முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயில் நுழைவு எனும் போலிப் புரட்சி

முன்குறிப்பு: இது ஒரு தாமதமான நிலைத்தகவல்

கோயில் நுழைவு சீர்திருத்தங்கள் அபத்தமானவை. ஏன் பட்டியலின மக்கள் சில கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றால் அவர்கள் பூர்வ பௌத்தர்கள். ஏமாற்றப்பட்டு இந்துமதத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதம் - கோயில், வேதங்கள், இதிகாசங்கள், சனாதன நம்பிக்கைகள், சாதியத்தின் அடிப்படையில் பிராமணர்களின் மதம். மத்திய சாதிகள் வாலை மட்டும் இந்துமதத்துக்குள்ளும் மிச்சத்தை நாட்டார் கடவுள்களிடமும் வைத்திருக்கிறார்கள். பௌத்தம் உச்சத்தில் இருந்த போது இந்த மத்திய சாதியினர் முழுமையாக பிராமணர்களை எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை. அதனாலே இந்து மதம் போர் செய்து பௌத்தத்தை அழித்த பின்னர் பிராமணர்கள் பட்டியலினத்தவர்களை கோயிலில் இருந்து வெளியேற்றினர். மத்திய சாதியினரை சற்று குறைவான மரியாதையுடன் அனுமதித்தனர். 

இந்த கோயிலும் அதில் உள்ள சாமிகளும் பௌத்தர்களுடையது என்பதே இதில் ஆகப்பெரும் வேடிக்கை. 

சரி உங்கள் வீட்டுக்குள் நீங்கள் நுழைய எதற்கு இவ்வளவு பெரும் முயற்சிகள்? ஏனென்றால் வீட்டு உரிமையை போலி பத்திரம் மூலம் மாற்றி ஆக்கிரமித்து விட்டார்கள். அதை மீட்பதே தீர்வு. அதில் நுழைய அனுமதி கேட்பது அபத்தமல்லவா?

மரியாதையும் சமத்துவமும் வேண்டுமெனில் புதிய பௌத்த ஆலயங்களை உருவாக்கி நம் மதத்துக்குள் நாம் திரும்ப செல்ல வேண்டும். நம் தெய்வங்களை அதன் மேலுள்ள வேடங்களைக் களைந்து திரும்பக் கொணர வேண்டும். அப்படி ஒன்று நிகழ்கையில் தீண்டாமை இருக்காது, நீ வேறு நான் வேறு எனும் பிரிவினை இருக்காது. இதைப் படிக்கும் சில மத்திய சாதி பக்தர்கள் என்ன இந்து மதத்தை பழிப்பதா எனக் கொந்தளிப்பார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் - அது உங்கள் மதமல்ல, அங்கு உங்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட இல்லை. அங்கே எல்லாவற்றுக்கும் நீங்கள் கைகட்டி நிற்க வேண்டும். கருவறைக்குள் போக முடியாது. ஏனென்றால் அது உங்களுக்கு உரிமையுள்ள இடமல்ல. புத்தியுள்ளவர்களுக்கு இது புரியும். 

பக்தியும், அதன் மயக்கமும் தர்க்கத்துக்குள் வராத அர்ப்பணிப்பு உணர்வும் எனக்குப் புரிகிறது. ஆனால் சமூகப் பண்பாட்டு, பொருளியல் அறிவும்,  வைதீக அதிகாரம் குறித்த புரிதலும் இருந்தால் சுயமரியாதை கிடைக்கும். அடிமையாக எத்தனையோ இடங்களில் இருக்கலாம், மகிழ்ச்சியாகவே இருக்கலாம், அது நம் விருப்பம்.

ஆனால் கோயில் நுழைவு அபத்தத்தை புரட்சி என்று கூறாதீர்கள். அப்படிச் செய்து உங்கள் கோயிலைத் திருடிய ஏமாற்றுவேலையை அங்கீகரிக்காதீர்கள். பௌத்த கோயில் உருவாக்க புரட்சியே நமக்குத் தேவை. பறிக்கப்பட்ட கோயில்களில் போய் வணங்கி மேலும் மேலும் பணியும் போலிப் புரட்சி அல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...