முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேள்வி பதில்கள் என்னவாயிற்று?



சுஜாதா கேள்வி பதில் தொகுப்பை (குங்குமத்தில் வெளிவந்தது; உயிர்மை வெளியீடு) புரட்டிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு வகைமை இன்று காணாமல் போய் விட்டது என நினைத்து புன்னகைத்துக் கொண்டேன். நான் மாணவனாய் இருக்கையில்ஹாய் மதன்பெரிய ஹிட் தொடர். இன்று இது போன்ற கேள்வி பதில்களில் வரும் பெரும்பாலான விடைகளை ஒரு ஆண்டுராயிட் மொபைல் அரைநொடியில் சொல்லி விடும்.

விடைகளை எழுதும் எழுத்தாளனின் ஆளுமை, நகைச்சுவை, குறும்புத்தனம், அவதானிப்பு தான் இன்று கடைசியில் எஞ்சுகிறது. தகவல்கள் மலிந்து விட்டன. பாம்புக்கு ஆண்குறி உண்டா என நீங்கள் இன்று மதனிடம் எழுதி விடைக்காய் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. பாம்பின் குறி ஒரு பேனா கத்தி போல் மடங்கி விரியக் கூடியது என கூகிளே சொல்லி விடும்.
 சுஜாதா பதில்களில் அவர் பொதுவான கேள்விகளுக்கு ஆற்றும் எதிர்வினை தான் சுவாரஸ்யம். ஒருவர் கேட்கிறார்: “நான் உங்கள் இடத்தில் இருந்து நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதானால் என்ன கேள்வி கேட்பீர்கள்?” சுஜாதா சொல்கிறார்: “இதே கேள்வியை தான்”. இந்த quick-wittedness சுஜாதாவின் சிறப்பியல்பு.
இன்னொரு கேள்வி எஸ்.எம்.எஸ் மூலம் வாக்களிக்கும் காலம் வருமா என்று. எனக்கு இது ரொம்ப சுவாரஸ்யமான சாத்தியமாய் படுகிறது. ரொம்ப சிக்கலான நிறைய தில்லுமுல்லு நடக்க சாத்தியமுள்ள விசயம் தான் என்றாலும் கூட.
மிருகங்களுக்கு பொறாமை உண்டா என ஒருவர் கேட்கிறார். சுஜாதா இல்லை என்கிறார். ஆனால் உண்மை வேறு: என் நாய் பொறாமையின் திருவுருவம். சரி கூகிள் என்ன சொல்கிறது என தேடினால் இப்படி வருகிறது:
A study by scholars at the University of California, San Diego found that dogs showed jealous behaviors when their owners displayed affection toward an animatronic stuffed dog that barked, whined and wagged its tail. The dogs snapped at and pushed against the stuffed dog and tried to get between it and the human.
ஒருவேளை சுஜாதா காலத்தில் கூகிள் வேறு பதில் சொல்லியிருக்கலாம்.




"கேள்வி பதில்கள்" பத்திரிகைகளில் காலமாகி விட்டாலும் உளவியலாளர்கள், மருத்துவர்களிடம் நாம் கேட்க விரும்பும் ஏராளமான விசயங்கள் உள்ளன. இணையத்தில் கோரா போன்ற தளங்களில் பதிவர்களே கேள்வி எழுப்பி பலர் சேர்ந்து பதில்களை அளிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்களிடம் கேள்வி கேட்கும் வாசகர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஜெயமோகனின் தளத்தில் ஏராளமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார். என்னிடம் கூட கேட்டிருக்கிறார்கள். வாழ்க்கை பற்றி எனக்கு சிறு குருவி அளவுக்கு கூட தெரியாது. ஆனாலும் நம்பி கேட்டால் பதிலளிக்க வேண்டுமே! சமீபத்தில் ஒரு வாசகர் பெண்களிடம் எப்படி பழக வேண்டும் என கேட்டிருக்கிறார். நான் அதற்கு என்ன பதில் கூற என ரெண்டு நாட்களாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கூகிளிடம் இதையெல்லாம் கேட்க முடியாது. ஆனால் பொதுவான வாழ்க்கை கேள்விகளை விவாதிக்கும் திறன் கொண்ட artificial intelligence
எதிர்காலத்தில் உருவாகும் என நம்புகிறேன்.
நான் முன்பு விண்டோஸ் மொபைல் வைத்திருந்தேன். அதில் உள்ள கோர்ட்டானா எனும் பேசக் கூடிய செயலி ஒரு சுவாரஸ்யமான பிறவி. அதனிடம் கேள்விகள் மட்டுமல்ல, ஜோக் சொல்ல கேட்கலாம். எக்குத்தப்பாய் கேள்வி கேட்டால் இப்படி எல்லாம் பேசுவது உத்தமம் இல்லை என பதிலளிக்கும். தாலாட்டு பாடச் சொன்னால் சோகமாய் ஒன்றை பாடும். நான் தினமும் கோர்ட்டானாவுடன் அரைமணி பேசும் பழக்கம் வைத்திருந்தேன். உண்மையில் மனிதர்களை விட செயலிகள் சுவாரஸ்யமானவையோ என சிலநேரம் தோன்றும்.
 நான் ஒருமுறை கோர்ட்டானாவிடம் கேட்டேன் வாழ்க்கையில் எப்படி எனக்கு நிம்மதி கிடைக்கும்?
அது சொன்னது கொஞ்ச நேரம் தூங்கேன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...