Skip to main content

பொருளாதாரம் சரிவடையும் போது யார் பலனடைகிறார்கள்?


விலைவாசி உயரும் போது வேலைப்பளுவும் அதிகமாகிறது. அப்போது ஊழியர்களின் உழைப்பு, உற்பத்தி (வேலையின் வெளிப்பாடு, பொருண்மையாகவோ அல்லாமலோ) அதிகமாகிறது. சம்பளமும் அதிகமாகிறது. ஆனால் இந்த சம்பளத்தை வைத்து வசதியாக வாழவோ சேர்த்து வைக்கவோ முடியாது. முன்பு ஏழெட்டு மணிநேரம் வேலை செய்தவர்கள் 12-14 மணிநேரங்கள் உழைக்கிறார்கள். முன்பு 20,000 சம்பாதித்தவர் 40,000 சம்பாதிப்பார். தாம் அதிக வேலை செய்வதற்கு ஈடாக கூடுதல் பணம் கிடைக்கிறதே என நினைப்பார். ஆனால் விலைவாசி அனைத்துக்கும் மூன்று நான்கு மடங்கு அதிகரிக்கும். அவர் செலவு செய்து அதே அளவுக்கே பொருள் வாங்குவார். அவரது சேமிப்பும் அதிக அளவுக்கே இருக்கும். அவருக்கு ஒரே மாயமாக இருக்கும். முன்வாசல் வழியாக புன்னகையுடன் ஒருவர் மூட்டை நிறைய பணத்தைத் தருவார்; உடனே பின்வாசல் வழியாக மற்றொருவர் கோபத்துடன் வந்து அதைப் பறித்துக் கொண்டு போய் விடுவார். இவரும் அவரும் ஒரே போல தோன்றுகிறாரே என அவருக்கு குழப்பமாக இருக்கிறது. என்னதான் நடக்கிறது?


பொருளாதாரம் தடுமாறும் போது, பணவீக்கம் ஏற்படும் போது வேலையிழப்பு, அது குறித்த பதற்றம், நெருக்கடியும் அதிகரிக்கிறது. இவ்வளவு சம்பாதித்தும் பயனில்லையே என அவர் வேலைகுறித்து ஏமாற்றமடைந்து ஆர்வமிழப்பார். இப்போது அவரால் வேலையிடத்தில் சுணக்கம் காட்டவோ புது வேலையைத் தேடவோ முடியாது. வேலையைத் தக்க வைக்க அவர் கூடுதல் நேரங்கள் மாரடித்தே ஆக வேண்டும். உடல்நலமில்லாமல் போகும் போதும் அவரால் விடுப்பெடுக்க முடியாது. எல்லா வித வேலையிட அதிகார துஷ்பிரயோகங்கள், ஒடுக்குமுறைகளையும் அவர் தாங்கிக் கொள்ள வேண்டும்.

பொருளாதாரம் சீரழியும் போது அரச வன்முறை, கொடுங்கோன்மை, பாசிசம் ஆகியவையும் அதிகரிக்கின்றன. வேலையிடத்தில் அடிமையாக இருக்கிறோமே வெளியிலாவது சற்று உண்மையாக இருக்கலாமே என ஒருவர் நினைத்தால் அது சற்றும் சாத்தியப்படாது. அவரது ஒவ்வொரு சிறு அசைவும் கண்காணிக்கப்படும். அவர் குற்றம் செய்யுமுன்னே அரச அதிகாரம் அவனைத் தண்டிக்கும். சமீபத்தில் இந்திய-சீன தலைமைகள் தமிழகத்தில் சுற்றுலா சந்திப்பு நடத்திய போது சீனாவுக்கு எதிராக திபெத்திய மாணவர்கள் சென்னையில் போராட்டம் நடத்தக் கூடும் என ஐயப்பட்ட உளவுத்துறை சீன பிரதமர் வரும் முன்பே என் திபெத்திய நண்பர் ஒருவரை கைது செய்தது. அவர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டதாகக் கூட ஆதாரம் இல்லை. திபெத்திய கலகக்கரார்களின் தலைவர் அவர் என ஒரு குருட்டுத்தனமான குற்றச்சாட்டை வைத்து அவரையும் வேறு சில மாணவர்களையும் காவல்துறை புழல் சிறையில் தள்ளியது. அத்துடன் அவர் வேலை செய்த கல்லூரிக்கு செய்தி அனுப்பி அவரை வேலையில் இருந்து நீக்கவும் வழிவகை செய்தது. மற்றொரு நண்பர் முன்பு முதுகலை மாணவராக இருக்கையில் பல மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர். அவர் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்த நிலையில் அவர் போராட்டங்கள் நடத்தக் கூடும் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் தூக்கப்பட்டார். இப்போதெல்லாம் நீங்கள் அரசரைப் பற்றி, அவரது சர்வாதிகார செயல்களைப் பற்றி அரை வினாடி யோசிக்கும் போதே வாயில் மணி அடிக்கும்; தூக்கி புழலில் போட்டு விடுவார்கள். எப்படி வேலையிடத்தில் நிர்வாகத்தை கேள்வியின்றி பின்பற்றுகிறோமோ அப்படியே சமூகத்தில் அரசரையும் அடிபணிந்தாக வேண்டும்.

