Skip to main content

Posts

Showing posts from April, 2016

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கால பைரவன் கதைகள் குறித்து உரையாடல்...

இன்று மாலை ஆறு மணிக்கு வாசக சாலையின் புத்தக விமர்சனக் கூட்டத்தில் கால பைரவனின் கதைகள் குறித்து பேசுகிறேன். நண்பர்களே சந்திப்போம்!

எம்.அஷ்வின்

முருகன் அஷ்வின் எழுத்தாளர் இரா.முருகனின் மகன். இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் பூனே அணிக்காக அவர் பந்து வீச்சு என்னை கவர்ந்தது. எம்.அஷ்வின் ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் கொண்...

நீளம்

கணினியில் நீளமான வாக்கியங்களை வாசிப்பது சிரமம் என்பதாலே நாம் இன்று சிறு வாக்கியங்களாய் எழுதி பழகி விட்டோம். நீளவாக்கியங்கள் இன்று அச்சிதழ்களில் கூட வழக்கொழிந்து விட்டன. இதை நான் துல்லியமாய் உணர்ந்தது சமீபத்தில் ஆண்டிராய்ட் போனில் உள்ள நோட்ஸ் செயலியில் எழுத ஆரம்பித்த போது தான். சமீபத்தில் இரண்டு பத்து பக்க கட்டுரைகளின் பாதியை நான் செல்பேசியில் எழுதினேன். அப்போது என் வாக்கியங்கள் மேலும் சின்னதாய் அமைவதை கவனித்தேன். குறிப்பாய் மிச்ச கட்டுரையை கணினியில் எழுதி முடித்த பின் கட்டுரையின் முதல் பாதி அதன் வடிவத்தை பொறுத்து தனித்து இருப்பதை கவனித்தேன். மே மாத உயிர்மைக்கு “கடவுள் இருக்கிறாரா?” என்று ஒரு கட்டுரை எழுதினேன். இதன் ஆரம்ப பத்திகளில் சொற்றொடர்கள் நறுக்கி தூவினது போல் இருக்கும். ஆனால் கணினியில் எழுதின பிற்பகுதியின் வாக்கியங்கள் நீளமாக இருக்கும்.

தமிழக அரசியலில் தலைமை வெற்றிடம்

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத விசித்திர சூழல் உருவாகி உள்ளது. ஜெயயலிதாவின் உடல்நலக் கேடு, கருணாநிதியின் முதுமை, அதிமுகவுக்குள் மாற்று சக்திகளின் எழுச்சி, தி.மு.கவில் ஸ்டாலின் தன் அப்பாவையே எரிச்சல்பட வைக்கும் அளவு வளர்ந்துள்ளது அடிப்படையில் இங்குள்ள் அரசியல் தலைமையை பலவீனமாக்கி உள்ளது. எம்.ஜி.ஆர் உடல் நலமற்று, கட்சியில் தன் பிடிப்பை இழந்த கட்டத்திலும் இங்கு மாற்றுத் தலைவராக திமுகவில் கருணாநிதி இருந்தார். இன்று ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றாக விஜயகாந்தும் ஸ்டாலினும் மட்டுமே உள்ளார்கள்.

அன்புக்கான நேரமும் இடமும்

அன்புக்கான நேரத்தைக் கூட தனியாய் அளந்து வைத்திருக்கிறாய் என மனைவி அடிக்கடி குற்றம் சாட்டுவாள். அப்போதெல்லாம் நான் அதை ஏற்றதில்லை. குழந்தை பிறந்து வள்ர்ந்து வரு...

