முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதியாளர்களின் முதலைக் கண்ணீர்



இலை எடுப்பவருக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் இந்த பிரச்சினை மறைந்துவிடும். நீதி பேதி விவாதமெல்லாம் எழாது. நாம் தொடர்ந்து நீதி, அறம் பற்றி அங்கலாய்ப்பதெல்லாம் பணத்தை செலவு பண்ணாமல் தப்பிப்பதற்குத் தான் எனத் தோன்றுகிறது. குப்பை அள்ளுகிறவர், மலம் அள்ளுகிறவர்களுக்கு மாதம் 50000-70000 சம்பளம் கொடுத்துப் பாருங்கள் - உடனே அப்பணி எந்திரமயமாகி விடும். ஊழியர்கள் காரில் வந்திறங்கி அவ்வேலையை செய்தால் அது ஒரு மதிப்பான தொழிலாக மாறும். இதுவே ஓட்டல் பணியாளர்களுக்கும் பொருந்தும். பெண்கள் நாங்கள் அடுப்படியில் கிடந்து அல்லாட வேண்டுமா என பெண்ணியவாதிகள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் உயர்வான சம்பளத்துக்கு வேலைக்குப் போகத் தொடங்கியதும் என்னயிற்று? சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டார்கள் அல்லது மூன்று வேளைகளும் வெளியே சாப்பிடுகிறார்கள். இன்று பெருக்கக் கூட. தெரியாத ஒரு தலைமுறை தோன்றியுள்ளது. இந்த மாற்றம் நீதியுணர்வால் அல்ல பண வரவாலே நடந்தது. ஆனால் பணத்திற்கு வழியில்லை அல்லது செலவழிக்க மனமில்லாத போது ஆண்களும் பெண்களும் பெண்ணியம் பேசி அப்பிரச்சினையை கடந்து போனார்கள்.

 ஒரு முதலீட்டிய சமூகத்தில் நீதி, அறத்துக்கான பதிலீடு பணமே. இப்போது கூட சமூக அறம், சமத்துவம் வேண்டும் என கண்ணீர் வடிப்பவர்களிடம் ஒரு பொறியாளருக்கு இணையாக சம்பளத்தை அதிகப்படுத்துவோமா என்றால் "அது முடியாதுங்க" என்று ஜகா வாங்குவார்கள். அவர்களுடைய வீட்டில் பாத்திரம் கழுவும் பெண் மாதம் 30000 கொடு என்றால் என்னம்மா அநியாயமா கேட்கிறே என்பார்கள்.

 நவீன முதலீட்டிய சமூகத்த்தின் போலி முகம் இந்த அற / நீதி வியாபாரிகள் தாம்! நீதி என்பது பொய்யின் பதிலீடு ஆகிவிட்டது. கேட்டால் நாங்க நீதிக்காக குரல் கொடுப்பதனால் தான் மாற்றம் வரும் என்பார்கள். ஆனால் மாற்றம் வராமல் தடுப்பதற்கான உத்தி தான் இப்படி நீதி நியாயத்துக்காக அரற்றுவது என்பதே வேடிக்கை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...