினர். இவற்றில் சிகரெட் என்பது நவீன, சுயசார்புள்ள, ஸ்டைலான, சமூக இணக்கம் கொண்ட பெண்ணுக்கான குறியீடாகியது. வேலை செய்து சம்பாதிக்கும் ஒரு நவீனப் பெண் ஆணுக்கு இணையாக தன்னை கலாச்சார ரீதியாக முன்வைக்க சிகரெட் புகைப்பது உதவும், பெண் சுதந்திரம் பெற சிகரெட் புகையுங்கள் என இந்த விளம்பரங்கள் குறிப்புணர்த்தின என்கிறார்கள் ஆய்வாளர்கள் ஆமோஸ் மற்றும் ஹேக்லண்ட். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான சிகரெட் விளம்பரங்களில் போரில் இருந்து திரும்பும் கணவனை எதிர்பார்த்திருக்கும் பெண் சிகரெட் விளம்பரங்களில் தோன்றத் துவங்கினாள்; சில விளம்பரங்களில் தேனிலவுக்கு செல்பவர்கள் சிகரெட்களை நிறைய வாங்கி பெட்டியில் கொண்டு செல்வதாய் காட்டினர் என்கிறார் ஆய்வாளர் கிரீவ்ஸ். விலைமாது என்பதில் இருந்து, சமத்துவம் பெற்ற நவீனப் பெண்ணாகி, அதில் இருந்து தற்போது விளம்பரங்களில் சிகரெட் புகைப்பவள் ஆணை கவர்ந்திழுக்கும் இயல்பு கொண்ட அழகியாக தொடர்ந்து இப்பிம்பம் மாறி வந்துள்ளதாய் அவர் கூறுகிறார்.
ஹாலிவுட்டில் மார்லின் பிராண்டோ சிகரெட்டை ஒரு கலக பாவனையாக வலுப்படுத்தினார். ஓவியங்களில் சிகரெட் ஆரம்பத்தில் மரணத்தின் குறியீடாக இருந்து பின்னர் நவீனத்தின், இளமையின், துடிப்பான இயல்பின் குறியீடானது என்கிறார் பெத் கிப்சன். இந்த பரிணாம மாற்றமோ விளம்பர நிறுவனங்களுக்கு சுலபமாக இருக்கவில்லை. உதாரணத்திற்கு மார்ல்போரோ சிகரெட்டை எடுத்துக் கொள்வோம். மார்ல்போரோ இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிகரெட் உற்பத்தி நிறுவனம். இதன் நிறுவனர் பிலிப் மோரிஸ். 1924 வரை மார்ல்போரோ பெண்களுக்கான சிகரெட்டாக பிரசித்தமாக இருந்தது. பெண்களை ஈர்க்கும் பொருட்டு இது மென்மையான கார வாசனை கொண்டதாக, பில்டர் கொண்டதாக, இந்த பில்டரில் லிப் ஸ்டிக் கறை படியாதிருக்கும் பொருட்டு சிவப்பு பட்டி அமைக்கப்பட்டதாக இருந்தது. ஆனால் 1924க்குப் பிறகு சிகரெட் புகைப்பதன் ஆரோக்கிய கேடு குறித்து விழிப்புணர்வு வலுப்பட மார்ல்போரோ விற்பனை சரிந்தது. இனி ஆண்களை குறி வைத்தாலே விற்பனையை ஈடுகட்ட முடியும் என புரிந்து கொண்ட பிலிப் மோரிஸ் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
 பில்டர் வைத்த சிகரெட் உடல்நல தீங்குகளை மட்டுப்படுத்தும் என அப்போது நம்பப்பட்டது. ஆண் வாடிக்கையாளர்கள் பில்டர் சிகரெட்டை வாங்கத் தயார். ஆனால் அவருக்கு இருந்த பிரதான சிக்கல் சிகரெட்டின் பெண்மை பிம்பத்தை எப்படி மாற்றுவது என்பது. இதற்காக அவர் மேற்கில் விளிம்புநிலையில் உள்ள உதிரியான, அலட்சியமான ஆண்களாய் கருதப்படும் கவ்பாய் ஆணின் பிம்பத்தை பயன்படுத்தினார். கப்பற்காரர், ராணுவ செய்தியாளர், பளுதூக்கும் வீரர் போன்ற வலுவான முரட்டு ஆண்களையும் விளம்பரங்களில் அடுத்தடுத்து கொணர நினைத்தார் பிலிப் மோரிஸ். இந்த விளம்பரம் பற்றிக் கொண்டது. விரைவில் உலகில் அதிகம் விற்கப்படும் சிகரெட்டுகளில் நான்காம் இடத்துக்கு மார்ல்போரோ வந்து சேர்ந்தது. மார்ல்போரோவின் வணிக வெற்றிக்கு முக்கிய காரணம் பிலிப் மோரிஸின் முக்கியமான அவதானிப்பு ஒன்றுசிகரெட்டை மக்கள் விரும்பக் காரணம் அது முரட்டுத்தனமான வலுவான ஆணுடலை பிரநுத்துவப்படுத்துகிறது என்பதால் அல்ல, அதில் ஒரு கலகத்தன்மை, பொதுப்போக்குக்கு நேர் எதிரான போக்கு அடையாளப்படுத்தப்படுகிறது என்பதே. இதையே ரஜினிகாந்த் தன்னை அறியாமல் தமிழில் வெற்றிகரமாய் செயல்படுத்தினார். இதையே இன்னும் வேறெவராலும் காப்பிடிக்க முடியாமல் உள்ளதுதன்னை ஹெர்குலிசாக காட்டுவது சுலபம், ஆனால் பொதுப்போக்கில் இருந்து பிறழ்பவனாக காட்டியபடியே, மரபான விழுமியங்கள் படி ஒழுகி வாழும் மக்கள் இதயத்தில் இடம்பெறுவது சுலபமல்ல. ரஜினியால் முடிந்த அது வேறெவராலும் இன்று வரை முடியவில்லை.
நம் சினிமாவில் பெண்கள் புகைப்பவர்களாய் முன்னிலை பெறாததற்கான காரணம் என்ன?
சிகரெட்டை உதட்டில் பொருத்திய பெண் உண்மையில் குட்டைப்பாவாடை பெண்ணை விட கவர்ச்சியானவள். ஆனால் கவர்ச்சி மட்டுமே நாயகி பிம்பம் அல்ல. இன்றும் நாயகி என்பவள் ஒரு காதலியாகவோ மனைவியாகவோ மரபான கட்டமைப்புக்குள் பொருந்தக் கூடியவளாக இருக்க வேண்டும். கலகம் செய்ய அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள சுதந்திரம் நாயகனுக்கு உள்ளதை விட மிக மிக குறைவே. இன்று மேற்தட்டில் பெண்கள் புகைப்பது வெளிப்படையாகி விட்ட நிலையிலும் சினிமாவில் அவர்கள் சிகரெட்டை பற்ற வைக்காததற்கு இதுவே காரணம்.

கூடுதல் வாசிப்புக்கு:
Amos, A. and Haglund, M. (2000). From social taboo to torch of freedom: the marketing of cigarettes to women. Tobacco Control93–8.

Greaves, L. (1996Smoke Screen: Women’s Smoking and Social Control. Scarlet Press, London.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...