Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்தியா-பாக் டி20 (2026) உலகக்கோப்பைப் போட்டி



 பாகிஸ்தான் ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை ரொம்ப மோசமாகக் கணித்துவிட்டார்கள் போல. வேகவீச்சாளர்களுக்குப் பந்து நன்றாக ஸீம் ஆகிறது. முதல் சில ஓவர்களிலாவது குறிப்பாக குறைநீளத்திலோ லெங்திலோ விழுந்தால் ஸீம் ஆகி உள்ளே வெளியே என்று சீறுகிறது. குத்திப் போட்டால் எகிறுகிறது - குறிப்பாக அந்த பஞ்சு போன்ற எகிறும் பந்து உயரத்தின் அளவுக்கு வேகம் கொண்டிருக்காது. அதைப் புல், ஹூக் அடிப்பது கடினம். அப்படித்தான் ஹர்த்திக் முதல் ஓவரிலும் விக்கெட் எடுத்தார். பும்ராவின் ஒரு விக்கெட்டும் அப்படித்தான் விழுந்தது. அவரது முதல் பந்தே விக்கெட் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அது எட்ஜ் வாங்கி சிக்ஸர் போனது. அப்போதே எனக்கு சயிம் குச்சிகளுக்குக் குறுக்கே போகிறார், பும்ரா யார்க்கர் வீசக் கூடும் எனத் தோன்றியது. அவ்வாறே அடுத்த பந்தில் நடந்தது. இதையெல்லாம் பார்த்தபோது பாகிஸ்தான் அணித்தலைவருக்கும் பயிற்சியாளருக்கும் தாம் செய்தது முட்டாள்தனம் எனத் தோன்றியிருக்க வேண்டும் - ஷகீன் அப்ரிதியைத் தூக்கிவிட்டு இரண்டு நல்ல வேகவீச்சாளர்களை ஆடியிருக்க வேண்டும். இந்த ஆடுதளத்தில் உள்ள உயரத்தை, ஸீம் அசைவைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதிகமான சுழலர்கள் (6 பேர்கள்) அவ்வப்போது ஓட்டங்களைக் குறைத்தார்கள், ஆனால் கொத்துக்கொத்தாக விக்கெட் எடுக்கவில்லை. அங்கேயே ஆட்டத்தைப் பறிகொடுத்து விட்டார்கள்.

பாகிஸ்தான் வர்ணனையாளர்கள் தம் அணியின் தலைவரை நேரடியாக விமர்சிக்க மாட்டார்கள். மையமாக நக்கலடிப்பார்கள். இன்று அக்ரம் சொன்னார்: இந்த ஆடுதளத்தில் சுழலர்களுக்கு இணையாக வேகவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தாளர்கள், அவர்களுடைய ஓட்ட விகிதமும் மேலாக உள்ளது.
அதே போலத்தான், இந்தியாவை விட பாகிஸ்தான் அணி ரொம்பப் பதற்றமாகத் தென்பட்டார்கள். டாஸ் வென்றதும் இந்தியாவை மட்டையாட அழைத்ததிலும் என்ன லாஜிக் உள்ளதென எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.
இதுவரை பாகிஸ்தானுக்குச் சார்பாக ஒன்று மட்டுமே நடந்துள்ளது - அவர்களுடைய சுழலர்கள் 80கள் வேகத்தில் வீசியதால் பந்து அதிகமாகத் திரும்பியது. நம் சுழலர்கள் ஏதோ பேயைப் பார்த்து ஓடுவதைப் போல மரண வேகத்தில் வீசுவதால் பந்து அதிகம் திரும்பவில்லை.
ஷகீப் அப்ரிதியை அவரது மட்டையாட்டத்துக்காகத்தான் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு வர்ணனையாளர் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அவர் எண் 9இல் அல்லவா ஆடுகிறார். ஆனால் இன்றைய போட்டியில் அவர் 13வது ஓவரிலே ஆட வந்துவிட்டார். இப்போது 'புரிகிறது'.
இந்த கரகாட்டக்கார அணியை அஸோஸியே நாடாகப் பாவிப்பதே நியாயம். இவர்களுடைய இடத்தில் நபீபியா, யு.எஸ்.ஏ, ஸிம்பாப்வே ஆடலாம். இந்தப் அணிக்கு இவ்வளவு பில்ட் அப் வேற!