பகடியை வெறுக்கும் மனநிலை

சமீபத்தில் புத்தக புரொமோஷனின் சங்கடங்களையும் அதில் எழுத்தாளனுக்கு உள்ள பிரச்சனைகளையும் பகடியான தொனியில் எழுதியிருந்தேன். அதில் இணையத்தில் எழுதுகிறவர்கள் புரொமோஷன் செய்யும் முறையும் இணையத்தில் ஜனரஞ்சகமாய் எழுதுபவர்களுக்கு புரொமோஷன் எப்படி சுலபமாய் அமைகிறது என்பதையும் சொல்லி இருந்தேன். அதை ஒரு பதிவர் நான் அவரை கேலி பண்ணினதாய் கருதிக் கொண்டு ராப்பகலாய் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார்.  பொதுவாய் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் hyper sensitive ஆக இருப்பார்கள். அவர்களைப் பார்த்து புன்னகைத்தாலே கேலி செய்கிறோமோ என வெகுண்டெழுவார்கள். அந்த பதிவர் என் மொத்த பதிவுமே தன்னைப் பற்றியது எனும் சித்திரத்தை உருவாக்கி தன் மீதே சேற்றை வாரி இறைத்துக் கொண்டார்.

தலைமுறைகள்

இப்போதெல்லாம் மைலாப்பூர் பக்கமாய் அடிக்கடி இலக்கியவாதிகளை சந்திக்கிறேன். அதுவும் சற்றும் எதிர்பாராமல். போன வாரம் ஒருநாள் காலை ஆறுமணிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். மைலாப்பூர் ஆர்.கெ சாலைக்கு பக்கத்து தெருவில் இந்திரா பார்த்தசாரதி நடைபழகுவதை பார்த்தேன். கைத்தடியால் மெல்ல மெல்ல ஊன்றி ஒரு குழந்தை நடக்க கற்பது போல் தனியாய் நடந்து போய்க் கொண்டிருந்தார். முதலில் இ.பாவா அல்லது அவரைப் போன்று வேறொருவரா என குழப்பம். வண்டியை திருப்பி அவர் அருகே போனேன். என்னைப் பார்த்ததும் அவர் குழப்பமாகி நின்று விட்டார். அவரிடம் சென்று வணங்கினேன். “இ.பா தானே?” என்றேன். அவர் கண்களில் ஆர்வம் ஒளிர தலையசைத்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இ.பா போல் உதட்டை மென்மையாய் குவித்து பல்லைக்காட்டாமல், கன்னத்தசைகளை விரிக்காமல் புன்னகைக்க வெகுசிலருக்கே வரும். பார்க்க அவ்வளவு அழகு.

தூற்றுவதன் உளவியல்

திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் பேஸ்புக்கில் சிலர் மனுஷ்யபுத்திரனை பகடி செய்து எழுதியிருப்பதை படித்தேன். வா.மணிகண்டன் ஒரு தனி ஸ்டேட்டஸே போட்டிருந்தார். “இனிமேல் கூவுவதை குறையுங்க. அரசியல் அதற்கும் மேலே…” என எழுதியிருந்தார். இம்முறை மனுஷுக்கு இடம் கிடைக்காது என்பது தெரிந்தது தான். அதனால் எனக்கு இந்த பட்டியல் எல்லாம் வியப்பாக இல்லை. ஆனால் இந்த சந்தர்பத்துக்கு என்றே காத்திருந்தது போல் அவர் மேல் ஏன் விழுந்து குதற வேண்டும் எனத் தான் புரியவில்லை.

ரோலக்ஸ் வாட்ச்

சரவணன் சந்திரன் எழுத்தில் எனக்கு பிடித்த விசயம் அவரிடம் முற்றிலும் புதிய சுவை மணம் குணம் எல்லாம் உண்டு என்பது. அவரது “ரோலக்ஸ் வாட்ச்” நாவலும் வாசகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாத ஒரு தளத்தை தொடுகிறது: கீழ்மட்டத்தில் இருந்து போராடி மேலே வருகிற ஒருவன் இறுதி வரை தன்னை நிரூபிக்க முடியாமல் போவது. அவன் அரசியல் தரகு செய்கிறான் என்பது சாக்குபோக்கு மட்டும் தான்.

