Skip to main content

விஜய மகேந்திரன்



எல்லா வகுப்பிலும் ஒரு துடிப்பான, காரிய சாமர்த்தியம் கொண்ட, பழகுவதற்கு இனிதான மாணவன் இருப்பான். ஆசிரியர் கேட்கும் முன்னரே “இதை செய்யட்டுமா, அதை இப்படி மாற்றலாமா?” என முன்வருவான். எந்த முயற்சியையும் எடுப்பதற்கும் ஆசிரியர் அவனையே நம்பி இருப்பார். பிற மாணவர்கள் சோம்பி உட்கார்ந்திருந்தாலும் இவன் ஒருவன் தரும் நம்பிக்கையை ஆசிரியர் நம்பி இருப்பார். நம் இலக்கிய உலகம் ஒரு வகுப்பறை என்றால் விஜய மகேந்திரன் தான் அந்த மாணவர்.

சமூகமாக்கல், நண்பர்களை மதித்து அன்பு பாராட்டுவது, நெட்வொர்க் செய்வது ஆகிய விசயங்களில் என்னைப் போன்றோருக்கு அவரிடம் கற்க நிறைய உள்ளது. இன்று இவை அனைவருக்கும் மிகத்தேவையான திறன்களாக, பண்புகளாக பார்க்கப்படுகின்றன. ஆனால் விஜய்க்கு இயல்பாகவே நண்பர்களிடம் உரையாடவும் புது உறவுகளை ஏற்படுத்தவும் பிடிக்கிறது. அவர் அதில் தனி உற்சாகம் கொள்கிறார்.
இருவரும் முழுக்க வேறுபட்ட ஆளுமைகள் என்றாலும், மனுஷ்யபுத்திரனிடமும் நான் இதே நண்பர்களை பேணும் இயல்பை பார்க்கிறேன். இது ஒரு பிறவி இயல்பு. இத்தகையோர் பகைமையை, விமர்சனங்களை, துரோகங்களைக் கண்டு உடனடியாக கோபப்படுவார்கள். ஆனால் விரைவில் மறந்து விட்டு மீண்டும் நட்பு பாலம் அமைக்க தயாராகி விடுவார்கள். நீண்ட நாள் பகையை நெஞ்சில் புகைய விட முயலவே மாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்களை விட ”நட்பு” தான் முக்கியம். அதாவது எல்லா நண்பர்களிடமும் ஒரே ஆளைத் தான் பார்ப்பார்கள். எல்லா நண்பர்களும் இவர்களுக்கு நட்பின் மகிழ்ச்சியின் சாரம். கடவுள் என்பது சிலையில் இல்லை என்பது போன்ற ஒரு அத்வைத நிலை தான் இது.
இவர்களுக்கு எதிர்நிலையில் உள்ளவர்கள் மிகச்சில நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒருவரிடம் நட்பை விட “நண்பனையே” காண்பார்கள். அவர்களுக்கு நட்பை விட ஒரு நண்பனின் முழுமையான் அர்ப்பணிப்பு முக்கியம். “காதல் கொண்டேன்” தனுஷ் போலவே இருப்பார்கள். நண்பர்களுக்கு “தளபதி” ரஜினி போன்றும் இருப்பார்கள். இறுக்கம் மிக்க உறுதியான நண்பர்களே இவர்களின் இலக்கு.
பொதுவாக நம் இலக்கியவாதிகளில் கணிசமானோர் இரண்டாம் வகையினர். அல்லது இரண்டுக்கும் இடைப்பவர்கள். அதனாலே இங்கு ஒரு வெடிமருந்து வாசனை எப்போதும் வீசுகிறது. ஐம்பது இலக்கியவாதிகள் கூடினாலும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டும் முள் தைத்த சொற்களை பரிமாறிக் கொண்டு திரிகிறார்கள். இச்சூழலில் விஜய மகேந்திரன் மாதிரி முதல் வகையினர் உறவாடலை லகுவாக்கவும் எழுத்தாளர்கள் இணைந்து செயல்படவும் உதவுகிறார்கள். விநாயக முருகனுடன் இணைந்து அவர் நடத்திய “செவ்வி” அமைப்பின் கூட்டங்கள் ஒரு நல்ல உதாரணம்.
விஜய மகேந்திரன் ஒரு நல்ல சிறுகதையாளர். அவருக்கு அந்த வடிவம் இயல்பிலேயே கைவருகிறது. ”நகரத்திற்கு வெளியே” தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகள் உள்ளன. அதே போல் அவர் தொகுத்த “இருள் விலகும் கதைகள்” ஒரு முக்கியமான முயற்சி. அவர் நிறைய வாசிக்கக் கூடியவரும் தான். நான் அவருடன் ஒவ்வொரு முறை பேசி முடிக்கும் போது ஏதாவது ஒரு புது நூலை எனக்கு அறிமுகம் செய்வார். அதுவும் கராறான ஒரு மதிப்பீட்டுடன் அதைப் பற்றி குறிப்பிடுவார்.
அவருக்கு கொஞ்சம் எழுத்து சோம்பல் உண்டு. அதை அவர் கைவிட வேண்டும் என இங்கே வேண்டுகோள் வைக்கிறேன்.

விஜய மகேந்திரனுக்கு இன்று பிறந்த நாள். என் அன்பும் வாழ்த்துக்களும். கொண்டாடுவோம் நண்பா!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...