முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (ஈ)

 12) காலை நான்கு மணிக்கு எழுந்து கிளம்புவதே திட்டம். ஆனால் நான்கு மணிக்கு எழுந்ததும் தூக்கம் கண்ணை அழுத்தியது. ஆறே முக்கால் ஆகியது நாங்கள் புறப்பட. கனகபுரா-மலவள்ளி சாலை குறுகியது என்றாலும்அழகானது. குறைவான போக்குவரத்து. இருமருங்கும் மரங்கள், குன்றுகள் அடுத்தடுத்து வந்தன. ஏறி இறங்குகிற சற்றே மலைப்பாங்கான பாதை. பின்னிருந்து ஒலிப்பானை முழுக்கி அச்சுறுத்தும் பெருவாகனங்கள் இல்லை, விர்ரெனத் தாண்டிப் போகும் அசுர பைக்குகள் இல்லை, பறவைகள் நமக்கு மேல் பறந்து போனால் நாம் அதே வேகத்தில் கீழே பறந்துபோவதான உணர்வு வரும். அவெஞ்சரில் எந்த குலுக்கமும் இல்லாமல் மிதந்து போவது இன்னொரு சுகம். மலவள்ளியை நெருங்கியதும் பார்க்க அப்பகுதியே ஊட்டியைப் போலத் தோன்றியது. எந்தவொரு இடைஞ்சலும் இல்லாத பயணம். மைசூரை நெருங்கியதும் போக்குவரத்து மோசமாகத் தொடங்கியது. மணி அப்போது12: 30. ஒன்றரை மணிநேரம் தாமதம்.


13) நாங்கள் மூன்று முறைகள் ஓய்வுக்காக வண்டியை நிறுத்தியிருந்தோம். தொடர்ந்து பயணித்தால் அலுப்பும் உடல்வலியும் ஏற்படும் என்பதால் இதை முன்கூட்டியே முடிவு செய்திருந்தோம். இன்னொரு முக்கியமான பிரச்சினை தூக்கம். தூக்கச் சடவு நான் பைக்கை ஓட்டும்போதே அதிகமானது. அடிக்கொரு தரம் கண்கள் தாமாகச் சொருகின. அதனால் காபி, தேநீர் எனக் குடித்து வேடிக்கை பார்த்து இயல்பானபின் ஓட்டுவது, கண்கள் களைத்ததும் வண்டியை நிறுத்துவது என்றிருந்தேன். கடைசியாக வேகம் - முதல் 500 கிலோமீட்டர்களின்போது 60 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டக் கூடாது. அதனால் சாலையில் இடமிருந்தாலும் மன்மோகன் சிங் உரையாற்றுவதைப்போலத்தான் ஓட்ட வேண்டியிருந்தது. ஸ்கூட்டரிலே 80-90க்கு வேகத்தைத் திருகும் என் கையைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டேன். ரொம்ப மெதுவாகப் போகும்போது வண்டியோட்டும் சுகமும் கிடைப்பதில்லை. நாம் வண்டியோட்டும்போது வண்டியின் மனநிலையை நம் கால்கள், இடுப்பு வழியாக அதன் அதிர்வுகள், சப்தம், பொதுவான உணர்வு வழியாக உணர்வோம். மெதுவாகப் போகும்போது என் வண்டி ஏதோ டியூஷன் வகுப்பில் உட்கார்ந்து மனனம் செய்யும் சிறுவனைப் போல உணர்வதை, அடிக்கடி கொட்டாவி விடுவதை உணர முடிந்தது. பொறு, பொறு உன் தன்னமைதல் காலம் முடியும் என அதனிடம் அரைமனதாகச் சொன்னேன். பிடிக்காத மனைவி தேநிலவுக்கு வருவதைப் போன்றேம்ம்ம்ம்என்றே வந்தது. இம்மூன்றும் சேர்ந்து தாமதாக்கின.


14) மைசூரில் சுற்றுவிட்டு மதியமே அங்கிருந்து கிளம்பத் திட்டம். மாலை 7 மணிக்குள் பெங்களூர் வந்துவிட வேண்டும். ஆனால் விதி விடவில்லை. என் பைக்கின் தலைப்பகுதியில் இருந்து ஏதோ ஒரு அதிர்வுச் சப்தம் வந்தபடி இருந்தது. ரொம்ப நேரத்துக்குப் பிறகே ஒரு போல்ட் உடைந்த பல்லைப் போல ஆடிக்கொண்டிருந்தது தெரிந்தது. சரி அதை முறுக்குவதற்கு மெக்கானிக்கைத் தேடினால் கிடைக்கவில்லை. ஒரு பஞ்சர் கடையில் ஒரு தாத்தா ராமரைக் காத்திருந்த அகலிகையைப் போல சமைந்து இருந்தார். நான் அழைத்ததும் நம் மோடி கம்பீரமாக இருப்பதாக நினைத்து மேடையில் எழுந்து வருவதைப் போல வந்து மிகக் கவனமாக ஆராய்ந்து மிகமிக மெதுவாக போல்ட்டை முடுக்கிவிட்டுபோல்ட்டை மாற்றணும், ஆனால் இங்கே முடியாதுஎன்று அனுப்பினார். வேறெங்கும் அதைச் செய்ய ஆள் இல்லை. இது மைசூரின் பொதுவான நிலையா அல்லது வார இறுதியென்பதாலா என்று தெரியவில்லை. அப்படியே கிளம்பி வந்தோம்

வரும் வழியில் இருட்டத் தொடங்க எங்குமே தெருவிளக்கு இல்லையா நான் பிரேக் எடுக்க விரும்பவில்லை (பயம்தான்). ஆனால் பின்பக்கம் கூர்மையாக வலியெடுக்க வேறுவழியின்றி வனப்பகுதியின் இடையே தெரிந்த ஒரு கிராமப் பகுதியில் ஒரு பெட்டிக் கடையின் முன் நிறுத்தினேன். அங்கே மிட்டாயும் பிஸ்கட்டும் நிழலைப் போல ஒரு மனிதரும் அவரது காலடியில் ஒரு நாயும் இருந்தனர். நான் கடலை மிட்டாய் வாங்கி கடித்துக்கொண்டு காலையிலே கொண்டு வந்திருந்த கருங்காப்பியில் மீதமிருந்ததைக் குடித்தேன். பல்லவி தனக்கு முருங்கைக் கீரை பறிக்க வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். பெங்களூரில் அப்படியெல்லாம் கேட்டால் சுலபத்தில் கொடுக்க மாட்டார். தண்ணீருக்கும் போக்குவரத்துக்கும் அடுத்தபடியாக அவர்கள் தம் உயிராகக் கருதுவது இந்த முருங்கை மரங்களைத்தாம். முருங்கைக் கீரையைக் கொஞ்சம் பறிச்சிக்கவா என்று பல்லவி அங்கு பலரிடமும் கூச்சமில்லாமல் கேட்டிருக்கிறாள். அவர்கள் தவறாமல் சொல்வார்கள், “என்னது முருங்கைக் கீரையா, இல்லா, எங்கள் உயிரைக் கேட்டாலும் கொடுக்கிறோம், முருங்கைக் கீரை கேட்காதீங்கஎன்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த கடைக்காரர்கள் தமிழர்கள். அவர்கள் பேசியது ஒருவித மலையாள வாடையுள்ள, பழங்குடித்தன்மையுள்ள தமிழ். பல்லவி அவர்களிடம் தெனாலி கமல் போல் பேசி அவர்களைச் சிரிக்கவைத்து அவர்களிடம் உள்ள நாயைப் பற்றி உரையாடி பத்தே நிமிடங்களில் உற்ற குடும்பத் தோழியாகி அவர்கள் வீட்டுக்கே போய் முருங்கைக் கீரை பறித்துக் கொண்டு வந்துவிட்டாள். கடைக்கார அம்மாஅடுத்தவாட்டி வீட்டுக்கு வந்து சாப்டிட்டுப் போங்கஎன்று மூன்றுமுறைகள் வாயெல்லாம் சிரிப்புடன் சொன்னார். போகும்போது நான் கேட்காமலே பல்லவி என்னிடம் சொன்னாள், “நான் முருங்கைக்கீரைக்காகத்தானெ அவங்ககிட்ட பேச்சுக் கொடுத்தேன்னு நினைக்கிறே?” “சேச்சே, நீ பேச்சுக்கொடுக்கத்தான் முருங்கைக் கீரை வாங்கினேன்னு நினைக்கிறேன்.” “ரெண்டுமே இல்ல, சட்டுன்னு தோணிச்சு கேட்டுட்டேன், அவங்களும் சந்தோஷமா கொடுத்தாங்க.” ஜென்ஸி போராட்டம் நடக்கும் நேபாளத்தில் எல்லாரையும் சமாளித்து புதிய பிரதமராகும் தகுதிகொண்டவள் அவள் என அத்தருணத்தில் புரிந்துகொண்டேன்இப்படிக் கீரையெல்லாம் வாங்கிக் கிளம்பியபோது நன்றாக இருட்டிவிட்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...