நேற்றைய நவம்பர் நாவல் சவால் சிறப்பாகப் போயிற்று. ஏழு பேர் கலந்துகொண்டார்கள். அவர்கள் சராசரியாக 700 வார்த்தைகள் எழுதினார்கள். இவ்வாறு சேர்ந்து எழுதுவதே ஒரு ஊக்கம் தான் - மனிதன் ஒரு கூட்டு விலங்கு. அதனால் எழுத்து ஒரு சிறிய அழுத்தத்தின் படி நிகழும் போது ஒழுங்காக நடக்கும் - நேரம் ஆகிவிட்டது, இப்போது எழுத வேண்டும், ஏனென்றால் இன்னொருவரும் இன்னொரு இடத்தில் இருந்து எழுதுகிறார் என்பது ஒரு இலக்கையும் தீவிரத்தையும் கொடுக்கும். ஒரு மாதம் தவமாக இருந்து சில மணிநேரங்கள் இப்படி எழுதினால் ஒரு குறுநாவலை முடித்துவிடலாம். இன்னொரு விசயம் சொற்களின் எண்ணிக்கையே முக்கியம், படைப்பின் தரம் அல்ல என்பது. இது எழுத்தின் போதான மனத்தடங்கலைத் தவிர்க்க உதவும். மனுஷ்யபுத்திரன் சொல்வார், ஒவ்வொருவரும் எழுத்துக்கும் ஒரு தரம், இயல்பு, தீவிரம் இயல்பாகவே உண்டு, அதைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது, அதனால் எழுதுவது ஒன்றே அவரவர் செய்ய வேண்டிய காரியம் என்று. அதை நானும் நம்புகிறேன்.
ஆகையால் இன்றைய நவம்பர் நாவல் எழுதும் சவால் நாள் 2இலும் கலந்துகொள்ளுங்கள். லிங்க்:
நவம்பர் நாவல் எழுதும் சவால்
Thursday, 2 November · 8:00 – 10:00pm
Time zone: Asia/Kolkata
Google Meet joining info
Video call link: https://meet.google.com/haj-wjfc-imx
Comments