“இதுவரைக்கும் கடலை சாப்பிட்டு விட்டுப் போனவர்கள் தாம் பிக்பாஸை வென்றிருக்கிறார்கள்” எனும் பட்டவர்த்தமான உண்மையை பாலா எப்படியோ தெரியாத்தனமாய் உளறி விட்டார். முதல் பிக்பாஸில் இருந்து இந்த நான்காவது பருவம் வரை அது தான் திரும்பத் திரும்ப நடந்திருக்கிறது. முதல் பருவத்தில் ஆரவ், அதற்கு அடுத்த பருவத்தில் ரித்விகா, அதற்கு அடுத்து முகென் ஆகியோர் உண்மையிலேயே மிக்சர் பார்ட்டிகள் தாம். விறுவிறுப்பாக தீவிரமாக ஆடியவர்கள் அல்ல. பிக்பாஸின் வெற்றியாளர்கள் நியாயமாக தேர்வு செய்யப்படுவதில்லை, அது fixed என்பது ஊருக்கே தெரிந்த விசயம். இந்த முறை சனம், சுரேஷ், சம்யுக்தா போன்றோரின் வெளியேற்றம், நிஷா, அர்ச்சனா, சோம், ஆஜீத் போன்ற சொம்புகளை, மிக்சர் பார்ட்டிகளை, கம்பனி ஆர்ட்டிஸ்டுகளை தக்க வைத்தது கேலிக்கூத்தாக இருந்தது. இது சமூகவலைதளங்களில் மட்டுமல்ல செய்தித்தளங்களில் கூட பேசப்பட்டது.
“பிக்பாஸ்” மட்டுமல்ல சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் இப்படித்தான் அபத்தமாக, யாருமே ஏற்றுக்கொள்ள முடியாதபடி வெற்றியாளர்களை தேர்வு செய்கிறார்கள். அரவிந்தாக்ஷன் சர்ச்சை நினைவிருக்கும். மூக்குத்தி முருகன் எனும் தகுதியற்ற பாடகருக்கு கோப்பையைக் கொடுத்ததும் கூட மக்கள் கலைஞர்களை ஆதரிக்கிறோம் எனும் பிம்பத்தை உருவாக்கத்தான். அப்படித்தானே விஜய் டிவிக்கு **** டிவி எனும் பெயர் வந்தது. “நீங்கள் அடைய விரும்பும் கோப்பையை நீங்களே இப்படி அசிங்கப்படுத்தலாமா?” என கமல் இன்று பாலாவிடம் பொங்கியது நியாயமல்ல. திரும்பத் திரும்ப தப்பு செய்தால் மக்கள் காறித் துப்பத்தான் செய்வார்கள். அதை தான் பாலா தெரியாத்தனமாய் வெளிப்படுத்தி விட்டார். அதைப் புரிந்து பிக்பாஸ் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். உண்மையை சொல்கிறவர்களின் வாயை அடைத்தால் நீங்கள் சிரிப்பு பாஸாகத் தான் இருப்பீர்கள்.
மக்கள் தான் வாக்களிக்கிறார்கள் என்றால் அதே மக்களை உங்களை காறித் துப்புவார்களா?
பாலாஜியின் மாரை விரித்து சட்டை பொத்தானை திறந்து போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் ஆண்மை போலியானது; அவருக்கு கத்தத் தெரியும், ஆனால் தான் ஏற்கனவே சொன்ன உண்மையை அதிகாரத்தின் முன் நியாயப்படுத்த தெரியாது. பணத்தை கொடுக்காமல் துரத்தி விடுவார்களோ எனும் நடுக்கம். மனம் முழுக்க பயம். அப்படி பம்முகிறார். அவர் ஒரு பாடிபில்டர் சொம்பு மட்டுமே. ஷிவானிக்கு உள்ள துணிச்சல் கூட இவருக்கு இல்லை.


Comments