புத்தகத்தை பரபரப்பாக்குவது எப்படி? ஒரு கையேடு

புத்தக புரமோஷன் ஒரு தனிவேலை. அதற்கு என நேரம் ஒதுக்கி ஒரு மாதமாவது உழைக்க வேண்டும். முதலில் ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். அடுத்து ஒவ்வொருவராய் பார்த்து புத்தகத்த...

ஆவியெழுப்புதல்: பகுத்தறிவும் அதற்கு அப்பாலும்

சமீபத்தில் டிவியில் ஒரு ஆவியெழுப்பும் கூட்டத்தை பார்த்தேன். வழுக்கைத் தலை கொண்ட ஒரு ரெவரெண்ட் ஆவேசமாய் பேசினார். ஒரு பக்கம் பார்வையாளர்களில் கணிசமாய் இருந்த பெண்கள் தலையாட்டியபடி ஜெபித்துக் கொண்டிருந்தனர். ரெவரெண்ட் ரொம்ப சாதாரணமான வசனங்களை தான் வாசித்தார். சாலமன் யாருடைய பிள்ளை என்பது போன்ற எளிமையான கேள்விகளை கேட்டார். அதற்கு சிலர் பதிலளித்தார்கள். ”ஏசு அழைக்கிறார்” பேச்சாளர்கள் போல் அவரிடம் உக்கிரமும் சரளமும் குரல் வளமும் போதவில்லை. கொஞ்சம் சொதப்பலான கூட்டம் தான். இதன் பிறகு மேடையில் இரண்டு பெண்கள் வந்தார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வறுமையில் உள்ள பெண்கள் என்பது அவர்களின் உடையை பார்த்தாலே தெரிந்தது. பயிற்சியில்லாத நடிகர்கள். ஒருவரிடம் ரெவரெண்ட் “உனக்கு என்னம்மா உடம்புக்கு?” என்றார். அப்பெண் பார்க்க ஆரோக்கியமாக வலுவாக தான் தோன்றினார். ஆனாலும் தனக்கு வயிற்று வலி என்றார். ரெவரெண்ட் உடனே அவளைப் பிடித்துள்ள ஆவியிடம் பேச ஆரம்பித்தார். அப்பெண் தளர்ந்து பின்னே சாய்ந்தார். மீனைப் போல் துடித்தார். தயாராக பின்னால் நின்றிருந்த இரண்டு பெண்கள் அவரை தளர்வாக பற்றிக் கொள்ள அவர் தரையில் ...

பெண்கள் கோயிலில் நுழைவதற்கான தடை

சில கோயில்களில் பெண்கள் நுழைவதற்கான தடை நீக்கப்பட வேண்டும் என கோரும் வேளைகளில் வலதுசாரிகள் முன்வைத்த முக்கிய வாதம் அதை பெரும்பாலான பெண்களே விரும்புவதில்லை என்...

பெரியாரிஸ்டுகளின் சிக்கல்கள்

பெரியாரிஸ்டுகளுக்கு இரண்டு இயல்புகள் உண்டு. பேச்சின் போது மைய சாதிகளை மயிலிறகால் வருடி விடுவார்கள். உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் “பார்ப்பனிய சதி” என்பார்கள். இன்னொன்று இந்து மதத்தை பழிப்பதற்காக புராணங்கள் கதை என்றும், கடவுள்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றும் கூறுவார்கள். நேற்றைய உயிர்மை அரங்கில் வெ.மதிமாறனின் பேச்சு அப்படித் தான் இருந்தது. அவை அவருடைய கருத்துக்கள், நம்பிக்கைகள், தாராளமாய் அவர் அவற்றை எடுத்தியம்பலாம். ஆனால் எனக்கு விசித்திரமாய் பட்டது என்னவென்றால் தொண்ணூறுகள் துவங்கி அதிகாரம், ஒழுக்கம், மொழியியல், பின் அமைப்பியல் சார்ந்து தமிழில் பேசப்பட்ட எந்த புது கருத்தியலையும் அவர் சீண்டியே பார்க்கவில்லை என்பது.

