Skip to main content

கொழுப்பின் அரசியல்


சமீபமாய் ஒரு ஆய்வு பற்றி படித்தேன். கொழுப்பு உடம்புக்கு அவசியமா என்பதே அதன் மையம்.

அமெரிக்காவில் எழுபதுகளில் கொழுப்பு உடம்புக்கு கேடு எனும் ஒரு கருத்து சமூகத்தில் அறிவியல் ஆய்வுகள் மூலம் வேகமாய் பரவியது, அதனால் பல கொழுப்புணவுகளை மக்கள் அங்கு தவிர்க்க ஆரம்பித்தனர். பாரம்பரிய உணவுகளுக்கு பதிலாய் துரித உணவுகளை அதிகம் உண்டனர்.

கொழுப்பு உடல் நலத்துக்கு அவசியம். செல்கள் தோன்றுவதற்கு, மூளை அணுக்களை புதுப்பிக்க, உள்ளுறுப்புகளை பாதுகாக்க, ஆற்றலை சேமிக்க கொழுப்பு தான் கைகொடுக்கிறது. ஜுரம் வந்து ஒரு வாரம் படுத்த படுக்கையானால் உங்கள் இயக்கத்துக்கு தேவையான ஆற்றலை கொழுப்பை எரித்து தான் உருவாக்குகிறது. கொழுப்பு இருப்பதனால் தான் உண்ணாவிரதமே சாத்தியமாகிறது. கொழுப்புக்காகத் தான் காந்தி தொடர்ந்து ஆட்டுப்பாலும் முந்திரிப் பருப்பும் உட்கொண்டார். ஏனென்றால் அடிக்கடி உண்ணாவிரதம் இருக்க அவருக்கு கொழுப்பு தேவைப்பட்டது.
இது சம்மந்தமாய் இப்போதுள்ள ஆய்வுகளின் முக்கியமான கண்டுபிடிப்பு என்னவெனில் இயற்கையான கொழுப்புணவுகளான நெய், வெண்ணெய், சீஸ், மாமிசம்,.பால் ஆகியன நம் உடல் எடையை அளவாய் வைத்திருக்க உதவுகின்றன. நாம் இது நாள் வரை இதை நேர்மாறாய் புரிந்து வைத்திருந்தோம்.

கொழுப்பு எப்படி எடையை கட்டுப்படுத்தும்?
மாவு மற்றும் புரத சத்துள்ள உணவை உடல் சரியாய் செரித்து சத்துக்களை உறிஞ்ச கொழுப்பு அவசியம். கொழுப்பு இல்லாத போது சரிவர பயன்படுத்தப்படாத உணவை உடல் கொழுப்பாய் மாற்றி சேமிக்கிறது. அதாவது எண்ணெயே இல்லாமல் நாலு சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள். அதை உடல் சரிவர உள்வாங்காமல் அதன் கலோரிகள் அதிகரிக்கும். இதையே நெய் தடவி சாப்பிட்டால் உடல் அதில் உள்ள மாவுச்சத்தை சரிவர உதிஞ்சும். கொழுப்பாக மாற்றாது. கலோரியும் குறையும்  இதனால் தான் அதிக சீஸ் உண்ணும் இத்தாலியர்கள் வெடுவெடுவென இருக்கிறார்கள்.

இப்போது நெய்யின் ஆரோக்கிய குணங்கள் பற்றி நிறைய கட்டுரைகள் இணையத்திலே கிடைக்கின்றன.

ஆனால் தொண்ணூறுகளில் அமெரிக்காவில் பரவலாக ஏற்பட்ட உடல் பருமன் கோளாறுக்கு இயற்கை கொழுப்புகளை அவர்கள் தவிர்த்ததே முக்கிய காரணம் என்கிறார்கள்.

