Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜீவஜோதி விவகாரம்: குற்றங்களுக்கு காரணம் ஒழுக்கமின்மையா? (1)

ஜீவஜோதியின் கணவர் 2001இல் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியான சரவண பவன் அதிபர் ராஜகோபால் நீண்ட கால சட்டப்போராட்டத்துக்குப் பிறகு தண்டனை வழங்கப்பட்டு பின்னர் மருத்துவ சிகிச்சையின் பெயரில் வெளியே இருந்து இப்போது நிச்சயமாய் சிறையில் தொடர்ந்து காலம் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட சூழலில் காலமாகி உள்ளார். இரு பத்தாண்டுகளில் ஒரு மிகப்ப்பெரிய வணிக சாம்ராட்டின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சரிவுகள் சற்றே சினிமாத்தனமும் நிறைய பூடகத்தன்மையும் கொண்டவை


அதுமட்டுமல்ல, ஜீவஜோதி தனியாக இறுதிவரை ஒரு மிகப்பெரிய செல்வந்தருக்கு, செல்வாக்கான ஆளுமைக்கு எதிராக நடத்திய போராட்டமும் மக்களுக்கு, பணமும் அதிகாரமும் படைக்காத மத்திய வர்க்கத்தினருக்கு, ஒரு உத்வேகமான சேதியாக அமைந்தது. இதுவரை ஊடகங்களில் வெளிவந்த செய்திக்குறிப்புகளை மட்டுமே பார்க்கையில் நமக்கு ஒரு முழுமை போன்று தொனிக்கும் (ஆனால் நிஜத்தில் முழுமையற்ற) ஒரு சித்திரம் கிடைக்கிறது:
 சரவண பவன் அண்ணாச்சி ஏற்கனவே இரு திருமணங்கள் பண்ணியவர். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம். தன் ஆலோசகர்களின் கருத்துப்படி கார்த்திகை நட்சத்திரத்தில் ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாவதுமணந்துகொள்கிறார். மூன்றாவதாகவே, ஜோதிட அறிவுரைப்படி, அவர் ஜீவஜோதியை மணக்க விரும்புகிறார். ஜீவஜோதி மறுக்கிறார். அவர் சாந்தகுமார் எனும் குடும்ப நண்பர் / உறவினரை காதலிக்கிறார். அவரையே மணக்க விரும்புகிறார். அண்ணாச்சியின் வற்புறுத்தலையும் மீறி அவர் சாந்தகுமாரை மணம் புரிகிறார். அண்ணாச்சியின் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அண்ணாச்சி ஆள் வைத்து சாந்தகுமாரை கடத்தி வந்து கொல்கிறார். ஜீவஜோதி தன் கணவனைக் காணவில்லை என புகார் அளிக்கிறார். காவல்துறையினர் சாந்தகுமாரின் உடலை கொடைக்கானலில் கண்டெடுக்கிறார்கள். வழக்கு நடக்கிறது. ஊடகங்களில் ஜீவஜோதிக்கு சார்பாக செய்திகள் வருகின்றன. இந்த வழக்கு மொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுக்கிறது. ஜீவஜோதியின் புதுப்புது புகைப்படங்கள் தொடர்ந்து வார இதழ்களின் முகப்புப் படமாகின்றன. அண்ணாச்சியை நிலைகுலைய வைக்குமளவுக்கு பேரழகி இல்லை என்றாலும் இந்த பெண்ணிடம் என்னவோ வசீகரம் இருக்கிறது என பொதுமக்கள் நினைக்கிறார்கள். சரவணகார்த்திகேயன் முகநூலில் எழுதிய போது குறிப்பிட்டதைப் போல அந்த காலகாலத்தின் உன்னதமானஆன்டிஜீவஜோதி தான். சினிமா நடிகைகளுக்கு இணையாக அவர் புகழ் பெற்றார் (அதற்காக அவர் எந்த பிரயத்தனமும் பண்ணவில்லை என்றாலும்). தன்மனுஷியாக இந்த பெண் எப்படி ஒரு கொடூரமான தொழிலதிபரை எதிர்கொண்டு வீழ்த்துவாள் எனக் காண மொத்த தமிழகமும் ஆர்வமாய் விழித்திருந்தது. வழக்கு ஜீவஜோதிக்கு ஆதரவாக நடக்க ஜெயலலிதாவின் ஆதரவும் ஆசியும் உதவியது.
 இந்த வழக்கு நடக்கும் இரு பத்தாண்டுகளில் ஜீவஜோதியின் வாழ்வின் வேறு பல திருப்பங்கள் வருகின்றன. ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அண்ணாச்சி ஜிவஜோதியை கடத்த முயன்றதாய் ஒரு வழக்கு பதியப்பட்டது. இது அண்ணாச்சி மீண்டும் சிறைத் தண்டனை பெற, வழக்கு அவருக்கு எதிராக திரும்ப, அவரது தண்டனைக் காலம் அதிகமாக்கப்பட காரணமானது. ஜீவஜோதி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். அவரது கணவர் ஏற்றுமதி வியாபாரம் செய்கிறார். ஒரு தையல் கடையும் ஓட்டலும் நடத்தி வருகிறார்கள். முதல் குழந்தை பிறந்த ஒன்பது மாதங்களில்  காலமாகி விட்டது. அத்துயரில் இருந்து மீண்டு, இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் அவர் ஒரு அமைதியான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. இதுவரையில் ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கைகள், கட்டுரைகளின் எளிய தொகுப்பு தான் இது. ஆனால் உற்று கவனித்தால் இந்ததிரைக்கதையில்சில ஓட்டைகள் உள்ளது அம்பலமாகும்

