முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டீலா?


ஒரு வாக்குவாதம் தடிக்கும் போது ஏதாவது பாலியல் அவதூறு இருக்கும் தான். "டேய் நீ எல்லாம் ஒரு அவனா டா, ஒரு இவனாடா" என்றா மாமா மாதிரியா திட்ட முடியும்? இங்கே முற்போக்கு பேசும் எவரும் கெட்டவார்த்தைகளே பயன்படுத்துவதில்லையா? இது சமூக வலைதளம் என்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் நோண்டி எடுத்து அரசியல் பண்ணுகிறார்கள். அரசியல் சரிநிலையுடன் திட்டலாம் என்றால் எப்படி என்று மட்டும் சொல்லுங்கள். செருப்பை எடுத்து அடிப்பேன் என்றால் செருப்பின் பின்னுள்ள ஒடுக்கப்பட்டொரின் அரசியல் தெரியுமா என ஒன்றரை முழத்துக்கு எழுதுவார்கள். உன் பாட்டியைத் தான் கேட்கணும் என்றால் ஒன்றரை அணா பெண்ணியத்தை தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். 

இந்த அரசியல் சரிநிலை பயங்கரவாதம் அளவை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. "பொதுவெளியில் ஒரு கண்ணியம்" என்று ஆரம்பிக்க நினைக்கிறவர்கள் தெருவுக்குப் போய் நின்று அங்கு மனிதர்கள் பேசுகிற வசவுகளைக் கேளுங்கள். இளைஞர்கள் ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு முறை கெட்ட வார்த்தைகளை கிரெடிட் கார்டைப் போல எடுத்து நீட்டுகிறார்கள் என கவனியுங்கள். பெண்கள் எப்படியெல்லாம் பிறர் பாலுறுப்புகளைப் பற்றி பேசுகிறார்கள் எனக் கேளுங்கள்!

உண்மையில் நாம் இன்று வீட்டிலும் தெருவிலும் நாம் சுதந்திரத்துடன் இருக்கிறோம், ஆனால் சமூகவலைதளங்களில் கடும் கண்காணிப்பின் கீழ் இருக்கிறோம். வெர்ச்சுவல் உலகம் பாராளுமன்றம் போலாகிவிட்டது. எதையெடுத்தாலும் பெஞ்சைத் தட்டி கத்தி கூப்பாடு போடுவது, அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது என அபத்தமாக இருக்கிறது. 

இந்த போலி ஆண் பெண்ணியவாதிகள், அரசியல் சரிநிலையாளர்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான் - உங்கள் தேடுபொறி வரலாற்றை அழிக்காமல், கடவுச்சொல்லுடன் உங்கள் போனை என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் அதை ஒரு வாரம் வைத்து சோதித்துவிட்டு தந்துவிடுகிறேன். பதிலுக்கு என் போனைத் தருகிறேன். நீங்க தான் தைரியசாலி ஆச்சே? காந்தியவாதி, பெண்ணியவாதி, உத்தமர் ஆச்சே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...