நான் வரும் 10ஆம் தேதி காலையில் நத்தம் வருகிறேன். மதுரையிலோ திண்டுக்கல்லிலோ இறங்கி அங்கிருந்து நத்தம் போகத் திட்டம். மதுரை / திண்டுக்கல்லைச் சேர்ந்த நண்பர்கள் யாராவது காலையில் ஓரிரு மணிநேரத்திற்கு என்னை host பண்ண முடியுமா? கழிப்பறை பயன்படுத்தி, சற்று ஓய்வெடுக்க வேண்டும். விருப்பமுள்ளோர் என்னை abilashchandran70@gmail.comஇலோ 9790929153 எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments