Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கொழுப்பின் அரசியல்


சமீபமாய் ஒரு ஆய்வு பற்றி படித்தேன். கொழுப்பு உடம்புக்கு அவசியமா என்பதே அதன் மையம்.

அமெரிக்காவில் எழுபதுகளில் கொழுப்பு உடம்புக்கு கேடு எனும் ஒரு கருத்து சமூகத்தில் அறிவியல் ஆய்வுகள் மூலம் வேகமாய் பரவியது, அதனால் பல கொழுப்புணவுகளை மக்கள் அங்கு தவிர்க்க ஆரம்பித்தனர். பாரம்பரிய உணவுகளுக்கு பதிலாய் துரித உணவுகளை அதிகம் உண்டனர்.

கொழுப்பு உடல் நலத்துக்கு அவசியம். செல்கள் தோன்றுவதற்கு, மூளை அணுக்களை புதுப்பிக்க, உள்ளுறுப்புகளை பாதுகாக்க, ஆற்றலை சேமிக்க கொழுப்பு தான் கைகொடுக்கிறது. ஜுரம் வந்து ஒரு வாரம் படுத்த படுக்கையானால் உங்கள் இயக்கத்துக்கு தேவையான ஆற்றலை கொழுப்பை எரித்து தான் உருவாக்குகிறது. கொழுப்பு இருப்பதனால் தான் உண்ணாவிரதமே சாத்தியமாகிறது. கொழுப்புக்காகத் தான் காந்தி தொடர்ந்து ஆட்டுப்பாலும் முந்திரிப் பருப்பும் உட்கொண்டார். ஏனென்றால் அடிக்கடி உண்ணாவிரதம் இருக்க அவருக்கு கொழுப்பு தேவைப்பட்டது.
இது சம்மந்தமாய் இப்போதுள்ள ஆய்வுகளின் முக்கியமான கண்டுபிடிப்பு என்னவெனில் இயற்கையான கொழுப்புணவுகளான நெய், வெண்ணெய், சீஸ், மாமிசம்,.பால் ஆகியன நம் உடல் எடையை அளவாய் வைத்திருக்க உதவுகின்றன. நாம் இது நாள் வரை இதை நேர்மாறாய் புரிந்து வைத்திருந்தோம்.

கொழுப்பு எப்படி எடையை கட்டுப்படுத்தும்?
மாவு மற்றும் புரத சத்துள்ள உணவை உடல் சரியாய் செரித்து சத்துக்களை உறிஞ்ச கொழுப்பு அவசியம். கொழுப்பு இல்லாத போது சரிவர பயன்படுத்தப்படாத உணவை உடல் கொழுப்பாய் மாற்றி சேமிக்கிறது. அதாவது எண்ணெயே இல்லாமல் நாலு சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள். அதை உடல் சரிவர உள்வாங்காமல் அதன் கலோரிகள் அதிகரிக்கும். இதையே நெய் தடவி சாப்பிட்டால் உடல் அதில் உள்ள மாவுச்சத்தை சரிவர உதிஞ்சும். கொழுப்பாக மாற்றாது. கலோரியும் குறையும்  இதனால் தான் அதிக சீஸ் உண்ணும் இத்தாலியர்கள் வெடுவெடுவென இருக்கிறார்கள்.

இப்போது நெய்யின் ஆரோக்கிய குணங்கள் பற்றி நிறைய கட்டுரைகள் இணையத்திலே கிடைக்கின்றன.

ஆனால் தொண்ணூறுகளில் அமெரிக்காவில் பரவலாக ஏற்பட்ட உடல் பருமன் கோளாறுக்கு இயற்கை கொழுப்புகளை அவர்கள் தவிர்த்ததே முக்கிய காரணம் என்கிறார்கள்.

