முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"கால்கள்" நாவல் கிண்டில் பதிப்பு



"கால்கள்" என் முதல் நாவல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் விருப்பப்படி எழுதியது. அதன் கோளாறுகளும், நன்மைகளும் அதில் உண்டு. வெளியான முதல் ஆண்டு இது பரவலாக இலக்கிய உலகினுள் படிக்கப்பட்டது என்னை ஆச்சரியப்படுத்தியது. 2014ஆம் ஆண்டில் சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் இதற்கு கிடைத்தபோது இன்னும் வெகுவாக ஆச்சரியப்பட்டேன்.
"கால்கள்" நாவலுக்கு கிண்டில் பதிப்பு வர வேண்டும் என வாசக நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான்கு விதங்களில் இது உதவியானது:
1) "கால்கள்" எப்போதுமே அச்சில் இருக்காது. காலியாகும்போது திரும்ப அச்சுக்கு வர நேரம் எடுக்கும். ஆகையால் கிண்டில் பதிப்பு உபயோகமானது.
2) விலை - இப்போதைக்கு 250 ரூ வைத்திருக்கிறேன். இது அச்சு நூல் விலையை விடக் குறைவே. அடுத்த மாதத்தில் இருந்து அவ்வப்போது விலையை மேலும் குறைக்கலாம் என இருக்கிறேன். அதிக விலை கொடுத்து வாங்காதோருக்கு நாவலைக் கொண்டு சேர்க்க இது உதவும்.
3) பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அச்சுநூலில் படிக்க முடியாது - அவர்களுக்கு கிண்டில் பதிப்பே ஏற்றது. கிண்டில் பக்கங்களை படிக்கும் மென்பொருளை பயன்படுத்தி ஒலிநூலாக இதைக் கேட்டுக் கொள்வார்கள்.
4) வெளிநாடு-வாழ் வாசக அன்பர்களுக்கும் குறைந்த செலவில் உடனடியாக வாங்கிப் படிக்க இது உதவும்.

இப்போதைக்கு கிண்டில் அன்லிமிட்டட் எனும் விருப்பத்தேர்வையும் கொடுத்திருக்கிறேன். நூலகத்தில் கடனுக்கு எடுப்பதைப் போல தரவிறக்கி சில நாட்கள் படித்துக் கொள்ளலாம். இது சற்றே பெரிய நாவல் என்பதால் அப்படி என்னதான் இருக்கிறது என நூறு பக்கங்களை முதலில் படித்துப் பார்க்க விரும்புவோருக்கு இது ஏற்றது.

கிண்டில் பதிப்பின்போது நாவலைத் திருத்தி அதன் வடிவத்தை மாற்றிவிடலாமா என்றும் யோசித்தேன் - ஆனால் அது நியாயமாக இருக்குமா, அதற்கு அவகாசம் இருக்குமா என யோசித்து அம்முயற்சியைக் கைவிட்டேன். ஆனால் எதிர்காலத்தில் ஒரு குறும்பதிப்பைக் கொண்டு வருவேன். அப்போது இந்நாவலை வேறொரு வடிவில் மொழியில் எழுதிப் பார்ப்பேன். ஆங்கிலத்தில் முன்பு செவ்வியல் நாவல்களுக்கு அப்படியான வடிவங்கள் பிரசித்தமாக இருந்தன. இப்போது இல்லை.

இப்போதைக்குப் படியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

நாவலை வாங்குவதற்கான தொடுவழி: https://www.amazon.in/dp/B0F3PJYNTK

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...