முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டீலா?


ஒரு வாக்குவாதம் தடிக்கும் போது ஏதாவது பாலியல் அவதூறு இருக்கும் தான். "டேய் நீ எல்லாம் ஒரு அவனா டா, ஒரு இவனாடா" என்றா மாமா மாதிரியா திட்ட முடியும்? இங்கே முற்போக்கு பேசும் எவரும் கெட்டவார்த்தைகளே பயன்படுத்துவதில்லையா? இது சமூக வலைதளம் என்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் நோண்டி எடுத்து அரசியல் பண்ணுகிறார்கள். அரசியல் சரிநிலையுடன் திட்டலாம் என்றால் எப்படி என்று மட்டும் சொல்லுங்கள். செருப்பை எடுத்து அடிப்பேன் என்றால் செருப்பின் பின்னுள்ள ஒடுக்கப்பட்டொரின் அரசியல் தெரியுமா என ஒன்றரை முழத்துக்கு எழுதுவார்கள். உன் பாட்டியைத் தான் கேட்கணும் என்றால் ஒன்றரை அணா பெண்ணியத்தை தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். 

இந்த அரசியல் சரிநிலை பயங்கரவாதம் அளவை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. "பொதுவெளியில் ஒரு கண்ணியம்" என்று ஆரம்பிக்க நினைக்கிறவர்கள் தெருவுக்குப் போய் நின்று அங்கு மனிதர்கள் பேசுகிற வசவுகளைக் கேளுங்கள். இளைஞர்கள் ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு முறை கெட்ட வார்த்தைகளை கிரெடிட் கார்டைப் போல எடுத்து நீட்டுகிறார்கள் என கவனியுங்கள். பெண்கள் எப்படியெல்லாம் பிறர் பாலுறுப்புகளைப் பற்றி பேசுகிறார்கள் எனக் கேளுங்கள்!

உண்மையில் நாம் இன்று வீட்டிலும் தெருவிலும் நாம் சுதந்திரத்துடன் இருக்கிறோம், ஆனால் சமூகவலைதளங்களில் கடும் கண்காணிப்பின் கீழ் இருக்கிறோம். வெர்ச்சுவல் உலகம் பாராளுமன்றம் போலாகிவிட்டது. எதையெடுத்தாலும் பெஞ்சைத் தட்டி கத்தி கூப்பாடு போடுவது, அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது என அபத்தமாக இருக்கிறது. 

இந்த போலி ஆண் பெண்ணியவாதிகள், அரசியல் சரிநிலையாளர்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான் - உங்கள் தேடுபொறி வரலாற்றை அழிக்காமல், கடவுச்சொல்லுடன் உங்கள் போனை என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் அதை ஒரு வாரம் வைத்து சோதித்துவிட்டு தந்துவிடுகிறேன். பதிலுக்கு என் போனைத் தருகிறேன். நீங்க தான் தைரியசாலி ஆச்சே? காந்தியவாதி, பெண்ணியவாதி, உத்தமர் ஆச்சே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...