முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள் இருக்கிறாரா? எதிர்வினைகள்


முதலில் கலைச்செல்வி முகநூலில் எழுதியது:

Abilash Chandranகடவுள் இருக்கிறாரா கட்டுரையை உயிர்மை இதழில் படித்தேன்.தீராநதியிலும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அமுருதாவிலும் படித்ததாக ஞாபகம். நிறைய கட்டுரைகள் எழுதுகிறார். எங்கிருந்துதான் இத்தனை எண்ணங்கள் தோன்றுகிறதோ என்று நினைப்பேன். அவரின் தனித்துவமே தான் சொல்ல வந்த கருத்துகளை தகுந்த “மூலம்“ கொண்டு நிலைநிறுத்துவதே. அதிலும் கடவுள் இருக்கிறாரா கட்டுரை மிக முக்கியமான ஒன்றாக தோன்றுகிறது. அத்தனை அழகழகான தகவல்களால் கட்டமைத்து செல்கிறார்.  ஒரு அறிவியல் புனைக்கதையில் ஒருவர் வேற்று கிரகத்திற்கு உயிர்களை தேடிப் போகிறாராம். அங்கு மனித நடமாட்டமே இல்லை. வெறும் கட்டடங்கள் மட்டுமே உள்ளது என்று பூமியிலிருக்கும் தன் மேலதிகாரிக்கு Report செய்கிறார். அந்த நேரத்தில் அவர் கண் முன் ஒரு கட்டடம் நகர்ந்து போகிறது. கதை முடிவடைகிறது.  கடவுள் இப்படிதான் இருப்பார்.. இருக்க வேண்டும் என்பது குறித்து கற்பனை செய்யும் மனிதனுக்குள்தான் பிழையுள்ளது என்ற கருத்தை பேசுகிறார். கூறவில்லை. சுவாரஸ்யமான. கட்டுரை  இறுதியில் சொல்கிறார்..நான் பணமின்றி என் வியாதிக்கு அடிமையாக்கப்பட்டேன். ஆனால் பின்னர் என் எழுத்தின் வழி விலையின்றி மீட்கப்பட்டேன். “விலையின்றி அடிமை ஆக்கப்பட்டீர்.. பணமின்றி மீட்கப்படுவீர்“ என்ற விவிலியத்தின் வரிகளை மேற்கோளிட்டு. நல்ல கட்டுரை.

அடுத்து ரதன் ரகு முகநூலில் தெரிவித்தது:
எனது இம்மாத தீராநதி கட்டுரை பற்றி ரதன் ரகு:

““நவீன புனைவுகளில் ஊனத்தை குறியீடாக்குவதன் சிக்கல்” என்ற உங்களது கட்டுரையை தீராநதியில் வாசித்தேன். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து நாவல்களையும் முன்பு வாசித்துள்ளேன். உங்கள் கண்ணோட்டமும் ஆய்வும் வித்தியாசமாக இருந்தது. சயந்தனின் நாவலில் நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே திரைப்படமாக்கினால் நிச்சயமாக ஒரு தரமான சினிமா மலர்ந்து விடும். நவீன தொழில்நுட்பம் ஊனத்தின் மீதும், அதன் மதிப்பீடுகள், பார்வைகள் மீதும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை வித்தியாசமாக பதிவு செய்துள்ளீர்கள். செயற்கை கால்களை பொருத்தி நடக்கத் தொடங்கியவுடன், தான் ஊனமானவர் என்ற மனோநிலை மாறி இயல்பானவர் என்ற நிலைக்கு மாற்றப்படுகின்றார் என்பது அழுத்தமான பதிவு. தடித்த கண்ணாடி போடுபவர்கள் பலர் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் இவர்கள் கண்கள் பார்வை குறைந்தவர்கள் என்ற தெரியாதலளவிற்கு மாற்றங்கள் வந்துள்ளன. இது அவர்களது அக நிலையிலும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளன.
நான் வாசித்த கட்டுரைகளுள் மிகவும் வித்தியாசமான பதிவு. இன்றைய காலகட்டத்தின் மிகவும் அவசியமான பதிவு இது. வாழ்த்துக்கள்.”

இருவருக்கும் என் நன்றியும் அன்பும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...