முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அல்லிக்கேணி



அண்மையில் வாசித்ததில் ஒரு மறக்க முடியாத அனுபவம் ராம்ஜியின் “அல்லிக்கேணி”. அவர் இதை பேஸ்புக்கில் எழுதும் போது துண்டுத்துண்டாக வாசித்த போது என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் நூலாக வாசிக்கையில் இவரை இவ்வளவு நாளும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே எனத் தோன்றியது. இந்த நூலில் அப்படி என்ன பிடித்திருக்கிறது?

1) நகைச்சுவை - தனியாக படிக்கையில் பல இடங்களில் சத்தம் போட்டு சிரித்தேன், கூட்டத்தின் நடுவே இருக்கையில் மௌனமாக புன்னகைத்தேன். தமிழில் நகைச்சுவை எழுத்து என ஒரு வகைமை உண்டெனில் நிச்சயமாக ராம்ஜியின் எழுத்து மேல்தளத்தில் இருக்கும். அவர் தன்னை, தன் நண்பர்களை, தோழிகளை, அம்மாவை, அப்பாவை, பிடித்தவர்களை, பிடிக்காதவர்களை என விதிவிலக்கில்லாமல் பகடி பண்ணுகிறார். ஆனால் இவர்களை அவர் தட்டையான கோட்டோவியமாக்குவதில்லை. குள்ளமாக இருந்து தாவித் தாவிட அடிக்கிற அவரது அம்மாவின் பாத்திரம் வேறு சில இடங்களில் அழுத்தமான, முதிர்ச்சியானவராகத் தெரிகிறார். அழகான, கவர்ச்சியான, புத்திசாலித்தனமான தோழியரையும் அபத்தமானவர்களாக காட்டத் தவறுவதில்லை. அவர் யாரையெல்லாம் மகத்தானவர்களாக காட்டுகிறாரோ அவர்களுடைய ஏதாவது ஒரு கோணலையும் காட்டி விடுகிறார். 


2) எழுத்தாளுமை - சிலருக்கு வசீகரமான ஆளுமை இருக்கும், அது எழுத்தில் தெரியாது. சிலருக்கு எழுத்தில் மட்டுமே வெளிப்படும் ஒரு தனி ஆளுமை இருக்கும். ராம்ஜி அப்படியானவர். இந்த நூல் நெடுக கதைசொல்லியின் அப்படியான ஒரு தனித்த இயல்பு துலங்குகிறது. அந்த குரலைக் கேட்கவே நூலை விடாமல் படிக்கிறோம். அதனாலே ரௌடிகள், தாதாக்கள், விசித்திரமான வழக்கறிஞர் என சுவாரஸ்யமாக சில அத்தியாயங்கள் செல்லும் போதும் நமக்கு அலுப்பேற்படுகிறது; ஆனால் ராம்ஜியும் அவரது நண்பர்கள், தோழியர் திரும்பும் போது எழுத்து மீண்டும் சூடு பிடிக்கிறது.  


3) பெண் பாத்திரங்கள். பெண்களை அவ்வளவு அணுக்கமாக இருந்து பார்த்து புரிந்து கொண்டவரைப் போல சில பாத்திரங்களை வடித்துள்ளார். ஒரே சமயம் அன்பும் புரிதலும் குரூரமும் குழப்பங்களும் மிக்கவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். Male gaze என்று சொல்வார்களே அந்த ஆண் நோக்கு, அது இல்லாமல் இப்பெண்கள் உயிரோட்டமாக இருக்கிறார்கள். 


ராம்ஜியின் எழுத்தில் உள்ள பலவீனம் அசோகமித்திரன், சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரின் சாயல். இதைக் கைவிட்டாரெனில் அவரால் சொந்த ஸ்டைலுடன் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளராக வர முடியும் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...