ஒரு நாவலைப் போல ஜனநாயகமான வடிவத்தை காட்டுவது சிரமம் (பாதல் சார்க்கரின் வீதி நாடகத்துடன் ஓரளவுக்கு ஒப்பிட்டலாம் என்றாலும்). எத்தனையோ விதமான கதைகளை, மொழிகளை, சாத்தியங்களை உள்ளடக்கியது நாவல். ஒருவர் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் கூட அப்படியே எழுதியே சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து ஒரு நாவலாக்கலாம். மின்னஞ்சல்கள், வாட்ஸாப் சேதிகளை, தமது மருத்துவ அறிக்கைகளைக் கூட கதையாக்கலாம். நீங்கள் உங்கள் நண்பருடன் உரையாடியதை நீட்டித்து ஒரு அத்தியாயம் எழுதலாம். இவையெல்லாமே மொழிகள். நாவலின் வேர்கள் இவையெங்கும் ஓடுகின்றன. இம்மொழிகளுக்கு ஒரு வடிவத்தை அல்லது ஒரு அர்த்தத்தைக் கொடுப்பது மட்டுமே அதை கலையாக்குகிறது. அதுவே நாவல் எழுதும் கலை. என்னுடைய நாவல் வகுப்புகளில் நான் கற்பிக்கிறேன் என்பதை விட பயிற்றுநர்களை, மாணவர்களை கட்டவிழ்த்து விடுகிறேன் என்பதே சரி. உங்களை ஈர்க்கிற ஒரு மொழியை பதிவு பண்ணுங்கள், அதை நாவலாக்கும் நம்பிக்கையை நான் அளிக்கிறேன். எல்லாருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது. அது வெளிவரும் போது தமிழின் நாவல் வெளி இன்னும் விரிவாகும். நான் கைகொடுக்கிறேன்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments