அக்ஸர், அஷ்வின் கூட்டணியின் போது எப்படி அடித்தாடினார்களோ அப்படி நமது உருட்டு மாஸ்டர்களான ராகுல், ரோஹித், புஜாரா செய்திருந்தால் நமக்கு 80 ரன் லீடாவது கிடைத்திருக்கும். ஆனால் இப்போதைக்கு நமது ஆல்ரவுண்டர்கள் துணிச்சலாக ஆடியதால் ஒரு கதவு சில அங்குலங்ள் திறந்திருக்கிறது. அந்த இடைவெளியில் தள்ளித் திறந்து நம்மால் ஆஸி மட்டையாளர்களை 50/5 என கட்டுப்படுத்த முடிந்தால் நாம் ஆட்டத்தில் இருப்போம். காயம்பட்ட வார்னருக்கு மாற்றுவீரராக வந்துள்ள ரென்ஷாவும் / ஹெட்டும், குவாஜாவும் துவக்க வீரர்கள் என நினைக்கிறேன். இவர்கள் அடித்தாடினால் இந்த 50 ரன்கள் முதல் 15 ஓவர்களுக்குள் வந்துவிடும். அப்படி நடந்தால் 240ஆவது ஆஸி அடிக்கும். ஆனால் ஆஸி மட்டையாளர்கள் பதற்றத்தில் தடுத்தாடினால் இந்தியா அவர்களை 130க்குள் தூக்கும்.
இந்த ஆட்டம் முழுக்க இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸி மட்டையாளர்கள் துணிச்சலாக அதிரடியாக ஆட முயல்வார்களா என்பதைப் பொறுத்திருக்கிறது.
ஆஸி கேப்டன் கம்மின்ஸைப் போன்றே ரோஹித்தும் in-out களத்தடுப்பை வைத்து பவுண்டரிகளைத் தடுக்க முயலலாம். அது ஆஸி வீரர்களைக் கட்டுப்படுத்தி நெருக்கடியை உருவாக்க உதவும். முதல் பத்து ஓவர்களை ஜடேஜாவும், அஷ்வினும் வீச வேண்டும். அதன் பிறகே ஷமி, பட்டேல் வர வேண்டும். இந்த ஆடுதளத்தில் 150க்கு மேல் லீட் கொடுக்கக் கூடாது.
Comments