தமிழ்நாட்டு அரசு தான் என்னை ஒரு எழுத்தாளராக மதிப்பதோ அவர்களுடைய இலக்கிய விழாக்களுக்கு இதுவரை ஒருமுறை கூட அழைத்ததில்லை (அழைத்தாலும் தவறிருந்தால் விமர்சிக்கத்தான் செய்வேன்.) ஆனால் மார்ச் 15, 2025 அன்று நடக்கவிருக்கும் ஊட்டி இலக்கிய விழாவில் நான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளேன் என்பது மகிழ்ச்சியான சேதி. மேலும், என்னுடைய அண்மை நாவலான "நிழல் பொம்மை" க்கு ஒரு தனி அமர்வையும் ஏற்பாடு செய்துள்ளார்கள். எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை எழுத்தாளர் திரு திலீப்குமாருடன் நாவல் பற்றி உரையாடுகிறேன்!
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments