Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

2019 உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை: தென்னாப்பிரிக்கா - காத்திருந்து பூத்த கண்கள்


தொண்ணூறுகளில் தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றிய அணியாக(மற்றொன்று இலங்கை) இருந்தது. கச்சிதமான கூர்மையான வேகப்பந்து வீச்சு, அட்டகாசமானகளத்தடுப்பு, வலுவான மத்திய வரிசை பேட்டிங் மற்றும் எண் 9 வரை அபாரமான பேட்டிங் திறமைகொண்ட ஆல்ரவுண்டர்கள். இந்த அம்சங்களில் களத்தடுப்பும் ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பும்தென்னாப்பிரிக்காவை தனித்துவமான அணி ஆக்கின.உதாரணமாய், ஆபத்தான பேட்ஸ்மேனும், பவுலருமான ஷான் பொலாக், பேட் சிம்காக்ஸ், மெக்மில்லன் மற்றும் குளூஸ்னர், தனியாக 30-40 ரன்களை தங்களது களத்தடுப்பால் சேமித்து, உள்வட்டத்தில் தனது கேட்சிங் மூலம் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஜான்டி ரோட்ஸ், தலைமை, பேட்டிங் மற்றும் மிதவேகப்பந்து வீச்சு மூலம் தொடர்ந்து பங்களித்து வெற்றியை பெற்றுத்தரும் ஹன்ஸி குரோனியே, அதிவேக பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் ... இப்படி ஏகப்பட்ட பேர்துலங்கிய அற்புத அணி அது.ஒவ்வொரு முறை உலகக்கோப்பை வரும் போதும் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு செல்லும்என எதிர்பார்ப்பார்கள்; ஆனால் தென்னாப்பிரிக்க சமூகத்தில் (வெள்ளையர் இடையே) உள்ளசுயநெருக்கடி, தனது மதிப்பு குறித்த அவநம்பிக்கை அவர்களின் கிரிக்கெட் அணியையும் பல்வேறுமுக்கியமான கட்டங்களிலும் பாதித்தது எனலாம் - தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இருந்துஇரண்டாயிரத்தின் பத்தாண்டுகள் வரை தென்னாப்பிரிக்கா மிக நன்றாய் ஆடி விட்டு நெருக்கடியானகாலிறுதி / அரை இறுதிப் போட்டிகளில் அழுத்தம் தாளாமல் சின்னச் சின்ன தவறுகள் செய்து, வெற்றியைக் கோட்டை விடுவார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த சொதப்பல்கள் காரணமாய் chokers எனும் கிண்டலான பட்டப்பெயர்அவர்களுக்கு அளிக்கப்பட்டு நிரந்தரமாகியது. இன்றும் தென்னாப்பிரிக்கா ஒரு நல்ல அணியே; ஆனாலும் அவர்களது மன உறுதியின்மை, சுய-ஐயப்பாடு காரணமாய் அவர்கள் தாமாகவேஉலகக்கோப்பையில் இருந்து வெளியேறி விடுவார்கள் என விமர்சகர்கள் நம்புகிறார்கள்.இன்றைய தென்னாப்பிரிக்க அணியைப் புரிந்து கொள்ள இரண்டாயிரத்தில் தென்னாப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த இரு மாற்றங்களை கவனிக்க வேண்டும். ஒன்று, அணிக்குள்கறுப்பின மக்களுக்கு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. மெல்ல மெல்ல கறுப்பின பவுலர்களும்பின்னர் கறுப்பின பேட்ஸ்மேன்களும் அணிக்குள் அறிமுகமாகி அதிக வாய்ப்புகள் தொடர்ந்துபெற்றனர். இந்த இன அடிப்படையிலான இட ஒதுக்கீடு காரணமாய் வெள்ளையின வீரர்களுக்குவாய்ப்பு குறைய சிலர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தனர். இப்படி இங்கிலாந்து அணியில் ஆடவாய்ப்புப் பெற்று பின்னர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உயர்ந்தவரே கெவின் பீட்டர்ஸன்.

இந்தக் காலகட்டத்தில்தான் தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் அசுர பலம் பெறுகிறது.உலகத்தர ஆல்ரவுண்டர் காலிஸ் தென்னாப்பிரிக்காவின் சச்சின் என போற்றத்தக்க  பிடிவில்லியர்ஸ், தலைவர் கிரேம் ஸ்மித், கீப்பர் பேட்ஸ்மேன் மார்க் புச்சர் போன்றோர் ஒரு பக்கம்ஸ்டெயின், மோர்கல் சகோதரர்கள், மாகாநாய நிடினி ஆகிய வேக வீச்சாளர்கள் இன்னொரு பக்கம்என ஒரு தரமான அணி உருவானது. இந்த அணி தனது ஆல்ரவுண்ட் திறமையையும் களத்தடுப்பையும்மட்டுமே கொண்டு வெல்லாமல், அபாரமான பேட்டிங் திறமை மற்றும் மிரட்டும் வேகவீச்சைக்கொண்டு அதிரடியாக ஆடியது. ஆனாலும் சற்றே சம்பிரதாயமான மனநிலையும், தவறு செய்துவிடுவோமோ எனும் அச்சமும் தென்னாப்பிரிக்காவை பெரிய ஆட்டத்தொடர்களில் காலை வாரிவிட்டன.இதன் பின்னர் கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாய் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்கா மெல்ல மெல்ல தனது துர்க்காதேவி உக்கிர வடிவில் இருந்து மாரியம்மாவாகசாந்தரூபம் எடுத்துள்ளது. டிவில்லியர்ஸ் காயம் காரணமாய் அடிக்கடி ஆடாமல் இப்போது முழுக்கஅணியில் இருந்து ஓய்வு பெற்றது, கறுப்பினர் வீரர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமை பிறரிடம்ஏற்படுத்திய பிளவு, மட்டையாட்டத்தில் உள்ள பலவீனம், டெஸ்ட் அளவுக்கு ஒருநாள் ஆட்டங்களில்கவனம் காட்டாமை என தென்னாப்பிரிக்கா தனது இரண்டாம் இடத்தை உலக அளவில்இந்தியாவுக்கு விட்டு கொடுத்தது. ஆனால் யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் - இந்தபலவீனமான நிலையிலும் தென்னாப்பிரிக்கா எந்த சிறந்த அணியையும் முறியடிக்கும் தரத்துடன்வலிமையுடன்தான் உள்ளது.

அடுத்து 2019 உலகக்கோப்பைக்கான அணியின் பலம் மற்றும் பலவீனத்தை பார்ப்போம்.இந்த அணியில்  ஒரு வித்தியாசமான அம்சம் 34-36 வயதுக்கு உட்பட்ட பல வீரர்களும், இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் புதிய இளம் வீரர்களும் இணைந்திருப்பது. இந்த இளம்வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாய் தொடர்ந்து ஆடி அணியில் நிலைப்பட்டவர்கள் அல்ல. இதுபொருந்தா வயது வித்தியாசம் அணியின் இணக்கத்தை, புரிந்துணர்வைப் பாதிக்குமா எனும் கேள்விஎழுந்துள்ளது.
ஃபஃப் டூபிளெஸி (அணித்தலைவர்)டூ பிளெஸி கடந்த சில ஆண்டுகளாய் மிகச்சிறந்த ஆட்ட நிலையில் இல்லை. இந்த .பி.எல்லிலும்அவர் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் நல்ல தடுப்பாட்டமும் புத்திசாலித்தனமும் கொண்டஇவரது ஆட்டம் சிக்கலான தடுமாற்றமான கட்டங்களில் அணிக்கு நிச்சயம் உதவும். ஓர் அணித்தலைவராகவும் டூ பிளெஸி அபாரமானவர்
ஹஷிம் ஆம்லா
திராவிட், அசாருதீன், லஷ்மண் ஆகிய மூவரின் கலவைதான் ஆம்லா.சில வீரர்களுக்கு வயதாக ஆக ஆட்டம் மெருகேறும். ஆம்லா அப்படியானவர். உலக கிரிக்கெட்வரலாற்றிலேயே இவர் ஒரு சாதனை வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்க ஆட்டமாடி 27 சதங்கள்மற்றும் 37 அரைசதங்கள். தடுப்பாட்டம், வேக வீச்சை எதிர்கொள்ளல், ஸ்பின்னை தெறிக்க விடுதல்என ஆம்லா ஒரு முழுமையான மேதை. இந்த உலகக்கோப்பையில் இவர் தொடர்ந்து ரன் குவித்தால்தென்னாப்பிரிக்கா நிச்சயம் அரை இறுதியைக் கடக்கும்.
டி காக் (கீப்பர்)
இன்று உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யாரென்று பட்டியல் எடுத்தால் டி காக்முதலிடம் பெறுவார்; ஆனாலும் ஒருவேளை முதலிடம் அதிகமோ என உங்களை ஐயப்படவைக்கும்படியாய் அவரது ஏற்ற இறக்கமான ஆட்டம் இருக்கும். இன்று ஜொலிப்பவர் நாளைஇருளடைந்து தெரிவார். ஆனால் டி காக் தன்னம்பிக்கையுடன் ஆடத் துவங்கினால் தன்னந்தனியாய்தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டிக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர். ஆனால் 106 ஆட்டங்களில் அவர் இதுவரை தன் அணியை இறுதிப்போட்டி வரை இட்டுச் சென்றதாய்தெரியவில்லை.

மேலும் படிக்க: https://tamil.asiavillenews.com/article/worldcup-2019-team-review-south-africa-6680

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்