முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல்

என்னுடைய ஒரு நண்பர் ஊனமுற்றவர். அவர் தன்னை எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அதனால் தான் தனிமையாகவே வாழ்வெல்லாம் இருக்க போவதாயும்; அதுவே சிறந்த தீர்மானம் என்றும் என்னிடம் திரும்ப திரும்ப கூறுவார். அவருடைய தன்னிரக்கம் இதை கூறச் செய்யவில்லை என அறிவேன். ஏனெனில் அவர் துணிச்சலாய் உழைத்து வாழ்வில் முன்னேறியவர். என்னை விட நேர்மறையான சிந்தனை கொண்டவர். ஆனால் காதல் பற்றின அவர் பார்வையில் தான் சிக்கல்.



நான் அவரிடம் கூறினேன்: “பெண்கள் ஒருவரின் உடம்பை பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரு ஆணின் ஆளுமை தான் முக்கியம். ஆளுமையற்ற ஆண்களுக்கு அதிகாரம் உண்டென்றால் அவர்களை நோக்கியும் பெண்கள் கவரப்படுவார்கள்.” நான் அவரிடம் என் தனிப்பட்ட அனுபவத்தை ஆதாரமாய் வைத்தேன். எனக்கும் ஊனம் உண்டு. இளமையில் இரு பெண்கள் என்னிடம் காதல் தெரிவித்தார்கள். இருவரும் எனக்காய் எதையும் விட்டுக் கொடுக்க தயாராய் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை மணந்து கொண்டேன். கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்க்கையில் சில மாணவிகள் காதலுடன் அணுகி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி இருக்கிறேன். நான் ஒரு காதல் மன்னன் என்று கோருவதற்காய் சொல்லவில்லை. எந்த ஊனமும் இல்லாத என்னுடைய பல நண்பர்கள் காதலியே கிடைக்காமல் தவித்ததை பார்த்திருக்கிறேன். ஒரு பெண்கள் உங்கள் பேச்சால், மொழியால் கவரப்படலாம். அந்த மொழி தான் உங்கள் ஆளுமை. மொழி தான் உங்கள் தோற்றம். 

இதை நண்பர் அன்று முழுக்க ஏற்கவில்லை. ஆனால் நேற்று எனக்கு போன் பண்ணி தன்னிடம் ஒரு பெண் காதலை தெரிவித்துள்ளதாயும், என்ன முடிவெடுப்பது என புரியாமல் தவிப்பதாயும் கூறினார். “என்னால் ஒருவேளை அவளை பைக்கில் வைத்து ஊர் சுற்ற முடியாமல் போகலாம். மற்ற ஆண்களைப் போல் உடல்ரீதியான வீட்டு வேலைகளை அவளுக்காய் செய்ய முடியாது போகலாம். இதனால் ஒரு கட்டத்தில் என்னை வெறுத்து விடுவாளா?” எனக் கேட்டார். பெண்கள் ஒரு போதும் அம்மாதிரி யோசிக்க மாட்டார்கள் என அவருக்கு புரிய வைத்தேன். ஆண்கள் தாம் உடம்பால் பிறரை மதிப்பிடுகிறோம். நம் மூளை அமைப்பு அப்படி. ஒரு பெண்ணை பார்க்கையில் நாம் பார்வை அவர்களின் பால் கொடுக்கும் திறன் (மார்பு அமைப்பு) மற்றும் பிள்ளை பெறும் வலுவை (இடை அமைப்பு) தானே அளவெடுக்கிறது. ஆனால் பெண்கள் உணர்வு வயப்பட்டவர்கள். அவர்கள் கண்ணியம், கனிவு, விசுவாசம் ஆகிய விழுமியங்களுக்கு தான் மதிப்பளிப்பார்கள். பல சச்சரவுகளின் போது பெண்கள் திரும்ப திரும்ப ஆண்களிடம் கோருவது இதையெல்லாம் தான். ஆனால் ஆண்கள் தாம் பெண்களை பார்க்கும் விதத்திலேயே பெண்களும் தம்மை மதிப்பிடுகிறார்கள் என தவறாய் புரிந்து கொள்கிறோம். ஒரு பெண்ணும் உங்கள் மார்பளவையும் இடையையும் ரசிக்கலாம் என்றாலும் அதைக் கொண்டு உங்களை மதிப்பிட மாட்டாள்.

ஒரு பெண்ணை எப்படி வாழ்க்கைத் துணையாய் தேர்ந்தெடுப்பது? இக்கேள்வியை நண்பர் இறுதியாய் கேட்டார். அப்பெண் மீது ஒரு குருட்டுத்தனமான ஈர்ப்பு உங்களுக்கு இருக்க வேண்டும் என்றேன். இதே பதிலை பதினைந்து வருடங்களுக்கு முன் யாராவது என்னிடம் கூறி இருந்தால் சிரித்திருப்பேன். ஆனால் இன்று என் அனுபவம் இது தான் உண்மை என கற்றுத் தந்திருக்கிறது. ஒருவருடன் நீண்ட காலம் வாழும் போது சகிக்க முடியாத பிரச்சனைகள், கோபதாபங்கள், முரண்பாடுகள் தோன்றும். பிரிந்து போவதற்கான ஆயிரம் காரணங்களை நம் மனம் வரிசையாய் கூறும். ஆனாலும் விளக்க முடியாத ஒரு பிரியம் நமக்கு அவள் மீது இருக்கும். அது தான் அந்த உறவை நீடிக்க வைக்கிறது. (அல்லது சிலருக்கு நடைமுறை தேவைகளும் உறவு நீடிக்க காரணமாய் இருக்கும்)
ஒருவர் மீது நமக்கு அப்படி ஒரு குருட்டு அன்பு உண்டென எப்படி கண்டறிவது? மிக மோசமான ஒரு வாக்குவாதம், சண்டை நடந்த பின் நீங்கள் மீண்டும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப்படுகிறீர்கள் என்றால் அது தான் உண்மையான அன்பின் முதல் அறிகுறி. அவளோடு வாழவே கூடாது என்பதற்கு கச்சிதமான காரணம் கிடைத்த பின்னும் கூட வாழ ஆசை தோன்றுகிறது என்றால் உங்கள் காதல் உண்மையானது என்று பொருள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...