முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காற்றுக்கென்ன வேலி?



ஜெயமோகன் வாசகர்களின் தகுதி பற்றி எழுதியதை ஒட்டி எழுந்த சில எதிர்வினைகளைப் பார்த்தேன். அந்த எதிர்வினைகள் மீதான எதிர்வினை இது:

வாசிப்பை பொருள் விளக்கம் பெறும் ஒரு நிகழ்முறையைப் பார்க்கும் ஒரு போக்கு தமிழில் உள்ளது. இது என்ன சொல்கிறது, இதைக் கொண்டு நான் என்ன அறிந்து கொள்கிறேன் என யோசிப்பது இது. நம்முடைய பகுத்தறிவு மரபுக்கு இந்த அபத்தத்தை உருவாக்கியதில் ஒரு பெரிய பங்கிருக்கிறது. ஆனால் வாசிப்பு இதற்கு நேர் எதிரான தளத்தில் அர்த்தத்தை உதறி அர்த்தமின்மை நோக்கி நம்மை மேலெடுத்து செல்வதாகும். பொருள் காண்பது, கண்டதை உரைப்பது விமர்சனம் - இந்த விமர்சனம் சுவாரஸ்யமாக ஆழமாக ஆகும் போது அது ஒரு தனி படைப்பாகிறது. அதிலும் இனிமை உண்டு, ஆனால் அது வாசிப்புக்கு மாற்று அல்ல. வாசிப்பின் நேர் எதிர் நிலை

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு படைப்பை ஊன்றி வாசிக்கும் போது உங்கள் போத மனம் அதைப் பற்றி சிந்திக்கிறதா என கவனியுங்கள். உங்கள் பகுத்தறிவு அதை அலசி வகைப்படுத்தி லேபள் ஒட்டுகிறதா என நோக்குங்கள். நிச்சயம் இராது. யோசிக்க மறக்கும் போதே வாசிப்பு துவங்குகிறது. படைப்புக்குள் எழும் சிந்தனைகள், குறிப்பான்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு தம்மை அழிக்கும் போதே நாம் ஒரு படைப்பை வாசித்த நிலையில் சிரிக்கிறோம், அழுகிறோம், மனம் திளைக்கஆஹ்என்கிறோம், கருணையில் உருகுகிறோம், சமூகத்தை நினைத்து கோபப்படுகிறோம், இந்த நெகிழ்வுக்கு, இந்த கோபத்துக்கு அர்த்தமே இல்லை என வியக்கிறோம், கைவிடப்பட்டதாய் தவிக்கிறோம்.

 வாசிப்பு ஒரு தியானம். அது தானே அமைவது. சிலருக்கு முதல் அனுபவத்தில், பலருக்கு பல வருடங்கள் கழித்து
வாசகத் தகுதியின்மை என ஜெயமோகனும், வாசகனின் மொண்ணைத்தனம் என கார்ல் மார்க்ஸும் குறிப்பிடுவது விமர்சனத் திறனின்மையையே. வாசகனின் போதாமையை அல்ல. ஒரு அற்புதமான வாசகனுக்கு துல்லியமாக தன்னை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். அவன் முட்டாளைப் போலப் பேசலாம். ஒரு பிரதியை பற்றி அட்டகாசமாகப் பேசும் ஒருவன் அதை முழுக்க தன் மூளையைக் கொண்டு பிரமாதமாக வாசித்து தன் வாதத்திறமையால், மொழியால் உங்களை மயங்க வைக்கலாம். விமர்சனத் திறனை வைத்து, போத மனத்தின் விளையாட்டை வைத்து அபோத நிலை ஒன்றை யாரும் மதிப்பிட கூடாது. வாசகனும் விமர்சகனும் ஒன்றல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...