முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடலை தின்பவர்களின் பிக்பாஸ், முட்டுக்கொடுக்கும் கமல்




“இதுவரைக்கும் கடலை சாப்பிட்டு விட்டுப் போனவர்கள் தாம் பிக்பாஸை வென்றிருக்கிறார்கள்” எனும் பட்டவர்த்தமான உண்மையை பாலா எப்படியோ தெரியாத்தனமாய் உளறி விட்டார். முதல் பிக்பாஸில் இருந்து இந்த நான்காவது பருவம் வரை அது தான் திரும்பத் திரும்ப நடந்திருக்கிறது. முதல் பருவத்தில் ஆரவ், அதற்கு அடுத்த பருவத்தில் ரித்விகா, அதற்கு அடுத்து முகென் ஆகியோர் உண்மையிலேயே மிக்சர் பார்ட்டிகள் தாம். விறுவிறுப்பாக தீவிரமாக ஆடியவர்கள் அல்ல. பிக்பாஸின் வெற்றியாளர்கள் நியாயமாக தேர்வு செய்யப்படுவதில்லை, அது fixed என்பது ஊருக்கே தெரிந்த விசயம். இந்த முறை சனம், சுரேஷ், சம்யுக்தா போன்றோரின் வெளியேற்றம், நிஷா, அர்ச்சனா, சோம், ஆஜீத் போன்ற சொம்புகளை, மிக்சர் பார்ட்டிகளை, கம்பனி ஆர்ட்டிஸ்டுகளை தக்க வைத்தது கேலிக்கூத்தாக இருந்தது. இது சமூகவலைதளங்களில் மட்டுமல்ல செய்தித்தளங்களில் கூட பேசப்பட்டது.


“பிக்பாஸ்” மட்டுமல்ல சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் இப்படித்தான் அபத்தமாக, யாருமே ஏற்றுக்கொள்ள முடியாதபடி வெற்றியாளர்களை தேர்வு செய்கிறார்கள். அரவிந்தாக்‌ஷன் சர்ச்சை நினைவிருக்கும். மூக்குத்தி முருகன் எனும் தகுதியற்ற பாடகருக்கு கோப்பையைக் கொடுத்ததும் கூட மக்கள் கலைஞர்களை ஆதரிக்கிறோம் எனும் பிம்பத்தை உருவாக்கத்தான். அப்படித்தானே விஜய் டிவிக்கு **** டிவி எனும் பெயர் வந்தது. “நீங்கள் அடைய விரும்பும் கோப்பையை நீங்களே இப்படி அசிங்கப்படுத்தலாமா?” என கமல் இன்று பாலாவிடம் பொங்கியது நியாயமல்ல. திரும்பத் திரும்ப தப்பு செய்தால் மக்கள் காறித் துப்பத்தான் செய்வார்கள். அதை தான் பாலா தெரியாத்தனமாய் வெளிப்படுத்தி விட்டார். அதைப் புரிந்து பிக்பாஸ் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். உண்மையை சொல்கிறவர்களின் வாயை அடைத்தால் நீங்கள் சிரிப்பு பாஸாகத் தான் இருப்பீர்கள்.

மக்கள் தான் வாக்களிக்கிறார்கள் என்றால் அதே மக்களை உங்களை காறித் துப்புவார்களா?

 பாலாஜியின் மாரை விரித்து சட்டை பொத்தானை திறந்து போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் ஆண்மை போலியானது; அவருக்கு கத்தத் தெரியும், ஆனால் தான் ஏற்கனவே சொன்ன உண்மையை அதிகாரத்தின் முன் நியாயப்படுத்த தெரியாது. பணத்தை கொடுக்காமல் துரத்தி விடுவார்களோ எனும் நடுக்கம். மனம் முழுக்க பயம். அப்படி பம்முகிறார். அவர் ஒரு பாடிபில்டர் சொம்பு மட்டுமே. ஷிவானிக்கு உள்ள துணிச்சல் கூட இவருக்கு இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...