முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜய் மீது கடுப்பாகும் சீமான்?



சீமானின் “கர்வாப்ஸி” பேச்சைக் கேட்ட போது ஒருவிசயம் தெளிவாகியது: அவருக்கு தன்னுடைய சுயசாதி, தமிழ் தேசிய தொண்டர் படை தன்னை விட்டுப் போகிறதோ எனும் அச்சம் அவருக்கு உண்டாகி இருக்கிறது. அந்த பேச்சில் அவருடைய முகத்திலும், குரலிலும் அந்த பதற்றம், கசப்பு தெரிகிறது. இந்த அச்சம் விஜய்யின் ரசிகர் மன்றம் உள்ளாட்சி தேர்தலில் 120க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளது மிகப்பெரிய கவனத்தை ஊடகங்களில் பெற்றது, நாம் தமிழர் கட்சி இன்னொரு பக்கம் இதே தேர்தலில் டவுசர் கழன்று போயுள்ளது குறித்த கேலி, கேள்விகளில் இருந்து வருகிறது. இன்னும் தெளிவாக சொல்லுவதானால், விஜய் தன்னுடைய சாதியை சேர்ந்த மற்றும் சேராத இளைஞர்களை மொத்தமாக அள்ளிக் கொண்டு போய் விடுவாரோ என சீமான் பதறுகிறார். ஒருவேளை விஜய்யின் ரசிகர் மன்றம் ஒரு கட்சியாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு இதே போல கணிசமான வாக்குகளைப் பெற்றால் அது சீமானின் வாக்குவங்கியை அரித்து விடும். 

ஆக சீமான் தமிழரின் பூர்வ மதம் இந்து மதம், கிறித்துவர்களும், இஸ்லாமியரும் அம்மதங்களை பின்பற்றும் வரையில் தமிழர்களாக அவர்களை ஏற்க முடியாது என்கிறார். இந்து மதம் என்று சொன்னால் தான் பாஜகவுடன் நேரடியாக அடையாளப்படுத்தப் படுவோம் என பயப்படும் அவர் சைவமும், மால்யமும் இந்து மதங்கள் அல்ல என்கிறார். கவனியுங்கள், சைவமும் வைணவமும் வைதீக மதங்கள் அல்ல என்று அவர் கூறவில்லை. வில்லியம் ஜோன்ஸ் சட்டமியற்றி தமிழர் மதங்களை இந்து மதம் என பெயர் மாற்றி விட்டார், அப்பெயரை நீக்கினால் அவை தமிழர் மதமாகி விடும் என குழப்புகிறார். வரலாறும், மெய்யியலும் அறிந்த எவரும் இந்த அபத்தமான விளக்கத்தை ஏற்க மாட்டார்கள். இந்து மதம் என அறியப்பவடுகிற பிரதான இரு கிளைகள் வைணவமும் சைவமும். இரண்டுமே அத்வைதத்தின் மெய்யியல் படி தொடர்ந்து விளக்கப்பட்டு வருகின்றன. தொன்மங்களும் அவ்வாறே வடிக்கப்பட்டுள்ளன. சீமான் வழிபடும் வடபழனி முருகனும் தான். சிவனையோ விஷ்ணுவையோ வைதீக பூச்சுகளை ஒழித்து பழங்குடி தெய்வங்களாக்கும் எந்த முயற்சியையோ சீமானின் கட்சியினர் எடுக்கவில்லை. சைவத்தை பக்தி காலகட்டத்தில் எப்படி முன்வைத்தார்களோ அப்படித்தான் சீமானும் பார்க்கிறார். சொல்லப் போனால் சிவனை வைதீக எதிர்ப்புக் கடவுளாக மறுகட்டமைப்பு பண்ணுவதும் அவருடைய நோக்கமல்ல; அவர் மதநம்பிக்கையும் சுயசாதி பாசமும் கொண்ட ஒரு மக்கள் திரளை தமிழ் தேசிய முலாம் பூசி தன் வசம் இழுக்க இப்போது முயல்கிறார். இந்து என்று சொன்னால் எடுபடாது என்றால் சைவம் எனும் தமிழர் மதம் என ஒரு புதிய கதையாடலை எடுத்து விடுகிறார். இங்கு தான் விஜய்க்கும் ஒரு செக் வைக்கிறார்:


விஜய்யை ஏற்கனவே கிறித்துவ வந்தேறி என பாஜக எதிர்க்க முயன்று தோற்றது. இப்போது சீமான் அதையே விஜய்யின் பெயர் சொல்லாமல் செய்கிறார். விஜய் நம்முடைய சாதி நடிகர் என்று எண்ணி பின்னால் போகாதீர்களடா, அவர் கிறித்துவர், அதனாலே அவர் தமிழர் அல்ல என்று தன் தம்பிகளை கையைப் பிடித்து இழுக்கிறார்.

சீமான் இதற்கு முன்பும் அவ்வப்போது விஜய்யை “என் தம்பி” என்று கூறுவது, பின்னர் தாக்குவது என இருந்திருக்கிறார். குறிப்பாக, தன்னுடைய 6% வாக்குகளுக்கு பங்கு வந்து விடுமோ என பயம் வரும் போது அவர் “அரசியல் செய்யாமல் நேரடியாக தேர்தலில் போட்டியிடும் நடிகர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று விஜய்யையும் சேர்த்து சாடுவார். இப்போது ஒரு படி மேலே சென்று “அந்நிய மிஷினரி” என்று தாக்கி விட்டு கூடவே இருக்கட்டும் என “அரபு வந்தேறிகள்” என இஸ்லாமியரையும் சாடி இருக்கிறார். கோபத்தில், அச்சத்தில் நிதானத்தை இழந்திருக்கிறார்.

 ஆனால் இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் சீமானின் வீழ்ச்சி வரும் பத்தாண்டில் வேகமெடுக்கும் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...