முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்துத்துவத்தை 'ஆதரிக்கும்' சிறுபான்மையினர்

 

கர்நாடகத்திற்கு வந்த பிறகு நான் காணும் ஒரு வித்தியாசமான போக்கு இங்குள்ள நான் கண்டவரையிலான (பெரும்பாலும் கத்தோலிக்க) கிறித்துவர்கள் பாஜகவை ஆதரிப்பதே. சிலர் கிறித்துவர்களாக இருந்தபடியே இந்து மதச்சின்னங்களை அணிகிறார்கள், இந்துப் பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். பாஜகவில் இல்லாத கிறித்துவர்களிடமும் கடுமையான இஸ்லாமிய வெறுப்புள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் விளையாட்டு மைதானங்கள், அவர்களுடைய மதக்கூட்டங்கள் சார்ந்து. என்னுடைய மாவட்டமான குமரியிலும் ஒரு பகுதி புரொட்டெஸ்டெண்ட் கிறித்துவர்கள் பாஜகவை ஆதரிப்பதாக, மத குருமார்கள் பாஜக தலைவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக அறிகிறேன். நான் சென்னையில் படித்த போது இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தது. அப்போது இதைக் கண்டித்து எங்கள் கல்லூரியில் கூட்டமும், பிரார்த்தனையும் நடந்தது. அப்போது கிறித்துவ மாணவர்களிடம் ஒருவிதமான இஸ்லாமிய வெறுப்பை, அதனாலேயே தீவிர அமெரிக்க ஆதரவைக் கண்டேன்.

வேறு மாநிலங்களில் என்ன நிலையெனத் தெரியவில்லை. இம்மக்கள் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரித்துக் கொண்டே தேர்தலில் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த இரு மக்களவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் வாக்களித்ததாக ஒரு புள்ளிவிபரம் சொல்லப்பட்டதே அதை எப்படிப் புரிந்து கொள்ள?
அதாவது மீண்டும் சொல்கிறேன் நான் பார்த்த அளவில் மட்டுமே இதைச் சொல்கிறேன். நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை. கடந்த சில மாதங்களாகவே என்னை அலைகழிக்கிற குழப்பம் இது. உங்களுக்குத் தெரிந்த பதிலைக் கூறுங்கள்.
என்னுடைய கேள்விகள்:

1) நாம் சிறுபான்மையினர் எனப் பார்க்கப்படும் மக்கள் இந்துத்துவாவை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்கள் தம்மை பெரும்பான்மையின் பகுதி என நினைக்கிறார்களா?

2) அவர்கள் மதவாதத்தை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா?
தமிழகத்தினுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையினர் இடையே இந்துத்துவ எதிர்ப்பு ஒவ்வொரு அளவில் இருக்கிறதா?

3) இந்துத்துவா என்றால் இந்து பெரும்பான்மைவாதம் எனில் கிறித்துவர்கள் அதை ஆதரிக்க வழியே இல்லையே? எனில் இந்துத்துவா என்றால் அதில்லையா? இது நகைமுரண் அல்லவா, முதலீட்டியம் கம்யூனிஸத்தை ஆதரிப்பதைப் போல?

4) பாஜக கிறித்துவ மதமாற்ற முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதை, அதை ஒரு காரணமாகக் காட்டி சில மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதை அறிவோம். தமிழகத்திலும் பாஜக இம்மாதிரியாக சில கிறித்துவ கல்வி நிலையங்களை குறிவைத்து பிரச்சாரம் செய்ததை, ஒரு பள்ளிக்கு எதிராக இப்போது சி.பி.ஐ விசாரணை நடப்பதை அறிவோம். கர்நாடகத்திலும் யார் வேண்டுமெனிலும் தமக்குப் பிடிக்காத கிறித்துவ கல்வியாளர்கள் மீது இச்சட்டத்தின் கீழ் பொய்ப்புகார் அளிக்க முடியும். பெரிய ஆதாரம் ஒன்றும் தேவையில்லை. நல்லவேளை இதுவரை அப்படியான பிரச்சனைகள் வெடிக்கவில்லை. ஆனால் கிறித்துவ கல்வி நிலையங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது பாஜகவினருக்கு ஒரு கண் உள்ளது வெளிப்படை. இதையெல்லாம் இந்துத்துவா ஆதரவு கிறித்துவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

5) இறுதியாக ஒரு விபரீதக் கேள்வி: அடுத்த சில பத்தாண்டுகளும் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்து, அதன் தாக்கம் காரணமாக நாளை இஸ்லாமியரும் இந்துத்துவாவை ஆதரிப்பார்களா? ஆதரித்தால் பின்னர் இந்துத்துவாவின் பொருள் தான் என்ன? ஹேனா ஆரெண்ட் ஜெர்மனியில் யூத அழித்தொழிப்பு நடந்த போது யூதர்கள் தமக்குள் இரண்டாக உடைந்து உள்புலம்பெயர்வுக்கு (inner immigration) ஆளானதாக சொல்லுவார். இதுவும் சிறுபான்மையினரின் உள் இடம்பெயர்தலா?

பி.கு: நான் இங்கு கிறித்துவர்கள், இஸ்லாமியர், இந்துக்கள் எனக் குறிப்பிடுவது ஒரு திரளைக் குறிக்கத் தானே ஒழிய இந்த அடையாளத்தின் கீழ்வரும் மக்கள் அனைவரும் ஒரு கொள்கை, நம்பிக்கை, செயல்பாடு கொண்டவரக்ள் எனச் சொல்ல அல்ல. இத்திரளுக்குள் பலவித முரண்பாடுகள் கொண்ட மக்கள் இருக்கலாம். ஒரு விவாதத்துக்காக மட்டுமே பொதுமைப்படுத்துகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...