இன்று மாலை கவிக்கோ மன்றத்தில் வெளியாகும் பிற நூல்கள் பற்றி சில சொற்கள்...

வைரமுத்துவுக்கும் ஜெயமோகனுக்கும் பிறகு மதமதவென்ற பருவப்பெண் போன்ற மொழியை கொண்டவர் போகன் சங்கர். அவரது ரசிகன் நான். இன்று மாலை கவிக்கோ மன்றத்தில் வெளியாகும் பத்த...

இன்று மாலை என் நாவல் வெளியீடு

இன்று மாலை ஐந்து மணிக்கு கவிக்கோ மன்றத்தில் (ஆழ்வார்பேட்டை) உயிர்மை வெளியிடும் பத்து நூ ல் களில் ஒன்றாக என் நாவலான "கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" வெளியாகிறது. அன...

",கதை முடிவுக்கு வந்து விட்டது" வாங்குவதற்கு

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887. VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்..... Now WhatsApp No +91 8489401887..get any Tamil books.. கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் ஆர்.அபிலாஷ் ரூ.100

"கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" பின்னட்டை வாசகம்

என்னுடைய இம்மாத அம்ருதா கட்டுரை பற்றி அ.ராமசாமி

இலக்கியம் பற்றிய பேச்சு,  ஆசிரியனையும் பிரதிகளையும் தாண்டி நகரும் போது விரியும் வாசிப்பு தர்க்கம் சார்ந்தது. அதேநேரத்தில் இந்தத் தர்க்கம் இலக்கியவியல் சார்ந்த ...

கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்

எழுத்தின் உண்மையான வெகுமதி

வாசகர்கள் பொதுவாய் இரண்டு வகையாய் எதிர்வினையாற்றுவார்கள். (1) அறிவார்த்தமாய், படைப்பை பகுப்பாய்ந்து. (2) உணர்ச்சிகரமாய், அந்த படைப்பே தமது தான் எனும் உரிமை கோரலுடன்.  முதல் எதிர்வினை ஆர்வமூட்டும். படைப்பு பற்றி ஒரு தூலமான புரிதலை உருவாக்கவும் உதவும். இரண்டாவது எதிர்வினை ஆழமான திருப்தி தரும்.

தோனி ஏன் ஓய்வு பெற வேண்டும்?

நான் தோனி வெறுப்பாளன் அல்ல. இதை முதலில் சொல்லி விடுகிறேன். அதேநேரம் நான் தோனியின் அணித்தலைமையின் பெரிய ரசிகனும் அல்ல. இந்திய அணித்தலைவர்களை ரெண்டாய் பிரிக்கலாம். கவாஸ்கர் வகையறா, கபில் வகையறா. அசருதீன், அவருக்கு பின் தோனி ஆகியோர் கவாஸ்கர் வகையறா. இவர்கள் சம்பிரதாயமானவர்கள். தற்காப்பை முக்கியமாய் நினைப்பவர்கள். வேகவீச்சாளர்களை விட ஸ்பின்னர்களை அதிகம் விரும்புகிறவர்கள். ஒரு ஆட்டத்தை ஆவேசமாய் ஆக்ரோசமாய் வழிநடத்தாமல் அதன் போக்கில் விட்டுப் பிடிப்பவர்கள். முக்கியமாய் பவுலிங்கை விட பேட்டிங்கே முக்கியம் என நினைப்பவர்கள்.  நான் அடிப்படையில் கபில் வகை அணித்தலைமையின் விசிறி. இவ்வகையறாவை சேர்ந்த அஜய் ஜடேஜா, கங்குலி, திராவிட், விராத் கோலி போன்றோர் தான் என்னைப் பொறுத்தவரையில் சரியான அணித்தலைவர்கள்.