Skip to main content

புத்தகத்தை பரபரப்பாக்குவது எப்படி? ஒரு கையேடு


புத்தக புரமோஷன் ஒரு தனிவேலை. அதற்கு என நேரம் ஒதுக்கி ஒரு மாதமாவது உழைக்க வேண்டும். முதலில் ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும்.

அடுத்து ஒவ்வொருவராய் பார்த்து புத்தகத்தை கொடுக்க வேண்டும். அதில் உள்ள பெர்சனல் டச் உதவும். கூடுதலாய் அவருடன் புத்தகத்துடன் சேர்ந்து போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடலாம். இதற்கு சமயோஜிதம் முக்கியம். (நானெல்லாம் ஆளைப் பார்த்த குஷியில் போட்டோவை மறந்து விடுவேன்.)

அப்படியே புத்தகத்தை கையெழுத்திட்டு கொடுப்பது போல் போட்டோ எடுக்க முடிந்தால் சால சிறந்தது.

நேரில் பார்க்க முடியாவிட்டால் குரியரில் அனுப்பலாம். நூறு புத்தகங்களை அனுப்பும் செலவைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

அவ்வளவு நூல்களை பதிப்பகம் கொடுக்காவிட்டால் நீங்களே இணையத்தில் ஆர்டர் பண்ணிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் நூல் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பிரதிகள் விற்பதாய் ஒரு பிம்பத்தை உருவாக்கலாம்.

இவ்வளவு புத்தகங்களை அனுப்பினால் போதாது. புத்தகங்கள் போய் சேர்ந்துள்ளனவா என போன் செய்து உறுதிப் படுத்த வேண்டும். அது மட்டுமல்ல பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். படிச்சிட்டீங்களா, அதைப் பற்றி ரெண்டு வரியாவது எழுதுங்களேன் என நச்சரிக்க வேண்டும். அதற்கும் ஒரு அளவு உண்டு. ஓவராய் நச்சரித்தால் அந்த வெறுப்பில் புத்தகத்தை குதறி விடுவார்கள்.

இலக்கிய எழுத்தாளர்களுக்கு இதில் ஒரு சிக்கல். எழுத்தாளர்கள் பரஸ்பரம் பாராட்டியதாக வரலாறே இல்லை. பிடித்திருந்தால் தமக்குள் வைத்துக் கொள்வார்கள். அல்லது போனில் ஓரிரு வார்த்தைகள் சொல்வார்கள். ஒரு தீர்வு நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இலக்கிய எழுத்தாளர்களுக்கு அனுப்புவது.

இதில் சில இரக்க சுபாவம் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் கூரியர் வந்ததும் அதைப் பிரித்து போட்டோ எடுத்து "இன்று தபாலில் வந்தது" என முகநூலில் போட்டு விடுவார்கள். இளங்கோ கிருஷ்ணன் உதாரணம். அவரை நிச்சயம் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

முகநூலிலும் டிவிட்டரிலும் மட்டும் எழுதுபவர்களிட்டது இந்த கோளாறு கிடையாது. போட்டிப்பொறாமை பெரிதாய் இருக்காது. உலகத்- தொழிலாளர்களே-ஒன்றுபடுங்கள் மனநிலையில் இருப்பார்கள். நம் கூட சுற்றியவன் புத்தகம் போட்டு விட்டானே என கொண்டாடுவர்கள். அதுவும் கூடப்படித்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது போன்றே கும்பலாக குதூகலமாய் வந்து மொய் எழுதுவார்கள். இவர்களுக்கும் புத்தகம் அனுப்பலாம். ஏமாற்ற மாட்டார்கள்.

முன்பு இலக்கிய எழுத்தாளர்கள் பிளாகர்களைத் தேடிப் பிடித்து புத்தகம் கொடுப்பார்கள். அவர்கள் மூலம் தீ போல் உங்கள் புத்தகம் இணையம் மூலம் பரவி விடும். இப்போது அவர்கள் இடத்தில் முகநூல் பதிவர்கள். அவர்கள் ஈகோ, கல்மிஷம் இல்லாதர்கள். திராட்சை புளிக்குது என்று சொல்லவே மாட்டார்கள். அதுவும் நமக்குப் போய் புத்தகம் அனுப்பிட்டாங்களே எனும் புல்லரிப்பில் மறக்காமல் எழுதுவார்கள்.

