Skip to main content

கண்கள் - ஆர். அபிலாஷ்

 Art Break: Blindness Doesn't Hinder Visual Artists | Newcity Art


கடும் தலைவலியினூடாக அவனுக்குத் தோன்றியது

கண் மருத்துவர் 

சுமாராகத்தான் இருக்கிறார் என்று.

அறை இருட்டு.

பல்லைக் கடித்து முனகும் ஏஸி எந்திரம்.

ரத்தம் வடிந்த தம் வெளிறி

உடலின் வழியாக ஆன்மாவைப் பாய்ச்சும்

நீள்சதுரக் குழல் விளக்குகளின்

ஆத்ம தரிசனம்.

வலி தன் மீது 

ராட்சதத் துளை தோண்டும் எந்திரத்தைப் போல

இறங்கி பூமிக்குள் பாய்வதாக

அவனுக்குத் தோன்றியது.

சுற்றிலும் வெளிச்சச் சிறகுகள் பறக்க

அமானுஷ்ய தோற்றங்கள்.

மரணம் நெருங்கிவிட்டதாகவும்

அன்றாடத்தின் துன்பங்களில் இருந்து விடுதலை

கிடைக்கப் போகிறதென ஒரு நம்பிக்கை,

அதைக் குறித்த அவநம்பிக்கை அடுத்து,

தப்பிக்கவே முடியாது எனும் 

எச்சரிக்கை சமிக்ஞைதான் இவ்வலி.

அம்மாவின் கையில் இருந்து பறிக்கப்படும்

குழந்தையின் கதறல்கள்.

அம்மாவிடம் செல்வதே 

முழுமையான நிம்மதியான துயில்.


கண்மருத்துவர் மீண்டும் அவனைத் தனது

மோவாவை சிறிய வளைவான தட்டில் வைத்து நேராகப் பார்க்கக் கேட்டார்.

அவர் தன் காதை கவனிக்கச் சொன்னார்.

இடக்காது.

உருகிய சுடர்.

இருளைத் திரையென அகற்றி 

முழுமையாகி நிலைகொள்ளும் சுடர்.

மலைமுகட்டில் எழுந்து 

பூமியை உயிர்கொள்ள வைக்கும் சுடர்.  

சிறிய மென்மையான சுடர்.

தெய்வத்தின் காது.

உலகத்துப் பேரழகின் மொத்த வடிவம்.

பொன்மஞ்சள் மயிர்கள் துல்லியமாகத் தெரிகின்றன

சிறு காது துளையின் அழகு.

அவனுக்கு அக்கணமே 

உலகின் மொத்த அன்பையும் அழகையும் தான்

அள்ளிக்கொள்வதாகத் தோன்றியது.

அவர் அடுத்தடுத்து ஸ்லைடுகளை மாற்றினார்.

தங்கத்தால் இழைக்கப்பட்ட காது

தன் வண்ணங்களையும் வடிவத்தையும் இழந்து

அவனைத் தடுமாற வைக்கிறது.

ஒரு பெண்ணை அடையும்போது

மெல்லமெல்ல இப்படித்தான் சிதைக்கிறோம்,

சிதைத்தலே ஸ்பரிசத்தின் பார்வை.


பரிசோதனை முடிந்தது

சோதனை லென்ஸ்களை

 அணியச் செய்து

தெளிந்த தெளிவற்ற பிம்பங்கள் காட்டப்பட்டு

அவனுக்கான சிகிச்சையும் தீர்வுகளும்

முடிவாகின்றன.


மறுசோதனைக்கான நாள்.

பழைய தலைவலி இல்லை.

மிதக்கும் தேவதைகள் 

துணைவரவில்லை.


கண்ணாடி அணிந்த கண்களுக்கு

பந்துகளாகத் துள்ளி வரும் 

தினசரி பிம்பங்களின் வண்ணங்கள் 

அள்ளிக் கொஞ்சத் தோன்றும் உலகு.

எவ்வளவு ரசித்தும் போதாத அழகு.

அதன்பிறகு 

அவனுக்கு இதெல்லாம் ஒன்றும் 

அழகில்லை என்றானது.

துல்லியமாகத் தெரிவதே அழகெனின் 

அழகின் பொருளென்ன?

இலைகள் விலகியதும்

ஒரு மலர் தெரிகிறது.

அது அங்கு இருக்கிறது,

இருந்தால் தான் என்ன?


அன்றாடத்தின் சுமையுடன் 

அவன் அடுத்தமுறை மருத்துவமனைக்கு வந்தபோது

பெண் மருத்துவர் சற்று மங்கலாகத் தெரிந்தார்.

வெளியுலகில் தன்னைக் கண்டடைந்து

களைத்துத் திரும்பியவனை வரவேற்கும் முதிர்ச்சி.

அந்நியமாக இயல்பிழந்து போன அவர் மீது

அவனுக்குத் தோன்றும் பயம்.

ஆறுதலாக அணைத்து

காலத்துயிலில் பொதிந்துகொள்ளும் கரங்கள் 

மீளமீளத் தோன்றும் சுழல் நாட்காட்டிக்குள்

அவனைத் தள்ளிவிடுகின்றன.


கண்ணில் கடுப்பு, தலைவலி, தெளிவின்மை,

 இரவிலும் பகலிலும் வாசிப்பதில் சிரமம் ... 

விசாரித்த பின்னர்

அவனை மோவாவை சிறிய வளைவான தட்டில் வைத்து 

தன் காதைப் பார்க்கச் சொல்கிறார்.


அவன் தன் மனத்தின் கண்ணாடியை எடுத்து

அணிந்துவிட்டுப் பார்க்கிறான்.




Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...