ஏனென்றால் இந்த செய்திகளும் குறிப்புகளும் ஜீவஜோதி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டவை. திருமணமாகி நிம்மதியாக வாழ நினைத்த ஒரு உத்தமி என்றே ஜீவஜோதி அதில் தன்னை சித்தரிக்கிறார். சுலபத்தில் ராமாயண சீதையை போல (ராவணன் இடத்தில் ராஜகோபால்) ஒரு தொன்மமாக அவர் மாற நமக்கு அவரை அங்கீகரிப்பது, அவருக்காக உச்சுக்கொட்டுவது சுலபமாகிறது. அதனாலே இந்த ஓட்டைகளை நாம் கவனியாமல் கடந்து போகிறோம்.

முதலில், தனது வாக்குமூலத்தில் திருமணத்துக்குப் பின்னர் தானும் கணவரும் வியாபாரம் பண்ண ராஜகோபால் பண உதவி பண்ணியதாக அவர் சொல்கிறார்

எந்த வியாபாரம் என்றாலும் முதலீட்டுக்கு சில லட்சங்களாவது தேவையிருக்கும். ராஜகோபால் ஒரு வியாபாரி. தன் கடை ஊழியர்கள் காலையில் களைப்பாக வேலைக்கு வரக் கூடாது என அவர்கள் இரவில் திரையரங்குக்குப் போய் படம் பார்ப்பதையே தடை பண்ணியவர், உணவில் முடி விழக் கூடாது என்பதால் பரிமாறும், சமைக்கும் பணியாளர் வாராவாரம் முடி வெட்ட வேண்டும் என பணித்தவர் அவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு கராறான ஆசாமி தயை உள்ளம் காரணமாய் இலவசமாய் லட்சக்கணக்கில் பணத்தை கொடுப்பார் என நான் நம்பவில்லை. இந்த உதவியின் பின்னணியில் தான் அண்ணாச்சி தன்னை தொந்தரவு பண்ணியதாக, தன் கணவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது என வற்புறுத்தியதாக, தனக்கு உடல்நலிவுற்று இருந்த போதும் தன்னைதொந்தரவுபண்ணியதாக சொல்கிறார் ஜீவஜோதி

இங்கே அடுத்த கேள்வி எழுகிறது:
ரோட்டில் போகிற ஒரு பெண்ணையோ அல்லது உங்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் ஒருவரின் பெண்ணையோ கண்டு நீங்கள் இச்சிக்கலாம், ஆனால் அவர் தன் கணவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது எனக் கோருவீர்களா? நிச்சயமாக மாட்டீர்கள்
இதன் தொடர் கேள்வி: அவனுடன் நீ படுக்கக் கூடாது என அவர் ஜீவஜோதியிடம் கோரினால் அதன் உட்கிடக்கை என்ன? “என்னுடன் மட்டுமே படுக்க வேண்டும்என்பதே. நீங்கள் ஒன்றுஇப்படித் தான் வேண்டூம்என எப்போது கேட்பீர்கள்? அது ஏற்கனவே உங்களுக்கு கிடைத்திருந்தால். .தா, தீபாவளிக்கு வருடாவருடன் விடுமுறை என்பது நடைமுறை. விடுமுறை இல்லையென்றால்வேண்டும்எனக் கேட்பீர்கள்

அடுத்த கேள்வி ஜோசியம் சம்மந்தமானது. நாம் மீண்டும் மீண்டும் கேள்விப்படுவது அண்ணாச்சி தன் மிதமிஞ்சிய ஜோசிய நம்பிக்கை, மூடநம்பிக்கையினால் தான், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை இரண்டாம், மூன்றாம் தாரமாக்கிக் கொள்ள துடித்தார், மேலும் பெரும் பணக்காரனாக வேண்டும் எனும் ஆசையினாலே அவர் ஜீவஜோதியை மணக்க விரும்பினர் என்பது. ஜீவஜோதியின் ஜாதகம் எப்படி அண்ணாச்சி வசம் போனது? அண்ணாச்சியின் இரண்டாம் மனைவியாக உள்ளவரும் ஏற்கனவே திருமணமானவரே. அவரையும் ஜாதகத்தின் அடிப்படையில் அண்ணாச்சி மணந்ததாக சொல்கிறார்கள். அவரது ஜாதகம் எப்படி அண்ணாச்சி வசம் போனது? வேலை பார்க்கும் இடங்களில் பெண்கள் எல்லாரும் ஜாதக பிரதியுடன் அலைகிறார்களா? பார்க்கிறவருக்கு எல்லாம் ஒரு ஜெராக்ஸ் பிரதி கொடுக்கிறார்களா? இல்லை


பெண்ணின் ஜாதகம் என்பது திருமண ஏற்பாடுகளின் போது மட்டும் முளைக்கும் ஒரு சமாச்சாரம். அதை ரோட்டில் போகிறவரெல்லாம் பார்த்து விட முடியாது. ஒரு பெண்ணிடம் நட்பான அடுத்த நாளே ஜாதகம் கேட்க முடியாது. இந்த ஜாதக விசயம் இந்த இரு பெண்களுக்கும் அண்ணாச்சியிடம் ஏற்கனவே இருந்த நெருக்கத்தை காட்டுகிறது என்பது வெளிப்படை.

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...