ஒரு நாவலைப் போல ஜனநாயகமான வடிவத்தை காட்டுவது சிரமம் (பாதல் சார்க்கரின் வீதி நாடகத்துடன் ஓரளவுக்கு ஒப்பிட்டலாம் என்றாலும்). எத்தனையோ விதமான கதைகளை, மொழிகளை, சாத்தியங்களை உள்ளடக்கியது நாவல். ஒருவர் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் கூட அப்படியே எழுதியே சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து ஒரு நாவலாக்கலாம். மின்னஞ்சல்கள், வாட்ஸாப் சேதிகளை, தமது மருத்துவ அறிக்கைகளைக் கூட கதையாக்கலாம். நீங்கள் உங்கள் நண்பருடன் உரையாடியதை நீட்டித்து ஒரு அத்தியாயம் எழுதலாம். இவையெல்லாமே மொழிகள். நாவலின் வேர்கள் இவையெங்கும் ஓடுகின்றன. இம்மொழிகளுக்கு ஒரு வடிவத்தை அல்லது ஒரு அர்த்தத்தைக் கொடுப்பது மட்டுமே அதை கலையாக்குகிறது. அதுவே நாவல் எழுதும் கலை. என்னுடைய நாவல் வகுப்புகளில் நான் கற்பிக்கிறேன் என்பதை விட பயிற்றுநர்களை, மாணவர்களை கட்டவிழ்த்து விடுகிறேன் என்பதே சரி. உங்களை ஈர்க்கிற ஒரு மொழியை பதிவு பண்ணுங்கள், அதை நாவலாக்கும் நம்பிக்கையை நான் அளிக்கிறேன். எல்லாருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது. அது வெளிவரும் போது தமிழின் நாவல் வெளி இன்னும் விரிவாகும். நான் கைகொடுக்கிறேன்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்