முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவின் எதிர்காலம் - ஜெய் ஸ்ரீராம்?


இந்த தேர்தலில் படுதோல்வி உற்றால் பாதி அதிமுக தலைவர்கள் பாஜகவுக்கு தொண்டர்களுடன் சாதி சமூக ஆதரவுடன்  இடம்பெயர்வார்கள். பாஜகவுக்கு இங்கே எந்த உள்கட்டமைப்பு வசதி, தொண்டர் படையும் இல்லாததால் இப்படி மானம் கெட்டு அவுட் சோர்ஸ் செய்வதே ஒரே வழி. ஆனால் பாஜகவுக்கு போகிற அதிமுவினர்களுக்கு கொள்கை அளவில் சிக்கல் இராது (கொள்கையே இல்லையே) என்றாலும் அங்கு அண்ணாமலை, மதுவந்தி, எஸ்.வி சேகர் போன்றோருடன் போட்டி போட வேண்டும் என்பதே கொடுமை. இது போக ரவீந்திரன் துரைசாமி, குருமூர்த்தி போன்ற புரோக்கர்களின் காலிலே விழுந்து கிடக்க வேண்டும். அதிகாரம் மிக்க ஜெயா, சசியின் கால்களில் இருந்து இந்த புரோக்கர்களின் கால்களுக்கான இடப்பெயர்வு ஒரு அசிங்கம் தானே. புதிய தலைமுறை வட்டமேஜை விவாதத்தில் மாபா பாண்டியராஜனின் முகத்தில் இப்போதே சவக்களை தெரிகிறது. 
மீதமுள்ளோர் சசியின் அணிக்கு சென்று விடுவார்கள். 

இவ்விசயத்தில் திமுகவுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. தமிழகத்தில் அவர்களுக்கு எதிர்த்தரப்பாக அதிமுக இருப்பதே திமுகவுக்கும் தமிழகத்துக்கும் நல்லது. ஆகையால் அதிமுக சிதறாமல் அவர்கள் பாதுகாத்து, பாஜகவின் கையில் இருந்து பாதுகாக்க முயல வேண்டும். இல்லாவிட்டால் காலியாகும் இடத்தில் பாஜகவின் பி, சி டிம்களே பெருகும். அவர்களுடன் சேர்ந்து அதிமுகவை கைப்பற்றி பாஜகவும் வந்து எதிரே உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணும்.
இன்றைய அதிமுக அமைச்சர்கள் நாளை யோகியை இங்கே அழைத்து வந்து 'மசூதியை இடிப்போம், ஜெய் ஸ்ரீராம்' என முழங்க ரொம்ப நாள் ஆகாது. அதிமுக தலைமையின் மதப்பற்றை மதவெறியாக, மாற்று மதத்தவர் மீதான வெறுப்பாக உருமாற்றுவது சுலபம்!

 உங்களுக்கே தெரியும் பார்ப்பனியம் எப்படி வந்து தாக்கும் என - அதற்கு கட்சி சார்பு இல்லை. அது நேரில் நின்று எதிர்க்காது. முன்பு காங்கிரசை அது ஆக்கிரமித்து ஆட்டம் போட்டதாலே பெரியார் வெளியேறி இங்கு திராவிட இயக்கத்தை முன்னெடுத்தார். இன்று அதே பார்ப்பனியம் பாஜகவில் இருந்து காங்கிரஸை எதிர்த்து அழிக்கிறது. ஒரு காலை பாஜகவில் வைத்தபடி இன்னொரு காலை அதிமுகவில் வைக்க எவ்வளவு நேரமாகும்? அதனால் தான் சொல்கிறேன்: இன்று கர்நாடக பாஜகவின் தேஜ்ஸ்வி தமிழ் மண்ணில் நின்று பெரியார் பற்றி சொன்னதை நாளை அதிமுக தலைவர்கள் வாயாலே சொல்ல வைப்பார்கள். 

 ஒரு மருத்துவர் நோயாளியின் உடலில் நுழைந்துள்ள கிருமிகளை அழிப்பதற்கு எப்படியான சிகிச்சை அளிப்பாரோ அதையே அதிமுகவுக்கும் நாம் செய்ய் வேண்டும். ஏனென்றால் அடிவாங்குவது அடுத்தவன் தானே என நாம் நினைத்தால் அடுத்து அது நம் உடலில் நுழையும்! திமுக தலைமை புத்திசாலி என்றால் சுதாரிக்கும்!

கருத்துகள்

'பசி'பரமசிவம் இவ்வாறு கூறியுள்ளார்…
தி.மு.க. தலைமை மட்டுமல்ல, தமிழர் நலம் நாடும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய பதிவு இது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...