Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

குறைந்தபட்ச ஆதரவு விலை: ஜியின் 4 பொய்கள்




ஜி தனது வேளாண் சட்டங்களை முட்டுக்கொடுத்து எழுச்சிகரமாக ஆற்றிய உரையில்குறைந்த பட்ச ஆதரவு விலையை (MSP) நீக்க மாட்டோம், அவை தொடரும்எனக் கூறுகிறார். ஆனால் இன்னொரு பக்கம் இந்த MSP வேளாண் சட்டத்துக்குள் கொண்டு வர மாட்டேன் என பிடிவாதமாகவும் இருக்கிறார். “நீங்க வாயால் சொன்னால் போதாது, அதற்கு மதிப்பில்லை, எழுத்தில் கொடுங்க, குறைந்தது பாராளுமன்றத்தில் சொல்லுங்கஎன விவசாயிகள் கேட்கிறார்கள். இதற்கு ஒரு காரணம் ஜி ஏற்கனவே இது போல வானுயர பொய்களை ஏகத்துக்கு சொல்லி இருக்கிறார், பொய்க்கோட்டைகளை எழுப்புவதில் பலவரலாற்று சாதனைகளைப்படைத்திருக்கிறார் என்பது. இதில் () ஜியின் ஆசான் நமது முன்னாள் ஜனாதிபதி கலாம் ஜி தான் - அவர் இன்று இருந்திருந்தால் 2050இல் நாம் வல்லரசு ஆவோம் என உணர்ச்சிகரமாய் கூறியிருப்பார். 2050 வரை உயிருடன் இருந்தால் 3000இல் என மாற்றி விடலாம். இப்படித்தான் நமது ஜியும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பத்து உணர்வெழுச்சியான வாக்குறுதிகளைக் கொடுப்பார். அவர் மலைமலையாக குவிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என பிடிவாதம் வேறு பிடிப்பார், அல்லது அதைப் பற்றி பேசவே மறுத்து விடுவார். எல்லா கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டும் செய்வதை ஜி அனுதினமும் செய்வார். உணர்ச்சி தான் முக்கியம், செயல் தீவிரமோ நடைமுறை மாற்றமோ அல்ல என ஜியின் ஆதரவாளர்கள் இதற்கு முட்டுக்கொடுப்பார்கள். இவ்விசயத்தில் அடுத்து () ஜியின் அடுத்த ஆசான்கள் சுயமுன்னேற்ற எழுத்தாளர்கள் / பேச்சாளர்கள் - “எப்படி வெற்றியாளன் ஆவது? கோடீஸ்வரன் ஆவது?” என அவர்கள் பேசுவதைக் கேட்டால் நாளையே நாம் பில் கேட்ஸ் ஆகி விடுவோம் என ஒரு ஆவேசமும் போலித் திருப்தியும் கிடைக்கும்; ஆனால் அவர்கள் தாம் சொல்லும் எந்த கருத்தையும், பரிந்துரையையும் வாழ்க்கையில் செயல்படுத்தி வென்றிருக்க மாட்டார்கள், மாறாக இவற்றை நம்மை செயல்படுத்த சொல்லி கோடிக்கணக்கில் புத்தகங்களை விற்று கோடீஸ்வரர் ஆகி விடுவார்கள். ஜி இதை அரசியலில் செயல்படுத்தி வானுயர வடை சுட்டு அதை நம்மையே வாங்கித் தின்ன வைத்த ஜெகஜால கில்லாடி


குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் கைவிடப்படும் என நினைக்கிறேன்?

முந்தைய அமைப்பை முழுக்க மாற்றி, அரசின் தலையீடு இன்றி கார்ப்பரேட்டுகளுக்கு வேளாண் சந்தையை திறந்து விடுவதே இந்த சட்டங்களின் குறிக்கோள். இவை நிலுவையில் வரும் போது மாநில அரசுகள் இவை வெற்றி பெற வேண்டும் என்றே விரும்பும். கார்ப்பரேட்டுக்கு முட்டுக்கட்டையாக இன்னொரு அமைப்பை வெற்றிகரமாக நடத்த முயலாது

யோசித்துப் பாருங்கள் - ஒன்றிரண்டு வருடங்களுக்குள் கார்ப்பரேட்டுகள் தாம் நிர்ணயிக்கும் விலைக்கு பொருளை விற்கும்படி விவசாயிகளை வற்புறுத்துவது நடக்கும். அப்போது ஆரோக்கியமாக அரசின் தலையீட்டுடன் கூடிய ஒரு மாற்று அமைப்பும் செயல்படுகிறது என்றால் (1) கார்ப்பரேட்டுகளால் லாபம் ஈட்ட முடியாமல் போகும்.

இன்னின்ன உணவுப்பொருட்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகள் நேரடியாக கோரும் நிலைமை வந்தாலே, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு ஏற்றுமதி பண்ண முடியும். இப்போது குறைந்தபட்ச ஆதரவு விலை இருப்பதால் தம்மால் சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என கார்ப்பரேட்டுகள் புகார் சொல்லுகிரார்கள். ஆக, இந்த சட்டம் நடைமுறைப்படுத்த அரசு சந்தையில் இருந்து விலகுவது அவசியம்; அதோடு இச்சட்டத்தின் வெற்றிக்கு ஏற்றுமதி அதிகமாவது, (2) அதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து செய்யப்படுவது அவசியம்.


