முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனம் எனும் எலிப்பொறி





ஏன் மனம் சிலவேளை சோர்வு கொள்கிறது என நண்பர் சர்வோத்தமனுடன் பேசிக் கொண்டிருந்தேன். சிலர் மனச்சோர்வு பருவத்தை பொறுத்து வரும் என கூற கேட்டிருக்கிறேன். அதாவது சிலருக்கு குளிர்காலத்தில் மனதை ஒரு பாறாங்கல் அழுத்துவது போல் தோன்றும். என்ன செய்தாலும் மகிழ்ச்சி தொடர்ச்சியாக கிடைக்காது. அந்த முயற்சியிலேயே மேலும் சோர்ந்து விடுவார்கள். சீதோஷ்ண நிலை மாறினதும் சரியாகி விடும்.

மனச்சோர்வு உடல்நிலையுடனும் சம்மந்தப்பட்டதாக இருக்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்தால் மனம் சரியாகி விடும்.
ஆனால் எப்போது நாம் ஏன் மகிழ்ச்சியாக அல்லது துக்கமாக இருக்கிறோம் என உறுதியாக கூறவியலாது. அதாவது புறக்காரணங்களோ பிரச்சனைகளோ நம் மனச்சோர்வுக்கு தூண்டுகோல் அல்ல.
சர்வோத்தமன் கூறினார் “மனதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது இல்லையா? என்னதான் தெரிந்தாலும் அது ஒரு புதிர் இல்லையா?”
எனக்கு அப்போது மகிழ்ச்சி பற்றி ஒரு விசயம் தோன்றியது. மகிழ்ச்சியாய் இருந்தோம் என நாம் நினைப்பது மகிழ்ச்சி பற்றியல்ல. மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என நாம் நினைக்க துவங்கும் போது மகிழ்ச்சி முடிந்து போயிருக்கும். மகிழ்ச்சியில் இருப்பது மகிழ்ச்சியை பற்றி யோசிப்பது அல்ல. பல சமயங்களில் நம்மையே அறியாது தான் மகிழ்ச்சியாய் இருக்கிறோம். அதன் இனிமையை கூற ஆற அமர சுவைக்க முடிவதில்லை. அதனால் தான் மகிழ்ச்சியான நினைவுகளை தேக்கி வைக்க அவ்வளவு எத்தனிக்கிறோம்.
வருத்தமும் அப்படித் தான். வருத்தத்தின் பிரச்சனை வருத்தமாக இருக்கிறோம் என்கிற பிரக்ஞை தான். வருத்தத்தை சரி செய்வதை விட அந்த பிரக்ஞையை கடப்பது தான் நம் நோக்கமாய் இருக்க வேண்டும். அதுவே உதவக் கூடும்.
பிடித்த வேலைகள் – எழுதுவது, படிப்பது, விளையாடுவது, பயணிப்பது என எதுவும் – சிறுக சிறுக நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருந்து வருத்தம் பற்றின பிரக்ஞையை கடக்க உதவலாம். பின்னர் இலையுதிர் காலம் போல் மனச்சோர்வும் அகன்று விடும். ஏன் இதை சொல்கிறேன் என்றால் சில நாட்களில் நமது எந்த முயற்சியும் இன்றி தானாகவே மகிழ்ச்சியாய் நிம்மதியாய் இருப்போம். வாழ்க்கையில் சதா உற்சாகமாய் இருப்பவர்கள் அதற்காய் விரதமெல்லாம் இருப்பதில்லை. மழை பெய்வது போல் வெயிலடிப்பது போல் மகிழ்ச்சி வந்து போகிறது. அதை தக்க வைக்க ஏன் சிரமப்பட வேண்டும்? நாம் இந்த “பருவ மாற்றங்களினூடே” பட்டும்படாமல் வாழலாம். ஒரு மூங்கில் போல் நாம் வளைந்து வளைந்து நிமிர்ந்தால் ஒருக்காலும் ஒடிய மாட்டோம்.
மனம் ஒரு எலிப்பொறி தான். ஆனால் நாம் அப்படி நினைக்காதவரை அது அப்படி இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...