முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைட் டிஷ் பையன்



வாடிக்கையாளர் 1: “டேய் தம்பி இங்க வாடா. எவ்வளவு நேரமா கூப்பிடறது?

பையன்: என்னண்ணே? சொல்லுங்க”

வாடிக்கையாளர் 1: “நீ இல்ல நீங்க அவர் இல்ல. உங்களைத் தானே அவரு பத்திரிகை பேட்டியில தமிழின் சிறந்த எழுத்தாளர்னு சொன்னாரு. நீங்க என்ன இங்க?”

பையன் (தலையை சொறிந்தவாறு): “அதுவா அண்ணே... தலைவரு அடிக்கடி குவாட்டரோட இங்க வந்து சைட் டிஷ் இல்லாம உட்கார்ந்திருப்பாரு. நான் எல்லா டேபிள்ள இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா சைட் டிஷ்ஷை ஆட்டைய போட்டு தலைவருக்கு கொண்டு கொடுப்பேன். பதிலுக்கு தலைவர் எங்கிட்ட உலக இலக்கியம், உலக இசை, உலக செக்ஸ் எல்லாத்த பத்தியும் பேசுவாரு.”

வாடிக்கையாளர் 1: “தலைவருக்கு புடிச்ச சைட் டிஷ் என்னய்யா?”

பையன்: “மிக்சர்ணே”

வாடிக்கையாளர் 1: “அவரு கூட சேர்ந்து உரையாடி நீ பெரிய எழுத்தாளர் ஆயிட்டேப்பா. ஆனா நீ எழுதினது ஒண்ணத்தையும் நான் படிச்சதில்ல. நான்னு இல்ல எவனுமே படிச்சதா தெரியல. ஆனா ஊரெல்லாம் இதைப் பத்தியே பேசிக்கிட்டு கெடக்கானுவ. நீ எழுதினது எங்க வந்திருக்கு? இப்ப எதாவது எழுதி வச்சிருக்கியா?”

பையன் ஒரு கிழிந்த சிகரெட் அட்டையை காட்டுகிறான். அதன் பின்புறத்தில் “ரெண்டு சில்லி சிக்கன், ஒரு பக்கோடா, ரெண்டு பாக்கெட் மிக்சர், ரெண்டு கடலை, மூணு எம்.ஸி குவார்ட்டர், ரெண்டு பியர்” என முத்து முத்தான கையெழுத்தில் இருக்கிறது.

வாடிக்கையாளர்: “நல்ல அழகான கையெழுத்துப்பா. தலைவர் சும்மாவா உன்ன பாராட்டுவாரு. ஆனா இது மூலமா நீ என்ன சொல்ல வாறேன்னு புரியல. தலைவர் நாவல் மாதிரி ஒரே குழப்பமா இருக்கு”

பையன்: “நான் அப்பிடியெல்லாம் யோசிக்கிறதில்லண்ணே. வரவங்க கேட்கிறதை அப்பிடியே எழுதி வச்சிருவேன். சின்ன தப்பு கூட வராது. தலைவர் இதையெல்லாம் தொகுத்து நாவலா போடலாமுன்னு ஒரு பதிப்பாளர்கிட்ட கூட்டிகிட்டு போனாரு என்னை. ஆனா அவரு என்னை பார்த்ததும் யோசிக்காம ரெண்டு லார்ஜு, ஒரு ஹால்ப் தந்தூரின்னுட்டாரு. எனக்கு வருத்தமா போச்சுண்ணே

அப்போது பல திசைகளில் இருந்தும் குரல்கள்

வாடிக்கையாளர் 2: “டேய் எவ்வளவு நேரமா கூப்பிடறதுடா, வாடா இங்க”

வாடிக்கையாளர் 3: “எவண்டா அவன் த்தா மிக்சர் கேட்டு எவ்வளவு டைம் ஆவுதுடா.”

வாடிக்கையாளர் 4: “வாடா இங்க உன் மண்டைய உடைக்கிறேன். கூலிங்கா பீர் கேட்டேனா இல்லியா. இதான் உங்கூர்ல கூலிங்கா?”

வாடிக்கையாளர் 1: “நிறைய பேர் உன்னை தேடுறாங்க போல. ரொம்ப பிரபலமாயிட்டியேப்பா”

பையன் (தலையை சொறிந்தவாறு): “அதுவா அண்ணே! அந்த “பத்து கேள்விகள் பத்து பதில்களில்” தலைவர் என்னைப் பத்தி சொன்னதில இருந்தே இங்க கடையில கூட்டம் அள்ளுதுண்ணே. எல்லா வயசான எழுத்தாளர்களும் வந்து உட்காந்துகிட்டு சைட் டிஷ் கொண்டா அதை கொண்டா இதை கொண்டான்னு சாவடிக்கிறானுங்க. எத்தன பேருக்கு தான் நான் அட்டைய போட்டு சைட் டிஷ் கொடுக்கிறது” (பிறகு வெளியே பார்த்து) “டேய் இருங்கடா. என்னால சமாளிக்க முடியலடா ஸ்ஸ்ஸ்ப்பா”

வாடிக்கையாளர் 1: இதுக்கே இப்பிடி அலுத்தா எப்பிடி? உனக்கு விருது கொடுக்க போறதா வேற பேசிக்கிறாங்க...

பையன் தலைதெறிக்க ஓடுகிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...