முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்ட் சாமியார்களின் பின்னுள்ள கறுப்புச் சந்தை மோசடியும் அவர்களை ஆதரிக்கும் கட்சித் தலைமைகளும்

ஏன் எனும் கேள்வி வேண்டாம், எப்படி எனக் கேட்போம்

கல்ட் சாமியார்கள் நாம் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் நவீன பொருளாதார மாற்றங்களின் கலாச்சார முகங்கள். முக்கியமாக மிகுதியான லாபம், முறையற்ற லாபத்தை கணக்கு காட்டாமல் பதுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவர்கள். அதற்காகவே சாமியார்கள் மட்டும் எந்த கணக்கும் காட்டாமல் பணம் வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது (இந்தியாவின் எல்லா மத சாமியார்களும் இதில் வருவார்கள்.) அதனாலே சாமியார்கள் பூஜ்யத்தில் இருந்து ஒரு சில ஆண்டுகளில் கோடானு கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகி அதைக்கொண்டு ஊரையே வளைத்துப் போட்டு சமூகப்பண்பாட்டு அதிகாரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். ஊடகங்கள், பெருவணிகர்கள், தலைவர்கள் என எல்லாருக்கும் இவர்கள் தேவைப்படும் சூட்சுமம் இதுவே. நாம் இதை பொதுமக்க்ளின் ஏதோ ஒரு உளவியல் தேவையை நிறைவேற்ற வந்தவர்கள் எனும் கணக்கில் இவர்களை நியாயப்படுத்துவது உண்மையை பார்க்க விரும்பாமை மட்டுமே. இதைப் பண்பாட்டு  உளவியல் ரீதியாக, சமூகநீதி கிரீம் பன்களைக் கொண்டு சிந்திப்பது பொய்யை தித்திக்க வைக்கும் உத்தி மட்டுமே.
 கல்ட் சாமியார்கள் ஒரு பொருளாதார புற்றுநோய். நான் ஏற்கனவே இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். என் பிளாகில் உள்ளது. படித்துப் பாருங்கள்.

நாம் கேட்க வேண்டியது சட்டத்தை மாற்றுங்கள், ஒன்று சாமியார்களுக்கு யாரும் கணக்கில்லாமல் நிதியளிக்கக் கூடாது, அஞ்சு பைசா என்றாலும் அதற்கு கணக்கு காட்ட வேண்டும் என்பது. அதை விட சிறப்பு இச்சாமியார்கள் ஓரளவுக்கு மேல் நிதியளிப்பு வழி சொத்துக்களைப் பெறக் கூடாது, அதை வைத்து வணிக நடவடிக்கைகளில், நிறுவனமயமாக்கலில் ஈடுபடக் கூடாது என சட்டம் வர வேண்டும். அல்லாவிடில் நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கும் வரி கட்டாமல் கணக்கு காட்டாமல் பணத்தை சம்பாதிக்கும் உரிமையைக் கொடுங்கள். எனில் வளர்ச்சி கீழிருந்து மேலாக வரும். 

ஏனோ இந்த சட்டம் சார்ந்த மோசடியை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. மோசடியைக் கொண்டு வளர்ந்து சாம்ராஜ்ஜியம் ஆன சாமியார்களை அரசு அங்கீகரிக்கலாமா எனக் குதிக்கிறார்கள். அட, முதலில் உங்கள் சட்டம் ஏன் அங்கீகரிக்கிறது எனக் கேளுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...