முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்து எனும் தேவதூதன்



எழுதும் அனுபவம் எவ்வளவு பெரிய ஆறுதலாக உள்ளது என்பதை எழுத முடியாத ஒருநாள் நம் மனம் கொள்ளும் தத்தளிப்பு, துயரம், அழுத்தத்தைக் கொண்டு மட்டுமே அறிய முடிகிறது. அதுவும் கடும் நெருக்கடிகள், சிக்கல்கள் சூழ்ந்து நின்று மென்னியைப் பற்றுகையில் எழுத்து என்னை சட்டென மீட்கிற தேவதையாக உள்ளது. ஒருநாள் முடிகையில் எழுத்து இன்று அர்த்தபூர்வமாக ஒன்றை செய்தோம், இன்று நாம் செய்த பணி ஒரு பெரிய வெற்றியை விரைவில் தரும் எனும் நம்பிக்கையை தருகிறது. அந்த நம்பிக்கையே வாழ்தலின் அடித்தளம். அது கூட இல்லாமல் தூங்கச் செல்வது பெரிய அவலம். அப்போது 'நாளை விடிந்துவிடும், நாளை இதைவிட நன்றாக இருக்கும்' என்று மட்டுமே யோசிக்க முடிகிறது. அது தப்பித்தல். நான் அதை விரும்பவில்லை.


நேற்று அப்படித்தான் வகுப்புகள், சந்திப்புகள், அலைச்சல் என பகல் நேரத்தில் பத்து நிமிடம் கூட எழுத முடியவில்லை. வீட்டுக்கு வந்ததும் களைப்பு. சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் வாசிக்கவும் மனமில்லை. எழுதலாம் என்றால் உடலில் தாள முடியாத களைப்பு. தூங்கு, தூங்கு என ஒரு புறமும், எழுது, சிறிதாவது எழுது என இன்னொரு புறம் மனம் இரட்டைக் குரலில் பேசுகிறது. உறங்கிவிட்டேன். தூக்கத்தில் ஒரு நெடிய கனவு. அதில் அண்மையில் ஒரு நண்பர் வெளியிட்ட முக்கியமான நாவல் ஒன்றின் தலைப்பு வருகிறது. அதன் கதையைப் பற்றி கற்பனையாக ஏதோ ஒரு பார்வை திரும்பத் திரும்ப வருகிறது. நான் அதைப் போன்ற கதைச்சரடில் ஏதோ ஒரு நாவலை எழுதப் போகிறேன் என்று மீள மீள ஒரே எண்ணம் வந்தபடியே இருக்கிறது. அப்படித்தான் காலையில் சட்டென எழுந்து கொண்டேன். அதன் பிறகு இந்த எண்ணமே அபத்தமாக இருந்தது. எழுதாமல் கடந்த நாளொன்றில் என் மனம் தங்கியிருந்து கனவுக்குள் எழுதுகிறது, எழுதுவதைப் பற்றி உரையாடி என்னை ஆறுதல்படுத்துகிறது என்று புரிந்து கொண்டேன்.


அதனால் இன்றைய தினம் மிகவும் கொந்தளிப்பாக, மிக மோசமாக அமைந்தாலும் (வகுப்பில் மாணவர்கள் என் புத்தகத்தைத் திருடி மறைத்துவிட்டு நான் எவ்வளவோ கேட்டும் திரும்பத் தராமல் கடும் மனம் உளைச்சல் கொடுத்துவிட்டார்கள்) கிடைத்த நேரத்தில் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, சுற்றிலும் நிகழ்வனவற்றில் இருந்து விடுபட்டு வேறெங்கோ சென்றேன், நிறைய எழுதினேன். ஒரு நொடியைக் கூட வீணடிக்கக் கூடாது என முடிவெடுத்து செயல்பட்டேன்.


இன்று எனக்குள் வருத்தங்கள் இருந்தாலும் எழுத்து தரும் ஆறுதல் உள்ளது. அதை யாரும் என்னிடம் இருந்து பறிக்கக் கூடாது என எண்ணினேன். இன்று நான் நிம்மதியாக உறங்கச் செல்வேன். இன்று என் கனவில் நான் எழுத மாட்டேன். எனக்கு சலனங்களற்ற, ஆழ்ந்த கனவுகள் வாய்க்கும். நான் அடர் இருட்டின் பாதையில் நடக்கையிலும் எழுத்தெனும் தேவதூதன் என்னுடன் வருவான், கடும் துன்பத்தின் பள்ளத்தாக்கில் விழுந்தழியாமல் அவன் என்னைக் காப்பாற்றுவான் எனத் தோன்றுகிறது. எழுத்தாளனாக இருப்பதன் மிகப்பெரிய கொடுப்பினை இதுவே. எழுத்தாளனுக்குத் தனிமையே இல்லை. எழுதுகோல் எனும் தெய்வம் அவனுடன் என்றும் இருக்கும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...