ஒருவரின் ஆரோக்கியம் எதில் தெரியும்? சிற்றிடையிலா விரிந்த மார்பிலா தசை முறுகலிலா?
என்னைப் பொறுத்த மட்டில் தோலின் மிளிர்வு தான் உடல் நலத்தின் முக்கிய அறிகுறி. வற்ட்சியான தோல் கொண்டவர்கள் உணவில் சத்து பற்றாக்குறை எனப் பொருள். வெறும் காய்கறிகள், எண்ணெய் சேர்க்காத ரெண்டே சப்பாத்திகள் சாப்பிட்டு மெல்லிசாய் தோன்றும் பெண்களின் தோலை கவனித்தால் வறட்சியாய் இருக்கும். இதை மறைக்கவே நிறைய களிம்புகளும் moisterizerஉம் பயன்படுத்துகிறார்கள் (இயற்கையாய் தோல் வற்ட்சி கொண்டவர்களை இங்கு குறிப்பிடவில்லை)
குமரி மாவட்ட பெண்கள் இயல்பிலே பூசலாய் மினுமினுப்பாய் இருப்பார்கள். காரணம் தேங்காய் உணவில் முக்கிய பகுதியாய் இருப்பது.

ஒல்லியாக இருப்பதற்கான ஒரு முக்கிய அழுத்தம நவீன் ரெடிமேட் ஆடைகளில் இருந்து தான் வருகிறது. தேவைக்கு ஏற்ப உணவருந்தும் பெண்கள் இது போன்ற இறுக்கமான ஆடைகளுக்குள் பொருந்திக் கொள்ளவே முடியாது. பூசலான பெண்களுக்கு நவீன அழகான ஆடைகளே கிடையாது. அப்படியே அணிந்தாலும் அவை இயல்பான உடல் கொண்டோரையும் குண்டாய் தோன்ற வைக்கின்றன். ஆண்களின் ரெடிமேட் சட்டைகளும் இப்படித் தான். கொஞ்சம் தொப்பை இருந்தாலும் வயிற்றில் பிடித்துக் கொள்ளும்.

கொழுப்பை விட நாம் அன்றாடம் தேநீரிலும் இனிப்புகளிலும் சேர்க்கும் வெள்ளை சர்க்கரை தான் உண்மையில் ஆபத்து என்கின்றன சமகால ஆய்வுகள். இத்தனைக் காலமும் இந்த ஆய்வுகள் வெளிவராத படி கொக்கோகோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தடுத்து வைத்திருந்தன என கூறுகிறார்கள். இன்று தவிர்க்க இயலாதபடி வெள்ளை சர்க்கரை நம் உணவில் பகுதியாகி விட்டது. இந்த கோடையில் தாகமென்றால் உடனே பழரசம அல்லது ஸ்பிரைட் கோக் தானே குடிக்கிறேன். அதன் வழி சர்க்கரை உடலில் குவிந்து பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

சர்க்கரை பற்றி பேசியதனால் இதையும் சொல்லி விடுகிறேன். சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் அணுக்களில் வீக்கம் இருக்கும். இந்த வீக்கமே சர்க்கரை அணுக்களால் உள்வாங்க முடியாமல் தடுக்கின்றன. உள்வாங்கப்படாத சர்க்கரை ரத்தத்தில் பெருகி நீரிழிவு தோன்றுகிறது. இன்றைய ஆய்வுகளில் ஒன்று உணவில் போதுமான அளவு கொழுப்பு சத்து இல்லாததே செல் வீக்கத்துக்கு, அதனால் தோன்றும் நீரிழிவுக்கும் காரணம் என்கிறது.

இதனால் சொல்ல வருவது என்னவெனில் தட்டுத்தட்டாய் பஜ்ஜி சாப்பிடுங்கள் என்றல்ல. கொழுப்பை பார்த்து தேவையில்லாமல் அஞ்சாதீர்கள் எனபதே. உணவில் கொழுப்பை முழுக்க தவிர்க்காமல் மிதமாய் நிச்சயம் உட்கொள்ள வேண்டும். யாராவது பால் உணவுகளை தவிர்க்க சொன்னால் அவர்களை தவிர்த்து விடுங்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...