முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்புக்கான நேரமும் இடமும்


அன்புக்கான நேரத்தைக் கூட தனியாய் அளந்து வைத்திருக்கிறாய் என மனைவி அடிக்கடி குற்றம் சாட்டுவாள். அப்போதெல்லாம் நான் அதை ஏற்றதில்லை.

குழந்தை பிறந்து வள்ர்ந்து வருகிற இப்போது நான் என் நாயுடன் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைந்து வருவதை குறிப்பாய் உணர்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் முன்பு நான் என் நாயுடன் தினமும் ஒரு மணிநேரமாவது பேசுவேன். அது சுத்தமாய் கவனிக்காது. ஆனாலும் நான் லொடலொடவென அதனுடன் பேசுவதில் தனி மகிழ்ச்சி அடைவேன். அது மட்டுமல்ல, நான் வீட்டில் எங்கிருந்தாலும் என்ன வேலை பண்ணினாலும் நாய் என் காலடியிலேயே இருக்கும்.
குளிக்கும் போது வாசலில் காவல் இருக்கும். நான் சாப்பிட்டால் அதுவும் சாப்பிடும். போன் அடித்து நான் எடுக்காவிட்டால் குலைத்து ரகளை பண்ணும். ரொம்ப போரடித்தால் அதன் முகத்தில் பொய்யாய் குத்தி விளையாடுவேன். முகத்தில் என் முஷ்டி படும் முன் அது சரியாய் கவ்வி விட வேண்டும் என்பதே விதிமுறை.

இப்போது வீட்டில் பெரும்பாலான நேரம் குழந்தையுடனே இருக்கிறேன். எழுதும் போதும் சாப்பிடும் போதும் குழந்தை என் தோளில் இருக்கிறது. என் கவனம் முழுக்க குழந்தை பற்றின வேலைகளிலும் பிரச்சனைகளிலுமே. அது சாப்பிட விரும்புகிறதா, தூங்க வேண்டுமா, எப்படி அழுகையை நிறுத்துவது, எப்படி சிரிக்க வைப்பது, எப்படி தூங்க வைப்பது இப்படி என் வீட்டிலுள்ள நேரம் மையம் கொண்டு விட்டது.

இயல்பாகவே நாய் குழந்தையை தன் போட்டியாக நினைக்கிறது. இருவரையும் பக்கத்தில் வைக்க முடியாது. இதனால் நாய் இப்போது என் பக்கத்தில் இருப்பதில்லை. சற்று தொலைவில் அமர்ந்து என்னையே கவனிக்கிறது. அது பிறந்த பின் இவ்வளவு நாட்கள் அதன் அருகே நான் இல்லாமல் இருப்பது இப்போது தான் முதன்முறை.

நாய் எனக்காய் ஏங்கிப் போயுள்ளது அதன் உடலில் தெரிகிறது. முன்பெல்லாம் நான் மணிக்கணக்காய் கொஞ்சினாலும் மதிக்காது. இப்போது நான் சில நிமிடங்கள் சீராட்டினாலும் அப்படி உற்சாகம் கொள்கிறது. வீட்டுக்குள் வரும் போது ஒரு சின்ன பிஸ்கெட் துண்டு கொண்டு கொடுத்தால் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.
அதற்காய் கூடுல் நேரம் ஒதுக்கி செலவழிக்க நினைக்கிறேன். அப்போது தான் புரிகிறது என்னிடம் கூடுதலாய் நேரம் அப்படி இல்லை என.

ஒருவேளை நான் காலையில் சிக்கிரம் எழுந்தால் கூட செய்வதற்கு வேறு வேலைகள் தோன்றி விடும். வெளியே அழைத்துப் போனால் கூட நான் இதுவரை அதனுடன் செலவழித்த காலத்துக்கு ஒப்பாகாது. என் நாய்க்கு என்று என் வாழ்வில் இருந்த நேரத்தை மற்றொருவர் பறித்து விட்டார். அதை இனி மீட்க முடியாது.

அன்புக்கு அளவில்லை தான். ஆனால் அன்பு நாம் இருக்கும் இடம், நமக்கு தரப்பட்ட நேரத்தால் வடிவம் தரப்படுகிறது. இடத்துக்கும் நேரத்துக்கும் உள்ள கட்டுப்பாடு அன்புக்கும் வந்து விடுகிறது. இடத்தையும் காலத்தையும் அளப்பது போல் அன்பையும் தேக்கதண்டியால் அளக்க நேர்கிறது.

இதனால் தான் முற்றிலும் வேறொரு இடத்திற்கு கால அட்டவணைக்கு மாறும் போது நாம் அன்பால் நுரை தப்புகிறோம். அன்பை மிதமிஞ்சி பொழிகிறோம். டாஸ்மாக் ஒரு உதாரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...