இப்போது அரிசி, கோதுமை போன்ற அத்திவாசியமான தானியங்களை அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எடுத்து சேமித்து வைக்கிறது. இது ரேஷன் அட்டை மூலம் நாடு முழுக்க ஆதரவற்ற மக்களுக்கு அடிப்படையான உணவுப்பொருட்களை அனுப்பி வைப்பதை சுலபமாக்குகிறது. இப்போதுள்ள கொரோனா லாக்டவுன் போன்ற எமெர்ஜென்ஸி நிலைமையில் இந்தியாவில் பட்டினி சாவுகள் பெருமளவில் நடக்காததற்கு இந்த பெரும் சேமிப்பு ஒரு முக்கிய காரணம். ஆம், இதன் விளைவாக தானியங்கள் போதுமான பராமரிப்பு இல்லாமல் அழுகுவது, அவை பின்னர் மலிவாக இறுதியில் விற்கப்படுவது நடக்கிறது. ஆனால் இந்தியா  போன்ற ஏற்றத்தாழ்வுகள் மிக்க ஒரு நாட்டில் உணவு விசயத்தில் பற்றாக்குறை மட்டுமீறிப் போய் விடாமல் இது பாதுகாக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து எனும் கல்லினால் வீழ்த்தப்படும் அடுத்தமாங்காய்இந்த உணவுப் பாதுகாப்பே. ஜியின் அரசு ஆரம்பத்தில் இருந்தே ஒரு ரூபாய்க்கு அரிசு கொடுப்பது போன்ற திட்டங்களை விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போட்டு விடுவோம் என்றார்கள். ஏன்? உணவுப்பொருளின் சந்தை விநியோகத்தை அரசு தலையிட்டு கட்டுப்படுத்துவது அதை வைத்து வியாபாரிகள் வெளிச்சந்தையில் பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் சாத்தியத்தை இல்லாமல் ஆக்குகிறது. குஜராத்திகளின் புத்தி அப்படித்தானே போகும்! ஒரு பண்டத்தை நீங்கள் எந்தளவுக்கும் விலையை உயர்த்தி விற்க முடியும். ஆனால் பணத்தை விற்க முடியாது. அதனால் தான் ஜியின் மார்வாரி அரசு பண்டங்களை மலிவு விலையில் கொடுப்பதை வெறுக்கிறது. இதற்கு (3) முக்கியமான தடையாக இன்றும் இருப்பது குறைந்தபட்ச ஆதரவு விலை. ஆகையால் அதை ஒழித்துக் கட்டுவது ஜியின் அரசின் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


அடுத்து, வேளான் சட்டங்களால் விளைபொருட்களை வெளிச்சந்தையில் (open market) விற்க நேர்ந்து அதனால் விவசாயிகளுக்கு பல மடங்கு அதிக லாபம் கிடைக்கும் என ஜியின் அரசு சொல்கிறது. இந்த வெளிச்சந்தை வியாபாரத்தில் சந்தையின் தேவையைப் பொறுத்தே பொருளின் விலையும் தீர்மானிக்கப்படும். .தா., அரிசியை அரசு கொள்முதல் செய்து சேமிக்காமல் மொத்தமும் தனியார் சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படும் போது மெல்ல மெல்ல கிலோவுக்கு 1 ரூபாயில் இருந்து 40-60 ரூ வரை அரிசி கடும் வித்தியாசங்களுக்கு உட்பட்டு விற்கப்படுவது நின்று, பெரும்பாலானோர் கிலோவுக்கு 40 ரூ கொடுத்து வாங்கியாக வேண்டிய நிலை வரும்; இது ஏழைகளை மட்டுமல்ல மத்திய வர்க்கத்தையே பின்னர் பெருமளவு பாதிக்கப் போகிறது. விலை ஏன் அதிகமாகிறது எனக் கேள்வி எழுப்பினால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது, அதனால் என பழியை அந்த பக்கம் தள்ளி விட்டு விடுவார்கள்.

 அரிசியின் உற்பத்தி அதிகமாகினால் மிச்ச அரிசியை சேமித்து வைத்து மக்களுக்கு வருடம் முழுக்க குறைந்த விலையில் அது போய் சேர விடாமல் முதலாளிகள் தம் கையிருப்பு வைத்து அதை ஒன்று ஏற்றுமதி செய்வார்கள் அல்லது அரிசி உற்பத்தியை குறைக்கும் படி முதலாளிகள் ஆணையிடுவார்கள். இந்த முறைமையினால் முதலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் சமமான நலன் இருக்கும் என ஜியின் அரசு கருதுகிறது. இதற்கு நேரெதிரான விசயம் குறைந்தபட்ச ஆதரவு விலை. அது இருந்தால் இது இருக்காது, இது இருந்தால் அது இருக்காது. கார்ப்பரேட்டுகளின் வெளிச்சந்தை வணிகமும் இருக்கும், அதில் குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்காது, அதுவே லாபமானது என்று விட்டு, (4) எது விவசாயிகளின் லாபத்துக்கு விரோதமானது என ஜியின் அரசு நினைக்கிறதோ அதையும் தக்க வைப்போம் என சொல்வது நம்பும்படியாக இல்லை, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அதாவது நீங்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்கிறீர்கள், அவர் நீங்கள் இன்னின்ன மருந்துகளை சாப்பிடுங்கள், மருந்து மட்டுமே உங்களைக் காப்பாற்றும், ஆனால் மருந்தில் நம்பிக்கை இல்லையென்றால் வெறுமனே யோகாவும் தியானமும் மட்டும் பண்ணுங்கள் எனக் கூறினால் அந்த மருத்துவர் ஒரு லூசு என நினைக்க மாட்டீர்கள்? அப்படித்தான் இருக்கிறது ஜி தரும் வாக்குறுதி. அவர் எது தவறு என சொல்கிறாரோ அதையே நீட்டிப்போம் என்றும் சொல்கிறார். அவர் சொல்வது பொய் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...