தமிழ்நாட்டு அரசு தான் என்னை ஒரு எழுத்தாளராக மதிப்பதோ அவர்களுடைய இலக்கிய விழாக்களுக்கு இதுவரை ஒருமுறை கூட அழைத்ததில்லை (அழைத்தாலும் தவறிருந்தால் விமர்சிக்கத்தான் செய்வேன்.) ஆனால் மார்ச் 15, 2025 அன்று நடக்கவிருக்கும் ஊட்டி இலக்கிய விழாவில் நான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளேன் என்பது மகிழ்ச்சியான சேதி. மேலும், என்னுடைய அண்மை நாவலான "நிழல் பொம்மை" க்கு ஒரு தனி அமர்வையும் ஏற்பாடு செய்துள்ளார்கள். எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை எழுத்தாளர் திரு திலீப்குமாருடன் நாவல் பற்றி உரையாடுகிறேன்!
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்