Skip to main content

குறைந்தபட்ச ஆதரவு விலை: ஜியின் 4 பொய்கள்




ஜி தனது வேளாண் சட்டங்களை முட்டுக்கொடுத்து எழுச்சிகரமாக ஆற்றிய உரையில்குறைந்த பட்ச ஆதரவு விலையை (MSP) நீக்க மாட்டோம், அவை தொடரும்எனக் கூறுகிறார். ஆனால் இன்னொரு பக்கம் இந்த MSP வேளாண் சட்டத்துக்குள் கொண்டு வர மாட்டேன் என பிடிவாதமாகவும் இருக்கிறார். “நீங்க வாயால் சொன்னால் போதாது, அதற்கு மதிப்பில்லை, எழுத்தில் கொடுங்க, குறைந்தது பாராளுமன்றத்தில் சொல்லுங்கஎன விவசாயிகள் கேட்கிறார்கள். இதற்கு ஒரு காரணம் ஜி ஏற்கனவே இது போல வானுயர பொய்களை ஏகத்துக்கு சொல்லி இருக்கிறார், பொய்க்கோட்டைகளை எழுப்புவதில் பலவரலாற்று சாதனைகளைப்படைத்திருக்கிறார் என்பது. இதில் () ஜியின் ஆசான் நமது முன்னாள் ஜனாதிபதி கலாம் ஜி தான் - அவர் இன்று இருந்திருந்தால் 2050இல் நாம் வல்லரசு ஆவோம் என உணர்ச்சிகரமாய் கூறியிருப்பார். 2050 வரை உயிருடன் இருந்தால் 3000இல் என மாற்றி விடலாம். இப்படித்தான் நமது ஜியும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பத்து உணர்வெழுச்சியான வாக்குறுதிகளைக் கொடுப்பார். அவர் மலைமலையாக குவிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என பிடிவாதம் வேறு பிடிப்பார், அல்லது அதைப் பற்றி பேசவே மறுத்து விடுவார். எல்லா கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டும் செய்வதை ஜி அனுதினமும் செய்வார். உணர்ச்சி தான் முக்கியம், செயல் தீவிரமோ நடைமுறை மாற்றமோ அல்ல என ஜியின் ஆதரவாளர்கள் இதற்கு முட்டுக்கொடுப்பார்கள். இவ்விசயத்தில் அடுத்து () ஜியின் அடுத்த ஆசான்கள் சுயமுன்னேற்ற எழுத்தாளர்கள் / பேச்சாளர்கள் - “எப்படி வெற்றியாளன் ஆவது? கோடீஸ்வரன் ஆவது?” என அவர்கள் பேசுவதைக் கேட்டால் நாளையே நாம் பில் கேட்ஸ் ஆகி விடுவோம் என ஒரு ஆவேசமும் போலித் திருப்தியும் கிடைக்கும்; ஆனால் அவர்கள் தாம் சொல்லும் எந்த கருத்தையும், பரிந்துரையையும் வாழ்க்கையில் செயல்படுத்தி வென்றிருக்க மாட்டார்கள், மாறாக இவற்றை நம்மை செயல்படுத்த சொல்லி கோடிக்கணக்கில் புத்தகங்களை விற்று கோடீஸ்வரர் ஆகி விடுவார்கள். ஜி இதை அரசியலில் செயல்படுத்தி வானுயர வடை சுட்டு அதை நம்மையே வாங்கித் தின்ன வைத்த ஜெகஜால கில்லாடி


குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் கைவிடப்படும் என நினைக்கிறேன்?

முந்தைய அமைப்பை முழுக்க மாற்றி, அரசின் தலையீடு இன்றி கார்ப்பரேட்டுகளுக்கு வேளாண் சந்தையை திறந்து விடுவதே இந்த சட்டங்களின் குறிக்கோள். இவை நிலுவையில் வரும் போது மாநில அரசுகள் இவை வெற்றி பெற வேண்டும் என்றே விரும்பும். கார்ப்பரேட்டுக்கு முட்டுக்கட்டையாக இன்னொரு அமைப்பை வெற்றிகரமாக நடத்த முயலாது

யோசித்துப் பாருங்கள் - ஒன்றிரண்டு வருடங்களுக்குள் கார்ப்பரேட்டுகள் தாம் நிர்ணயிக்கும் விலைக்கு பொருளை விற்கும்படி விவசாயிகளை வற்புறுத்துவது நடக்கும். அப்போது ஆரோக்கியமாக அரசின் தலையீட்டுடன் கூடிய ஒரு மாற்று அமைப்பும் செயல்படுகிறது என்றால் (1) கார்ப்பரேட்டுகளால் லாபம் ஈட்ட முடியாமல் போகும்.

இன்னின்ன உணவுப்பொருட்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகள் நேரடியாக கோரும் நிலைமை வந்தாலே, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு ஏற்றுமதி பண்ண முடியும். இப்போது குறைந்தபட்ச ஆதரவு விலை இருப்பதால் தம்மால் சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என கார்ப்பரேட்டுகள் புகார் சொல்லுகிரார்கள். ஆக, இந்த சட்டம் நடைமுறைப்படுத்த அரசு சந்தையில் இருந்து விலகுவது அவசியம்; அதோடு இச்சட்டத்தின் வெற்றிக்கு ஏற்றுமதி அதிகமாவது, (2) அதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து செய்யப்படுவது அவசியம்.


இப்போது அரிசி, கோதுமை போன்ற அத்திவாசியமான தானியங்களை அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எடுத்து சேமித்து வைக்கிறது. இது ரேஷன் அட்டை மூலம் நாடு முழுக்க ஆதரவற்ற மக்களுக்கு அடிப்படையான உணவுப்பொருட்களை அனுப்பி வைப்பதை சுலபமாக்குகிறது. இப்போதுள்ள கொரோனா லாக்டவுன் போன்ற எமெர்ஜென்ஸி நிலைமையில் இந்தியாவில் பட்டினி சாவுகள் பெருமளவில் நடக்காததற்கு இந்த பெரும் சேமிப்பு ஒரு முக்கிய காரணம். ஆம், இதன் விளைவாக தானியங்கள் போதுமான பராமரிப்பு இல்லாமல் அழுகுவது, அவை பின்னர் மலிவாக இறுதியில் விற்கப்படுவது நடக்கிறது. ஆனால் இந்தியா  போன்ற ஏற்றத்தாழ்வுகள் மிக்க ஒரு நாட்டில் உணவு விசயத்தில் பற்றாக்குறை மட்டுமீறிப் போய் விடாமல் இது பாதுகாக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து எனும் கல்லினால் வீழ்த்தப்படும் அடுத்தமாங்காய்இந்த உணவுப் பாதுகாப்பே. ஜியின் அரசு ஆரம்பத்தில் இருந்தே ஒரு ரூபாய்க்கு அரிசு கொடுப்பது போன்ற திட்டங்களை விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போட்டு விடுவோம் என்றார்கள். ஏன்? உணவுப்பொருளின் சந்தை விநியோகத்தை அரசு தலையிட்டு கட்டுப்படுத்துவது அதை வைத்து வியாபாரிகள் வெளிச்சந்தையில் பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் சாத்தியத்தை இல்லாமல் ஆக்குகிறது. குஜராத்திகளின் புத்தி அப்படித்தானே போகும்! ஒரு பண்டத்தை நீங்கள் எந்தளவுக்கும் விலையை உயர்த்தி விற்க முடியும். ஆனால் பணத்தை விற்க முடியாது. அதனால் தான் ஜியின் மார்வாரி அரசு பண்டங்களை மலிவு விலையில் கொடுப்பதை வெறுக்கிறது. இதற்கு (3) முக்கியமான தடையாக இன்றும் இருப்பது குறைந்தபட்ச ஆதரவு விலை. ஆகையால் அதை ஒழித்துக் கட்டுவது ஜியின் அரசின் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


அடுத்து, வேளான் சட்டங்களால் விளைபொருட்களை வெளிச்சந்தையில் (open market) விற்க நேர்ந்து அதனால் விவசாயிகளுக்கு பல மடங்கு அதிக லாபம் கிடைக்கும் என ஜியின் அரசு சொல்கிறது. இந்த வெளிச்சந்தை வியாபாரத்தில் சந்தையின் தேவையைப் பொறுத்தே பொருளின் விலையும் தீர்மானிக்கப்படும். .தா., அரிசியை அரசு கொள்முதல் செய்து சேமிக்காமல் மொத்தமும் தனியார் சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படும் போது மெல்ல மெல்ல கிலோவுக்கு 1 ரூபாயில் இருந்து 40-60 ரூ வரை அரிசி கடும் வித்தியாசங்களுக்கு உட்பட்டு விற்கப்படுவது நின்று, பெரும்பாலானோர் கிலோவுக்கு 40 ரூ கொடுத்து வாங்கியாக வேண்டிய நிலை வரும்; இது ஏழைகளை மட்டுமல்ல மத்திய வர்க்கத்தையே பின்னர் பெருமளவு பாதிக்கப் போகிறது. விலை ஏன் அதிகமாகிறது எனக் கேள்வி எழுப்பினால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது, அதனால் என பழியை அந்த பக்கம் தள்ளி விட்டு விடுவார்கள்.

 அரிசியின் உற்பத்தி அதிகமாகினால் மிச்ச அரிசியை சேமித்து வைத்து மக்களுக்கு வருடம் முழுக்க குறைந்த விலையில் அது போய் சேர விடாமல் முதலாளிகள் தம் கையிருப்பு வைத்து அதை ஒன்று ஏற்றுமதி செய்வார்கள் அல்லது அரிசி உற்பத்தியை குறைக்கும் படி முதலாளிகள் ஆணையிடுவார்கள். இந்த முறைமையினால் முதலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் சமமான நலன் இருக்கும் என ஜியின் அரசு கருதுகிறது. இதற்கு நேரெதிரான விசயம் குறைந்தபட்ச ஆதரவு விலை. அது இருந்தால் இது இருக்காது, இது இருந்தால் அது இருக்காது. கார்ப்பரேட்டுகளின் வெளிச்சந்தை வணிகமும் இருக்கும், அதில் குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்காது, அதுவே லாபமானது என்று விட்டு, (4) எது விவசாயிகளின் லாபத்துக்கு விரோதமானது என ஜியின் அரசு நினைக்கிறதோ அதையும் தக்க வைப்போம் என சொல்வது நம்பும்படியாக இல்லை, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அதாவது நீங்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்கிறீர்கள், அவர் நீங்கள் இன்னின்ன மருந்துகளை சாப்பிடுங்கள், மருந்து மட்டுமே உங்களைக் காப்பாற்றும், ஆனால் மருந்தில் நம்பிக்கை இல்லையென்றால் வெறுமனே யோகாவும் தியானமும் மட்டும் பண்ணுங்கள் எனக் கூறினால் அந்த மருத்துவர் ஒரு லூசு என நினைக்க மாட்டீர்கள்? அப்படித்தான் இருக்கிறது ஜி தரும் வாக்குறுதி. அவர் எது தவறு என சொல்கிறாரோ அதையே நீட்டிப்போம் என்றும் சொல்கிறார். அவர் சொல்வது பொய் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...