கேள்வி: அண்ணா. நிறைய வாசிக்காதவர்களால் எழுத்தாளர் ஆக முடியாதா?
பதில்: முடியும். ஆனால் தீவிரமாக வாசிப்பது அதுவரை கண்ணுக்குப் புலப்படாத விசயங்களைத் திறந்துவிடும். அதே நேரம் வாசிப்பை விட எழுத்துப் பயிற்சியும் அனுபவங்களை, எண்ணங்களை, உணர்வுகளை நேர்மையாக நம் எழுத்தில் பரிசீலிப்பது, பாவனைகள் செய்யாமல் இருப்பதே நம்மை சிறந்த படைப்பாளியாக்கும்.
நான்: எதையும் வாசிக்கலாம், ஆனால் ‘அதுவே’ பிழைப்பாக இருக்கக் கூடாது. நாம் வாசகர்கள் அல்லர், எழுத்தாளர்கள்.
கேள்வி: பயிற்சி என்பது பழகுதல் பற்றியதுதான அண்ணா. நீங்க எம்மாதிரி கற்றுக் கொடுக்கிறீங்க அண்ணா. டாஸ்க் மாதிரியா? இல்லை ஆர்வமுள்ளோர் எல்லாருக்கும் சொல்லித் தரிங்களாண்ணா?
நான்: என் வகுப்பில் எழுத்தின் முறைமை, உத்திகள் பற்றி பேசிவிட்டு டாஸ்குகளும் கொடுக்கிறேன்.
கேள்வி: உங்கள் வகுப்புகள் எப்போது எங்கே நடக்கும்?
நான்: இவ்வாண்டு மார்ச் இறுதியில் ஆரம்பித்து மே மாதம் முதலிரு வாரங்கள் வரை நடைபெறும். காணொளி வழியாக வார இறுதிகளில் இரண்டு நாட்கள் தலா ஒன்றரை மணிநேரங்கள்.
இணைகிறேன் அண்ணா.

Comments