நாவலை ஒரு நீண்ட கதையாகப் பார்க்கும் பிரச்சினை தமிழில் உண்டு. நாவலை ஒரு நீண்ட சிக்கலான கனவாகப் பார்ப்பதே சரியானது - அக்கனவில் நேர்கோட்டுத்தன்மையும் எதார்த்தமும் இருக்கலாம், அதில் சுவாரஸ்யமான கதைகள் வரலாம், ஆனால் அதன் கதையமைப்பும், கதையும் சுவாரஸ்யத்துக்கானவை அல்ல, மாறாக கதைத்தன்மைக்கு அப்பால் ஒரு புதிய உலகை, புதிய கருத்து, வாழ்க்கைப் பார்வை, முரண்களைக் குறிப்புணத்துவதே நாவலின் உத்தேசம். ஒரு கனவைக் கண்டு முடித்தபின் அதன் பொருளென்ன என்று புரியாவிடினும் அது நம்மை அன்று முழுக்க அலைகழிக்குமே அப்படியே நாவலும் செய்ய வேண்டும்.
இதற்கு முதலில் கதைக்கான அடிப்படைகளும், அதன் பிறகு கதையை கவிதையாக்கும் நுணுக்கமும் தெரிய வேண்டும். கதையை கவித்துவமான படிமமாக்க ஒரு இளம் எழுத்தாளருக்கு சரியான வழிகாட்டி அவசியம். அதற்காகத்தான் நான் ஆன்லைனில் வகுப்புகளை அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கிறேன்.

Comments