Skip to main content

கடவுள் இருக்கிறாரா? எதிர்வினைகள்


முதலில் கலைச்செல்வி முகநூலில் எழுதியது:

Abilash Chandranகடவுள் இருக்கிறாரா கட்டுரையை உயிர்மை இதழில் படித்தேன்.தீராநதியிலும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அமுருதாவிலும் படித்ததாக ஞாபகம். நிறைய கட்டுரைகள் எழுதுகிறார். எங்கிருந்துதான் இத்தனை எண்ணங்கள் தோன்றுகிறதோ என்று நினைப்பேன். அவரின் தனித்துவமே தான் சொல்ல வந்த கருத்துகளை தகுந்த “மூலம்“ கொண்டு நிலைநிறுத்துவதே. அதிலும் கடவுள் இருக்கிறாரா கட்டுரை மிக முக்கியமான ஒன்றாக தோன்றுகிறது. அத்தனை அழகழகான தகவல்களால் கட்டமைத்து செல்கிறார்.  ஒரு அறிவியல் புனைக்கதையில் ஒருவர் வேற்று கிரகத்திற்கு உயிர்களை தேடிப் போகிறாராம். அங்கு மனித நடமாட்டமே இல்லை. வெறும் கட்டடங்கள் மட்டுமே உள்ளது என்று பூமியிலிருக்கும் தன் மேலதிகாரிக்கு Report செய்கிறார். அந்த நேரத்தில் அவர் கண் முன் ஒரு கட்டடம் நகர்ந்து போகிறது. கதை முடிவடைகிறது.  கடவுள் இப்படிதான் இருப்பார்.. இருக்க வேண்டும் என்பது குறித்து கற்பனை செய்யும் மனிதனுக்குள்தான் பிழையுள்ளது என்ற கருத்தை பேசுகிறார். கூறவில்லை. சுவாரஸ்யமான. கட்டுரை  இறுதியில் சொல்கிறார்..நான் பணமின்றி என் வியாதிக்கு அடிமையாக்கப்பட்டேன். ஆனால் பின்னர் என் எழுத்தின் வழி விலையின்றி மீட்கப்பட்டேன். “விலையின்றி அடிமை ஆக்கப்பட்டீர்.. பணமின்றி மீட்கப்படுவீர்“ என்ற விவிலியத்தின் வரிகளை மேற்கோளிட்டு. நல்ல கட்டுரை.

அடுத்து ரதன் ரகு முகநூலில் தெரிவித்தது:
எனது இம்மாத தீராநதி கட்டுரை பற்றி ரதன் ரகு:

““நவீன புனைவுகளில் ஊனத்தை குறியீடாக்குவதன் சிக்கல்” என்ற உங்களது கட்டுரையை தீராநதியில் வாசித்தேன். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து நாவல்களையும் முன்பு வாசித்துள்ளேன். உங்கள் கண்ணோட்டமும் ஆய்வும் வித்தியாசமாக இருந்தது. சயந்தனின் நாவலில் நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே திரைப்படமாக்கினால் நிச்சயமாக ஒரு தரமான சினிமா மலர்ந்து விடும். நவீன தொழில்நுட்பம் ஊனத்தின் மீதும், அதன் மதிப்பீடுகள், பார்வைகள் மீதும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை வித்தியாசமாக பதிவு செய்துள்ளீர்கள். செயற்கை கால்களை பொருத்தி நடக்கத் தொடங்கியவுடன், தான் ஊனமானவர் என்ற மனோநிலை மாறி இயல்பானவர் என்ற நிலைக்கு மாற்றப்படுகின்றார் என்பது அழுத்தமான பதிவு. தடித்த கண்ணாடி போடுபவர்கள் பலர் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் இவர்கள் கண்கள் பார்வை குறைந்தவர்கள் என்ற தெரியாதலளவிற்கு மாற்றங்கள் வந்துள்ளன. இது அவர்களது அக நிலையிலும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளன.
நான் வாசித்த கட்டுரைகளுள் மிகவும் வித்தியாசமான பதிவு. இன்றைய காலகட்டத்தின் மிகவும் அவசியமான பதிவு இது. வாழ்த்துக்கள்.”

இருவருக்கும் என் நன்றியும் அன்பும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...