Skip to main content

இந்தியா அடுத்த உலகக் கோப்பை வெல்லுமா?


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றியை ஒட்டி சச்சின் இந்திய அணியால் அடுத்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மட்டையாட்டம் வலுவானது. பந்து வீச்சு சுமார். களத்தடுப்பு செம கூர்மை. ஆனால் உலகக் கோப்பை ஒரு நீண்ட தொடர். அதில் தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும். எல்லாவிதமான பந்து வீச்சுகளையும் சமாளிக்க வேண்டும். தொடர் முழுக்க நன்றாக ஆடி விட்டு ஒரு ஆட்டத்தினால் இறுதி சுற்றுக்கு போக முடியாத அணிகள் உண்டு.

போன உலகக் கோப்பையின் போதும் இதே போல் தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா வெல்லும் என்றார்கள். இரண்டுமே பிரமாதமாய் பந்து வீசின. ஆனால் போக போக எரிபொருள் தீர்ந்து புகை விட்டன. எனக்கு இலங்கை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவர்கள் இறுதிச் சுற்றில் அழுத்தம் தாளாமல் சட்டென ஸ்தம்பித்தார்கள். மேலும் அணித்தேர்விலும் தவறு பண்ணினார்கள். பாகிஸ்தான் வழக்கம் போல் எப்போது கழன்று விழுந்தார்கள் என தெரியாதபடி காணாமல் போனார்கள். ஆனால் இந்த நான்கு அணிகளுமே உலகக் கோப்பைக்கு முன் அட்டகாசமாய் ஆடி வந்தார்கள். ஆனால் ஒரு நீண்ட ஆட்டத்தொடரில் இந்த சமீபத்திய ஆட்டநிலை எல்லாம் எடுபடாது.
இரண்டு விசயங்கள் வேண்டும். சிறந்த தலைமை. அது இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கையிடம் உள்ளது. மெல்ல மெல்ல ஆட்ட உச்சத்தை அரை இறுதியின் போது அடைய வேண்டும். போன உலகக் கோப்பையில் அதை இந்தியா செய்தது. இரண்டு அல்லது மூன்று வீரர்கள் தொடர்ந்து ஜொலிக்க வேண்டும். 92 உலகக் கோப்பையில் இம்ரான், இன்சமாம், 96இல் அரவிந்தா, ஜெயசூர்யா போல. போன உலகக் கோப்பையில் கூட யுவ்ராஜும் சஹீரும் தொடர்ந்து அணியை காப்பாற்றினார்கள். இந்த தொடர் ஆட்டநாயகன்கள் உலகக் கோப்பையில் ரொம்ப முக்கியம். இந்தியாவுக்கு இம்முறை அப்படி ஆட யார் இருக்கிறார்கள்?அதுவும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில்?
துள்ளலான ஆடுகளங்களில் ரெய்னா எப்படி ஆடுவார் என உறுதியாக தெரியவில்லை. கோலி நன்றாக ஆடினால் நல்லது. ரஹானே கூட ஆடலாம். ஆனால் நாம் ஒட்டுமொத்தமாக எல்லா மட்டையாளர்களின் பங்களிப்பையும் நம்பி இருக்கிறோம் எனலாம். போன தடவை போல் அனுபவமுள்ள நட்சத்திரங்கள் இந்த அணியில் இல்லை. பந்து வீச்சில் ஒருவர் கூட இல்லை.
ஆக இந்தியா முற்றிலும் வேறு விதத்தில் ஒருமித்த அணியாக தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும். 96இல் இலங்கை ஆடியது போல். அது தான் ஒரே வாய்ப்பு. மனதளவில் திணறாமல் இருந்தால் தென்னாப்பிரிக்க நிச்சயம் வெல்லலாம். உலகின் சிறந்த மட்டையாட்ட அணி அவர்களுடையது. ஆஸ்திரேலியாவின் மட்டையாட்டமும், ஒருநாள் வடிவில் பந்து வீச்சும் சுமார் தான். அதனால் அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கவில்லை. நியுசீலாந்த் கூட நன்றாக ஆட வாய்ப்புண்டு. ஆனால் ஒரு பெரிய தொடரை வெல்லும் தன்னம்பிக்கையும் அனுபவமும் முக்கியம். அது அவர்களிடம் இல்லை. இலங்கை, பாகிஸ்தான் இரண்டின் பந்து வீச்சும் நன்றாக உள்ளது; ஆனால் மட்டையாட்டம் மழைகாலத்தில் அப்பளம் போல் இருக்கிறது. இங்கிலாந்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இம்முறை உலகக் கோப்பை ஒருமாதிரி சமநிலையாய் சராசரியாய் போகும் என நினைக்கிறேன். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா தவிர பிற அணிகள் ஒரே போல் இருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை சொல்லித் தரும் பாடம் எதையும் ஊகிக்க கூடாது என்பது. என்னதான் காதலன் என்றாலும் கல்யாணம் ஆனதும் கணவன் அல்லவா! அது போல் என்னதான் நன்றாக/மோசமாக ஆடியிருந்தாலும் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் அணிகள் மாறி விடும். வேறு ஏதோ ஒரு மேஜிக் நிகழும். பார்ப்போம்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...