முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெரிதாவின் விமர்சன மொழி ஏன் தர்க்கபூர்வமாய் இல்லை?




 வாசிப்பு ஒரு ஆன்மீக நிலை, அதற்கு என ஒருவித அறிவுத்தகுதி தேவையென நீங்கள் சொன்னால் அறிவைக் கொண்டு வாசிக்க முடியாது என நான் சொல்வேன். வாசிப்புக்கு அறிவு எப்போதும் ஒரு இடையூறு மட்டுமே.

 வாசிக்க மனதுக்குள் ஒரு கண் திறந்திருக்க வேண்டும். இதைப் புலப்படுத்தும் நோக்கிலேயே தெரிதா தன் விமர்சனங்களை முன்னுக்குப் பின் முரணான, மிக கவித்துவமான மொழியில் நிகழ்த்துவார். பகுத்தறிவு பூர்வமான தெளிவாக ஒன்றை நிறுவி அங்கிருந்து மற்றொன்றுக்கு வேட்டையாடும் கழுகைப் போல தாவிச் செல்லும் (சு.ராவினுடையது போன்ற) விமர்சன மொழியை அவர் வெறுத்தார். ஏனென்றால் வாசிப்பின் முதல் விரோதி தான் வாசிப்பதாய் நினைக்கும் மனமே, பிரக்ஞைபூர்வமான ஒழுங்கே என அவர் அறிந்திருந்தார்.
 ஆனால் பயிற்சியைக் கொண்டு நுட்பமாக வாசிக்கும் கண்ணைத் திறக்க முடியாது. அது இன்று திறக்கும், நாளை மூடும். நாளை மூடின நிலையில் நான் உதிக்கிற ஒரு கருத்தை நேற்று நான் தெளிவாக இருந்து விவரமாகப் பேசினேன் என்பதை வைத்து மதிப்பிட முடியாது. இப்படியான காலக்கிரமான மதிப்பிடலுக்கு வாசிப்பில் இடமில்லை. தெரிதா சொல்வதைப் போல வாசிப்பு காலம் சார்ந்த அர்த்தக் கட்டுமானங்களை முதலில் உடைக்கிறது. பண்பாடு சார்ந்த கட்டுமானங்களை நொறுக்கிறது. அர்த்தமே இல்லாத இடத்தில் ஒரு வாசகனை ஒரு நொடி நிறுத்தி வைக்கிறது. அப்போது மௌனித்திருப்பவனே நல்ல வாசகன். (பேசத்தெரியாதவன் வாசகன் என்றல்ல இதன் பொருள்) அப்படி இருக்க அவனுக்கு என்ன தகுதி தேவை, அவன் மனிதனாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர?
மேலும், வாசகத் தகுதி, அது இது என்பதெல்லாம் சாதிய மனநிலையின் ஒருவித முகமூடியிட்ட வாதமே. நம்மிடையயே இப்படி படிநிலையை உருவாக்கும் உளவியல் அழியவே அழியாது. அதற்கு முதலில் இந்த சாதிய அமைப்பு, உடல் பிம்பத்தை, பின்னணியைக் கொண்டு அகத்தை எடையிடும் போக்கு ஒழிய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...