முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-பாக் டி20 (2026) உலகக்கோப்பைப் போட்டி



 பாகிஸ்தான் ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை ரொம்ப மோசமாகக் கணித்துவிட்டார்கள் போல. வேகவீச்சாளர்களுக்குப் பந்து நன்றாக ஸீம் ஆகிறது. முதல் சில ஓவர்களிலாவது குறிப்பாக குறைநீளத்திலோ லெங்திலோ விழுந்தால் ஸீம் ஆகி உள்ளே வெளியே என்று சீறுகிறது. குத்திப் போட்டால் எகிறுகிறது - குறிப்பாக அந்த பஞ்சு போன்ற எகிறும் பந்து உயரத்தின் அளவுக்கு வேகம் கொண்டிருக்காது. அதைப் புல், ஹூக் அடிப்பது கடினம். அப்படித்தான் ஹர்த்திக் முதல் ஓவரிலும் விக்கெட் எடுத்தார். பும்ராவின் ஒரு விக்கெட்டும் அப்படித்தான் விழுந்தது. அவரது முதல் பந்தே விக்கெட் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அது எட்ஜ் வாங்கி சிக்ஸர் போனது. அப்போதே எனக்கு சயிம் குச்சிகளுக்குக் குறுக்கே போகிறார், பும்ரா யார்க்கர் வீசக் கூடும் எனத் தோன்றியது. அவ்வாறே அடுத்த பந்தில் நடந்தது. இதையெல்லாம் பார்த்தபோது பாகிஸ்தான் அணித்தலைவருக்கும் பயிற்சியாளருக்கும் தாம் செய்தது முட்டாள்தனம் எனத் தோன்றியிருக்க வேண்டும் - ஷகீன் அப்ரிதியைத் தூக்கிவிட்டு இரண்டு நல்ல வேகவீச்சாளர்களை ஆடியிருக்க வேண்டும். இந்த ஆடுதளத்தில் உள்ள உயரத்தை, ஸீம் அசைவைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதிகமான சுழலர்கள் (6 பேர்கள்) அவ்வப்போது ஓட்டங்களைக் குறைத்தார்கள், ஆனால் கொத்துக்கொத்தாக விக்கெட் எடுக்கவில்லை. அங்கேயே ஆட்டத்தைப் பறிகொடுத்து விட்டார்கள்.

பாகிஸ்தான் வர்ணனையாளர்கள் தம் அணியின் தலைவரை நேரடியாக விமர்சிக்க மாட்டார்கள். மையமாக நக்கலடிப்பார்கள். இன்று அக்ரம் சொன்னார்: இந்த ஆடுதளத்தில் சுழலர்களுக்கு இணையாக வேகவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தாளர்கள், அவர்களுடைய ஓட்ட விகிதமும் மேலாக உள்ளது.
அதே போலத்தான், இந்தியாவை விட பாகிஸ்தான் அணி ரொம்பப் பதற்றமாகத் தென்பட்டார்கள். டாஸ் வென்றதும் இந்தியாவை மட்டையாட அழைத்ததிலும் என்ன லாஜிக் உள்ளதென எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.
இதுவரை பாகிஸ்தானுக்குச் சார்பாக ஒன்று மட்டுமே நடந்துள்ளது - அவர்களுடைய சுழலர்கள் 80கள் வேகத்தில் வீசியதால் பந்து அதிகமாகத் திரும்பியது. நம் சுழலர்கள் ஏதோ பேயைப் பார்த்து ஓடுவதைப் போல மரண வேகத்தில் வீசுவதால் பந்து அதிகம் திரும்பவில்லை.
ஷகீப் அப்ரிதியை அவரது மட்டையாட்டத்துக்காகத்தான் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு வர்ணனையாளர் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அவர் எண் 9இல் அல்லவா ஆடுகிறார். ஆனால் இன்றைய போட்டியில் அவர் 13வது ஓவரிலே ஆட வந்துவிட்டார். இப்போது 'புரிகிறது'.
இந்த கரகாட்டக்கார அணியை அஸோஸியே நாடாகப் பாவிப்பதே நியாயம். இவர்களுடைய இடத்தில் நபீபியா, யு.எஸ்.ஏ, ஸிம்பாப்வே ஆடலாம். இந்தப் அணிக்கு இவ்வளவு பில்ட் அப் வேற!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...