முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புயல் அங்கிருந்தது - பிராவிக் இம்ப்ஸ்; தமிழில் ஆர்.அபிலாஷ்


வானத்தில் பறந்தன
எல்லா காட்டுவாத்துக்களும்
வானில் பறந்து கொண்டிருந்தன பனியும்
கடலுக்கு விரைந்து கொண்டிருந்தன நதிகள்
நடுக்கடல் அலைகளோ கரை நோக்கியும்


வேலியில் இருந்து ஓடிக் கொண்டிருந்தன குதிரைகள்
வேலிகள் ஓடிக் கொண்டிருந்தன பூமியில் இருந்து
பூமி தப்பித்து பறந்து கொண்டிருந்த்து வானில் இருந்து
வானம் முழுக்க நிரம்பியிருந்த்து பறக்கும் நட்சத்திரங்களாலும்
எண்ணற்ற சூரியன்களாலும்
டெய்ஸிப் பூக்கள் துள்ளி விழுந்தன புற்களில் இருந்து
மலையோர பைன் மரங்கள் தப்பித்துக் கொண்டிருந்தன
மலையும் கூட ஓட்டத்தில் இருந்தது, ஆனால்
தெற்கே பறக்கும் வாத்துகளை விட
வசந்தகால நதிகளை விட
மெதுவாக ஆனாலும் அது ஓட்டத்தில் தான் இருந்த்து



கற்கள் ஒன்றன் மேல் இன்னொன்றாய் உராய்ந்து தேய்ந்திட
சரளைக் கற்கள் அரைந்து தூசாக, புயலுக்கு முன் தப்பித்தபடி இருந்த்து அது
II
எல்லாம் தப்பித்தபடி இருந்தன
கொஞ்சம் தொலைவு பின்னிட்டாலும் நானும் கூடத் தான்
என் தப்பியோட்டம் பறக்கும் மேகத்தை விட விரைவாக
புயல் அங்கு இருந்த்து என்று மட்டுமே தெரியும் எனக்கு
பெரும் வேகத்துடன் கம்பீரமாய் திமிராய்
அற்புதமான வாளை விட கூர்மையாய்

III

ஆக நான் தப்பித்தபடி இருப்பேன்
வேகமாய் இன்னும் வேகமாய்
என் ஆன்மா புயலுடன் உரசிப்
பற்றிக் கொள்ளும் அளவு வேகமாய்
அதன் பின்
உதிர்வேன் விரிசலுற்ற பழுப்பு இலையாக
என் ஊன் பூஞ்சாணோடு சுருங்கிப் போக
குருதி ஊறி இறங்கும் மழையுடன் கரைய
என் தேகத்தின் தப்பி ஓட்டமெல்லாம் ஒரு விநோத மறுவருகை ஆக



பிராவிக் இம்ப்ஸ் ஒரு குறிப்பு
பிராவிக் ஒரு அமெரிக்க கவிஞர். 1904இல் பிறந்தார். கல்லூரிப் படிப்புக்கு பின் பாரிஸுக்கு சென்று சிக்காகோ டிரிபியூன் பத்திரிகையில் பிழைதிருத்துநராக பணி செய்தார். 1944இல் அவர் வானொலி அறிவிப்பாளராகவும் வேலை பார்த்தார். நாற்பதாவது வயதில் கார் விபத்தில் இறந்தார். இம்ப்ஸ் கவிதைகளுடன் நாவல், வாழ்க்கைசரிதை ஆகியனவும் எழுதினார். அவரது சில நூல்கள்:
  The Professor's Wife
  Eden—Exit this Way, and Other Poems (1926)
  Bernard Faÿ's Franklin: The Apostle of Modern Times (co-written with Bernard Fay; 1929

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...