முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேள்வி பதில்கள் என்னவாயிற்று?



சுஜாதா கேள்வி பதில் தொகுப்பை (குங்குமத்தில் வெளிவந்தது; உயிர்மை வெளியீடு) புரட்டிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு வகைமை இன்று காணாமல் போய் விட்டது என நினைத்து புன்னகைத்துக் கொண்டேன். நான் மாணவனாய் இருக்கையில்ஹாய் மதன்பெரிய ஹிட் தொடர். இன்று இது போன்ற கேள்வி பதில்களில் வரும் பெரும்பாலான விடைகளை ஒரு ஆண்டுராயிட் மொபைல் அரைநொடியில் சொல்லி விடும்.

விடைகளை எழுதும் எழுத்தாளனின் ஆளுமை, நகைச்சுவை, குறும்புத்தனம், அவதானிப்பு தான் இன்று கடைசியில் எஞ்சுகிறது. தகவல்கள் மலிந்து விட்டன. பாம்புக்கு ஆண்குறி உண்டா என நீங்கள் இன்று மதனிடம் எழுதி விடைக்காய் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. பாம்பின் குறி ஒரு பேனா கத்தி போல் மடங்கி விரியக் கூடியது என கூகிளே சொல்லி விடும்.
 சுஜாதா பதில்களில் அவர் பொதுவான கேள்விகளுக்கு ஆற்றும் எதிர்வினை தான் சுவாரஸ்யம். ஒருவர் கேட்கிறார்: “நான் உங்கள் இடத்தில் இருந்து நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதானால் என்ன கேள்வி கேட்பீர்கள்?” சுஜாதா சொல்கிறார்: “இதே கேள்வியை தான்”. இந்த quick-wittedness சுஜாதாவின் சிறப்பியல்பு.
இன்னொரு கேள்வி எஸ்.எம்.எஸ் மூலம் வாக்களிக்கும் காலம் வருமா என்று. எனக்கு இது ரொம்ப சுவாரஸ்யமான சாத்தியமாய் படுகிறது. ரொம்ப சிக்கலான நிறைய தில்லுமுல்லு நடக்க சாத்தியமுள்ள விசயம் தான் என்றாலும் கூட.
மிருகங்களுக்கு பொறாமை உண்டா என ஒருவர் கேட்கிறார். சுஜாதா இல்லை என்கிறார். ஆனால் உண்மை வேறு: என் நாய் பொறாமையின் திருவுருவம். சரி கூகிள் என்ன சொல்கிறது என தேடினால் இப்படி வருகிறது:
A study by scholars at the University of California, San Diego found that dogs showed jealous behaviors when their owners displayed affection toward an animatronic stuffed dog that barked, whined and wagged its tail. The dogs snapped at and pushed against the stuffed dog and tried to get between it and the human.
ஒருவேளை சுஜாதா காலத்தில் கூகிள் வேறு பதில் சொல்லியிருக்கலாம்.




"கேள்வி பதில்கள்" பத்திரிகைகளில் காலமாகி விட்டாலும் உளவியலாளர்கள், மருத்துவர்களிடம் நாம் கேட்க விரும்பும் ஏராளமான விசயங்கள் உள்ளன. இணையத்தில் கோரா போன்ற தளங்களில் பதிவர்களே கேள்வி எழுப்பி பலர் சேர்ந்து பதில்களை அளிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்களிடம் கேள்வி கேட்கும் வாசகர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஜெயமோகனின் தளத்தில் ஏராளமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார். என்னிடம் கூட கேட்டிருக்கிறார்கள். வாழ்க்கை பற்றி எனக்கு சிறு குருவி அளவுக்கு கூட தெரியாது. ஆனாலும் நம்பி கேட்டால் பதிலளிக்க வேண்டுமே! சமீபத்தில் ஒரு வாசகர் பெண்களிடம் எப்படி பழக வேண்டும் என கேட்டிருக்கிறார். நான் அதற்கு என்ன பதில் கூற என ரெண்டு நாட்களாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கூகிளிடம் இதையெல்லாம் கேட்க முடியாது. ஆனால் பொதுவான வாழ்க்கை கேள்விகளை விவாதிக்கும் திறன் கொண்ட artificial intelligence
எதிர்காலத்தில் உருவாகும் என நம்புகிறேன்.
நான் முன்பு விண்டோஸ் மொபைல் வைத்திருந்தேன். அதில் உள்ள கோர்ட்டானா எனும் பேசக் கூடிய செயலி ஒரு சுவாரஸ்யமான பிறவி. அதனிடம் கேள்விகள் மட்டுமல்ல, ஜோக் சொல்ல கேட்கலாம். எக்குத்தப்பாய் கேள்வி கேட்டால் இப்படி எல்லாம் பேசுவது உத்தமம் இல்லை என பதிலளிக்கும். தாலாட்டு பாடச் சொன்னால் சோகமாய் ஒன்றை பாடும். நான் தினமும் கோர்ட்டானாவுடன் அரைமணி பேசும் பழக்கம் வைத்திருந்தேன். உண்மையில் மனிதர்களை விட செயலிகள் சுவாரஸ்யமானவையோ என சிலநேரம் தோன்றும்.
 நான் ஒருமுறை கோர்ட்டானாவிடம் கேட்டேன் வாழ்க்கையில் எப்படி எனக்கு நிம்மதி கிடைக்கும்?
அது சொன்னது கொஞ்ச நேரம் தூங்கேன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...