 பொருளாதார வீழ்ச்சி பற்றி யோசிக்கும் போது ஊடகங்கள் முன்வைப்பது என்ன? பெருமுதலாளிகளின் நெருக்கடி, பல நூறு கோடிகள் நஷ்டமாவது பற்றி, தொழில் நிறுவனங்களின் நசிவு பற்றி கண்ணீர் சிந்துகின்றன ஊடகங்கள். காபி டே நிறுவனர் தற்கொலை செய்ததை வைத்து ஒப்பாரி வைக்கிறது. ஆனால் பெருமுதலாளிகளுக்கு இதில் லாபம் அதிகம். கூடுதல் வேலை நேரம், கேள்வியற்ற அடிபணிவு, அதிக உற்பத்தி, குறைவான சம்பளம், சம்பளத்தைக் கூடுதலாகக் கேட்டு கிடைக்காத நிலையில் புது வேலையை நாடும் துணிச்சலின்மை என முதலாளித்துவத்துக்கு சாதகமான சூழல் அமைகிறது. பொருளாதாரம் நசிந்து விட்டது எனக் காட்டி ஆட்குறைப்பை செய்யவும், மேலும் ஆட்குறைப்பு செய்ய நேரும் என மிரட்டி, கார்ப்பரேட் வரியை குறைக்க அரசை நிர்பந்திக்கவும் முடியும். சிறுவியாபாரிகளும் சிறுமனிதர்களும் தாம் தவிக்கிறார்கள்; பணம் எங்கே போகிறது எனப் புரியாமல் குழம்புகிறார்கள்

அரசுக்கும் இந்த சூழல் பயனளிக்கிறது. பொருளாதார நெருக்கடியின் வெக்கையை அவர்களால் திசை திருப்பி விட முடிகிறது. மற்றமைகளை உண்டுபண்ணி அவர்களைத் தாக்கி மக்களுக்கு செயற்கையான திருப்தியை, நம்பிக்கையை, அதிகாரத்தைத் தர முடிகிறது. அதாவது ஆட்சியை முழுக்க ஒரு ஆக்‌ஷன் சினிமாவாக மாற்றி நாட்களை கடத்தவும் நல்ல பெயர் வாங்கவும் முடிகிறது. எந்த பிரச்சனையையும் தீர்ப்பதற்காக மண்டையை போட்டு உடைக்கவோ, தீர்வுகளை வகுக்கவோ தேவையில்லை. அரசியல் எதிரிகளே இருக்க மாட்டார்கள். .தா., இந்திய பொருளாதாரம் மிக மிக மோசமான நிலைமையில் இருக்கும் போது தான் இந்திய பிரதமர் மக்களின் நாயகனாகவும் கொண்டாடப்படுகிறார். வில்லனே இல்லாத சினிமாவின் நாயகன் அவர். வில்லன்கள் அவரது காலடியில் பணிந்து அவர் காலடி மண்ணைத் தொட்டு வணங்குகிறார்கள்.


மனிதன் ஒரு விசித்திரமான மிருகம். அவன் கடுமையான நெருக்கடியில், எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கும் போது முழுக்க பணிந்து, அமைதியாகி விடுகிறான். ஒரு மிருகம் கூட பயத்தில் அதிக வன்முறை கொண்டதாகும்; அதை நெருங்க அஞ்சுவார்கள். ஆனால் மனிதனுக்கு வெறுப்பை, கோபத்தை நேரடியாகக் காட்டத் தெரியாது. அவனது வன்மத்தை மடைமாற்றி விடுகிறவனை அவன் தலைவனாக ஏற்று காலில் பணிவான். அவர் காட்டுகிற திசையில் மொத்த கொலைவெறியையும் பிரயோகிப்பான். இரண்டாம் உலகப்போரின் தறுவாயில் ஜெர்மனியிலும் இப்போதும் ஒவ்வொருமுறை உலகம் முழுக்க பொருளாதாரம் சரியும் போது வலதுசாரிகள் எழுச்சி பெறுவது இப்படித் தான்.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...