Skip to main content

அன்புக்கான நேரமும் இடமும்


அன்புக்கான நேரத்தைக் கூட தனியாய் அளந்து வைத்திருக்கிறாய் என மனைவி அடிக்கடி குற்றம் சாட்டுவாள். அப்போதெல்லாம் நான் அதை ஏற்றதில்லை.

குழந்தை பிறந்து வள்ர்ந்து வருகிற இப்போது நான் என் நாயுடன் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைந்து வருவதை குறிப்பாய் உணர்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் முன்பு நான் என் நாயுடன் தினமும் ஒரு மணிநேரமாவது பேசுவேன். அது சுத்தமாய் கவனிக்காது. ஆனாலும் நான் லொடலொடவென அதனுடன் பேசுவதில் தனி மகிழ்ச்சி அடைவேன். அது மட்டுமல்ல, நான் வீட்டில் எங்கிருந்தாலும் என்ன வேலை பண்ணினாலும் நாய் என் காலடியிலேயே இருக்கும்.
குளிக்கும் போது வாசலில் காவல் இருக்கும். நான் சாப்பிட்டால் அதுவும் சாப்பிடும். போன் அடித்து நான் எடுக்காவிட்டால் குலைத்து ரகளை பண்ணும். ரொம்ப போரடித்தால் அதன் முகத்தில் பொய்யாய் குத்தி விளையாடுவேன். முகத்தில் என் முஷ்டி படும் முன் அது சரியாய் கவ்வி விட வேண்டும் என்பதே விதிமுறை.

இப்போது வீட்டில் பெரும்பாலான நேரம் குழந்தையுடனே இருக்கிறேன். எழுதும் போதும் சாப்பிடும் போதும் குழந்தை என் தோளில் இருக்கிறது. என் கவனம் முழுக்க குழந்தை பற்றின வேலைகளிலும் பிரச்சனைகளிலுமே. அது சாப்பிட விரும்புகிறதா, தூங்க வேண்டுமா, எப்படி அழுகையை நிறுத்துவது, எப்படி சிரிக்க வைப்பது, எப்படி தூங்க வைப்பது இப்படி என் வீட்டிலுள்ள நேரம் மையம் கொண்டு விட்டது.

இயல்பாகவே நாய் குழந்தையை தன் போட்டியாக நினைக்கிறது. இருவரையும் பக்கத்தில் வைக்க முடியாது. இதனால் நாய் இப்போது என் பக்கத்தில் இருப்பதில்லை. சற்று தொலைவில் அமர்ந்து என்னையே கவனிக்கிறது. அது பிறந்த பின் இவ்வளவு நாட்கள் அதன் அருகே நான் இல்லாமல் இருப்பது இப்போது தான் முதன்முறை.

நாய் எனக்காய் ஏங்கிப் போயுள்ளது அதன் உடலில் தெரிகிறது. முன்பெல்லாம் நான் மணிக்கணக்காய் கொஞ்சினாலும் மதிக்காது. இப்போது நான் சில நிமிடங்கள் சீராட்டினாலும் அப்படி உற்சாகம் கொள்கிறது. வீட்டுக்குள் வரும் போது ஒரு சின்ன பிஸ்கெட் துண்டு கொண்டு கொடுத்தால் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.
அதற்காய் கூடுல் நேரம் ஒதுக்கி செலவழிக்க நினைக்கிறேன். அப்போது தான் புரிகிறது என்னிடம் கூடுதலாய் நேரம் அப்படி இல்லை என.

ஒருவேளை நான் காலையில் சிக்கிரம் எழுந்தால் கூட செய்வதற்கு வேறு வேலைகள் தோன்றி விடும். வெளியே அழைத்துப் போனால் கூட நான் இதுவரை அதனுடன் செலவழித்த காலத்துக்கு ஒப்பாகாது. என் நாய்க்கு என்று என் வாழ்வில் இருந்த நேரத்தை மற்றொருவர் பறித்து விட்டார். அதை இனி மீட்க முடியாது.

அன்புக்கு அளவில்லை தான். ஆனால் அன்பு நாம் இருக்கும் இடம், நமக்கு தரப்பட்ட நேரத்தால் வடிவம் தரப்படுகிறது. இடத்துக்கும் நேரத்துக்கும் உள்ள கட்டுப்பாடு அன்புக்கும் வந்து விடுகிறது. இடத்தையும் காலத்தையும் அளப்பது போல் அன்பையும் தேக்கதண்டியால் அளக்க நேர்கிறது.

இதனால் தான் முற்றிலும் வேறொரு இடத்திற்கு கால அட்டவணைக்கு மாறும் போது நாம் அன்பால் நுரை தப்புகிறோம். அன்பை மிதமிஞ்சி பொழிகிறோம். டாஸ்மாக் ஒரு உதாரணம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...