ஒருவரின் ஆரோக்கியம் எதில் தெரியும்? சிற்றிடையிலா விரிந்த மார்பிலா தசை முறுகலிலா?
என்னைப் பொறுத்த மட்டில் தோலின் மிளிர்வு தான் உடல் நலத்தின் முக்கிய அறிகுறி. வற்ட்சியான தோல் கொண்டவர்கள் உணவில் சத்து பற்றாக்குறை எனப் பொருள். வெறும் காய்கறிகள், எண்ணெய் சேர்க்காத ரெண்டே சப்பாத்திகள் சாப்பிட்டு மெல்லிசாய் தோன்றும் பெண்களின் தோலை கவனித்தால் வறட்சியாய் இருக்கும். இதை மறைக்கவே நிறைய களிம்புகளும் moisterizerஉம் பயன்படுத்துகிறார்கள் (இயற்கையாய் தோல் வற்ட்சி கொண்டவர்களை இங்கு குறிப்பிடவில்லை)
குமரி மாவட்ட பெண்கள் இயல்பிலே பூசலாய் மினுமினுப்பாய் இருப்பார்கள். காரணம் தேங்காய் உணவில் முக்கிய பகுதியாய் இருப்பது.

ஒல்லியாக இருப்பதற்கான ஒரு முக்கிய அழுத்தம நவீன் ரெடிமேட் ஆடைகளில் இருந்து தான் வருகிறது. தேவைக்கு ஏற்ப உணவருந்தும் பெண்கள் இது போன்ற இறுக்கமான ஆடைகளுக்குள் பொருந்திக் கொள்ளவே முடியாது. பூசலான பெண்களுக்கு நவீன அழகான ஆடைகளே கிடையாது. அப்படியே அணிந்தாலும் அவை இயல்பான உடல் கொண்டோரையும் குண்டாய் தோன்ற வைக்கின்றன். ஆண்களின் ரெடிமேட் சட்டைகளும் இப்படித் தான். கொஞ்சம் தொப்பை இருந்தாலும் வயிற்றில் பிடித்துக் கொள்ளும்.

கொழுப்பை விட நாம் அன்றாடம் தேநீரிலும் இனிப்புகளிலும் சேர்க்கும் வெள்ளை சர்க்கரை தான் உண்மையில் ஆபத்து என்கின்றன சமகால ஆய்வுகள். இத்தனைக் காலமும் இந்த ஆய்வுகள் வெளிவராத படி கொக்கோகோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தடுத்து வைத்திருந்தன என கூறுகிறார்கள். இன்று தவிர்க்க இயலாதபடி வெள்ளை சர்க்கரை நம் உணவில் பகுதியாகி விட்டது. இந்த கோடையில் தாகமென்றால் உடனே பழரசம அல்லது ஸ்பிரைட் கோக் தானே குடிக்கிறேன். அதன் வழி சர்க்கரை உடலில் குவிந்து பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

சர்க்கரை பற்றி பேசியதனால் இதையும் சொல்லி விடுகிறேன். சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் அணுக்களில் வீக்கம் இருக்கும். இந்த வீக்கமே சர்க்கரை அணுக்களால் உள்வாங்க முடியாமல் தடுக்கின்றன. உள்வாங்கப்படாத சர்க்கரை ரத்தத்தில் பெருகி நீரிழிவு தோன்றுகிறது. இன்றைய ஆய்வுகளில் ஒன்று உணவில் போதுமான அளவு கொழுப்பு சத்து இல்லாததே செல் வீக்கத்துக்கு, அதனால் தோன்றும் நீரிழிவுக்கும் காரணம் என்கிறது.

இதனால் சொல்ல வருவது என்னவெனில் தட்டுத்தட்டாய் பஜ்ஜி சாப்பிடுங்கள் என்றல்ல. கொழுப்பை பார்த்து தேவையில்லாமல் அஞ்சாதீர்கள் எனபதே. உணவில் கொழுப்பை முழுக்க தவிர்க்காமல் மிதமாய் நிச்சயம் உட்கொள்ள வேண்டும். யாராவது பால் உணவுகளை தவிர்க்க சொன்னால் அவர்களை தவிர்த்து விடுங்கள்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...