Comments

Popular posts from this blog

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா

  சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (CIBF) சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதை வெளியில் இருந்து பார்க்கையில் புரிந்துகொள்ள முடியாது. நானே அதை நிதி வீணடிப்பு என்றே ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் இந்த ஆண்டு அதில் கலந்து கொண்டபோது என் எண்ணம் மாறியது. குறிப்பாக அரசின் நடவடிக்கை மீது பதிப்பாளர்களுக்கு உள்ள மரியாதையினால் எழுத்தாளர்களுக்கு சில பயன்கள் கிடைக்கின்றன. ஒரு சின்ன விசயத்தைக் குறிப்பிடுகிறேன் - பதிப்பாளர்கள் முன்வைக்கும் நூல்கள் அரசின் நூற்பட்டியலில் வண்ணப்படங்களுடன் வழவழ தாளில் வெளியிடப்படுகின்றன. இந்த பட்டியல் நூலில் படைப்புகள் அந்தந்த எழுத்தாளர்களின் முகவர்களின் கீழ் பகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளார்கள். இந்த படைப்புகளை நூலில் பார்க்கும் அயல்மொழி, அயல்நாட்டுப் பதிப்பாளர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். அவர்கள் அப்படைப்புகளை மொழிபெயர்க்க முன்வருகிறார்கள். நீங்கள் அவர்களிடம் உங்கள் புத்தகங்களைக் காட்டி விளக்கினாலும் அவர்களுக்கு உங்கள் படைப்பின் முக்கியத்துவம் விளங்காது. ஏனென்றால் அவர்கள் வேறு ஊரை, மொழியைச் சேர்ந்தவர்கள். தமிழ் இலக்கியத்தில் நடப்பன வெளியாட...

அரசியல் சினிமாவில் இருந்து கட்சி சினிமா - புதிய போக்கு

சுதந்திரப் போராட்டத்தின்போது நாடகக் கலைஞர்கள் பிரச்சாரத்துக்குப் பயன்பட்டார்கள். அச்சூழலில் பிரச்சார நாடகங்களுக்கு மக்களிடையே மவுசிருக்கும் என்று தெரிந்தேதான் சில குழுக்கள் அத்தகைய நாடகங்கள் பக்கமாக நகர்ந்தார்கள். அதன்பிறகு திராவிட அரசியல் தேர்தல் களத்தில் வெல்ல நாடகங்களும் சினிமாவும் பெருமளவில் உதவின. அல்லது இந்நாடகங்களும் சினிமாக்களும் வெல்ல திராவிடக் கொள்கைகளின் புகழும் மக்கள் ஏற்பும் உதவின. இந்த பரஸ்பரச் சார்பு கவனிக்கத்தக்கது. இதுவே பின்னர் மாறப் போகிறது. (அதாவது இன்று மாறியுள்ளது) இதன் பிறகு நமது தேசிய (காங்கிரஸ்), துணைத்தேசிய (உள்ளூர் கட்சிகள்) அரசியல் களங்கள் பெரும்பளவில் நிலைப்பெற்ற தடத்திலே ஓடின. பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் பிரச்சாரத்தையே நம்பியிருந்தன. எழுபதுகளில் இந்திரா காந்திக்கு எதிரான ஜனதா தளத்தின் போராட்டங்களில் கூட சினிமாவும் நாடகமும் பெரிய பங்காற்றவில்லை, மாணவர் அமைப்புகளும் தொழிலாளர் அமைப்புகளுமே அப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர் என நினைக்கிறேன். அடுத்து, உலகமயமாக்கல் வரும்போது இந்தியாவை ஒரு வளரும் தேசமாக முன்வைக்க சினிமா உதவியது என்றாலும் அது கட்சிப் பிரச...

செம்மொழி விருது

  //குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு, ஆண்டுதோறும், 'செம்மொழி இலக்கிய விருது' என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும்.விருதுடன், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதிசெய்யும் விதமாக, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். - முதல்வர் ஸ்டாலின்// நல்ல முன்னெடுப்பு. ஆனால் செம்மொழி அடையாளம் இதன் தேசிய, உலகளாவிய விரிவை அனுமதிக்காமல் குறுக்கி விடுகிறது. இந்திய அளவிலான இலக்கிய விருதென்றோ சர்வதேச விருதென்றோ முன்வைத்திருக்கலாம். இன்னும் பெரிய அளவில் தாக்கம் இருக்கும். சொல்லப்போனால் தேசிய விருதுடன் நின்று விடாமல் நாம் சர்வதேச விருதுகளை உருவாக்க வேண்டும். செம்மொழி போன்ற அரசியல் கட்டமைப்புகளை மீற வேண்டும். ஏனென்றால் எந்த சர்வதேச விருதுக்கும் இத்தன்மை இராது. நோப...