இலக்கிய எழுத்தாளர்கள், விமர்சகர்களின் அறை முழுக்க புத்தகங்களாய் இறைந்து கிடக்கும். புதிதாய் உங்கள் நூல் தபாலை வேறு பார்த்ததும் அவர்களுக்கு நீண்ட கால மனைவியை நிர்வாணமாய் பார்ப்பது போல் இருக்கும்.

ஆனால் இலக்கியவாதிகளுக்கு அனுப்பவதில் ஒரு சின்ன பயன் உண்டு. படிக்கிறார்களோ பிடிக்கிறதோ உங்கள் நூலை நினைவு வைத்திருப்பார்கள். பிற்பாடு என்றாவது உங்கள் நூலை ஒரு பரிந்துரைப் பட்டியலில் சேர்ப்பார்கள். யாராவது கேட்டால் இளந்தலைமுறை எழுத்தாளர் என உங்களை குறிப்பிடுவார்கள். புத்தக அட்டைக்கு அப்படியான மகத்துவம் உண்டு.

கூடுதலாக் பணமும் நேரமும் இருந்தால் புத்தக அறிமுக கூட்டம் நடத்தலாம். இதனால் புத்தகம் எல்லாம் விற்காது. ஆனால் வாசகர்களை ஒரே இடத்தில் சேர்க்கவும் அவர்களுக்கு உங்களை நினைவு படுத்தவும் உதவும்

இதை கேலிக்காக சொல்லவில்லை. ஒரு புத்தகம் பற்றின சலசலப்பு கட்டமைக்கப் படுகிற ஒன்று. தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவே உண்மை. வாசக வட்டம் உள்ள எழுத்தாளர்களுக்கு இந்த தொல்லைகள் இல்லை. அசைன்மெண்டாய் வட்டத்தினருக்கே கொடுத்து விடுவார்கள். ஆனால் அதற்காய் பாசமிகு  தம்பிகளை வருடம் முழுக்க தயாரிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் இந்த புரமோஷன் வேலையை பார்க்க தனியாக ஒரு எடிட்டர் இருப்பார். அவர் நான் மேற்குறிப்பிட்ட அத்தனையும் செய்வார்.

எழுத்தாளன் தனியாக இதை செய்வது ஒரு கொடுமை தான். அதிக வேலைப் பளு கொண்டவர்களுக்கு முழி பிதுங்கிப் போகும். மேலும் இதற்கு ஒரு தனி புத்திசாலித்தனம் வேண்டும். நாக்கு சாமர்த்தியம் வேண்டும்.

நல்ல புத்தகம் தானே விற்காதா? நிச்சயம். வெளியாகி முதல் மாதத்திலே பரபரப்பாய் விற்பனை ஆனால் அது பதிப்பாளருக்கு நல்லது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த புத்தகத்தை யாரும் சீந்த மாட்டார்கள். இப்படித் தான் சில வருடங்களுக்கு முன் வெளியான ஒரு டிவீட்களின் தொகுப்பு ஆரம்ப பரபரப்புக்கு பிறகு ஒரு பிரதி கூட கூடுதலாய் விற்கவில்லை.
நல்ல புத்தகங்களை பத்து வருடங்கள் கழித்து கூட வாங்கி வாசித்து பேசுவார்கள். என்னைப் பொறுத்த மட்டில் துரித ஸ்கலிதம் எந்த படைப்புக்கும் நல்லதல்ல.

புரொமோஷன் என்பது செயற்கையாய் உருவாக்கப்படுகிற கவனம். அதை விட இயற்கையாய் வாசகர்களின் பரிந்துரை மூலமாய் கிடைக்கிற கவனம் புத்தகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

புரொமோஷன் பதிப்பாளருக்கு மிக நல்லது. எழுத்தாளனுக்கு ஓரளவு நல்லது. பதிப்பாளர் பெண்ணுக்கு அப்பா. எழுத்தாளன் பெண்ணுக்கு கணவன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...