முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜய மகேந்திரன்



எல்லா வகுப்பிலும் ஒரு துடிப்பான, காரிய சாமர்த்தியம் கொண்ட, பழகுவதற்கு இனிதான மாணவன் இருப்பான். ஆசிரியர் கேட்கும் முன்னரே “இதை செய்யட்டுமா, அதை இப்படி மாற்றலாமா?” என முன்வருவான். எந்த முயற்சியையும் எடுப்பதற்கும் ஆசிரியர் அவனையே நம்பி இருப்பார். பிற மாணவர்கள் சோம்பி உட்கார்ந்திருந்தாலும் இவன் ஒருவன் தரும் நம்பிக்கையை ஆசிரியர் நம்பி இருப்பார். நம் இலக்கிய உலகம் ஒரு வகுப்பறை என்றால் விஜய மகேந்திரன் தான் அந்த மாணவர்.

சமூகமாக்கல், நண்பர்களை மதித்து அன்பு பாராட்டுவது, நெட்வொர்க் செய்வது ஆகிய விசயங்களில் என்னைப் போன்றோருக்கு அவரிடம் கற்க நிறைய உள்ளது. இன்று இவை அனைவருக்கும் மிகத்தேவையான திறன்களாக, பண்புகளாக பார்க்கப்படுகின்றன. ஆனால் விஜய்க்கு இயல்பாகவே நண்பர்களிடம் உரையாடவும் புது உறவுகளை ஏற்படுத்தவும் பிடிக்கிறது. அவர் அதில் தனி உற்சாகம் கொள்கிறார்.
இருவரும் முழுக்க வேறுபட்ட ஆளுமைகள் என்றாலும், மனுஷ்யபுத்திரனிடமும் நான் இதே நண்பர்களை பேணும் இயல்பை பார்க்கிறேன். இது ஒரு பிறவி இயல்பு. இத்தகையோர் பகைமையை, விமர்சனங்களை, துரோகங்களைக் கண்டு உடனடியாக கோபப்படுவார்கள். ஆனால் விரைவில் மறந்து விட்டு மீண்டும் நட்பு பாலம் அமைக்க தயாராகி விடுவார்கள். நீண்ட நாள் பகையை நெஞ்சில் புகைய விட முயலவே மாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்களை விட ”நட்பு” தான் முக்கியம். அதாவது எல்லா நண்பர்களிடமும் ஒரே ஆளைத் தான் பார்ப்பார்கள். எல்லா நண்பர்களும் இவர்களுக்கு நட்பின் மகிழ்ச்சியின் சாரம். கடவுள் என்பது சிலையில் இல்லை என்பது போன்ற ஒரு அத்வைத நிலை தான் இது.
இவர்களுக்கு எதிர்நிலையில் உள்ளவர்கள் மிகச்சில நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒருவரிடம் நட்பை விட “நண்பனையே” காண்பார்கள். அவர்களுக்கு நட்பை விட ஒரு நண்பனின் முழுமையான் அர்ப்பணிப்பு முக்கியம். “காதல் கொண்டேன்” தனுஷ் போலவே இருப்பார்கள். நண்பர்களுக்கு “தளபதி” ரஜினி போன்றும் இருப்பார்கள். இறுக்கம் மிக்க உறுதியான நண்பர்களே இவர்களின் இலக்கு.
பொதுவாக நம் இலக்கியவாதிகளில் கணிசமானோர் இரண்டாம் வகையினர். அல்லது இரண்டுக்கும் இடைப்பவர்கள். அதனாலே இங்கு ஒரு வெடிமருந்து வாசனை எப்போதும் வீசுகிறது. ஐம்பது இலக்கியவாதிகள் கூடினாலும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டும் முள் தைத்த சொற்களை பரிமாறிக் கொண்டு திரிகிறார்கள். இச்சூழலில் விஜய மகேந்திரன் மாதிரி முதல் வகையினர் உறவாடலை லகுவாக்கவும் எழுத்தாளர்கள் இணைந்து செயல்படவும் உதவுகிறார்கள். விநாயக முருகனுடன் இணைந்து அவர் நடத்திய “செவ்வி” அமைப்பின் கூட்டங்கள் ஒரு நல்ல உதாரணம்.
விஜய மகேந்திரன் ஒரு நல்ல சிறுகதையாளர். அவருக்கு அந்த வடிவம் இயல்பிலேயே கைவருகிறது. ”நகரத்திற்கு வெளியே” தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகள் உள்ளன. அதே போல் அவர் தொகுத்த “இருள் விலகும் கதைகள்” ஒரு முக்கியமான முயற்சி. அவர் நிறைய வாசிக்கக் கூடியவரும் தான். நான் அவருடன் ஒவ்வொரு முறை பேசி முடிக்கும் போது ஏதாவது ஒரு புது நூலை எனக்கு அறிமுகம் செய்வார். அதுவும் கராறான ஒரு மதிப்பீட்டுடன் அதைப் பற்றி குறிப்பிடுவார்.
அவருக்கு கொஞ்சம் எழுத்து சோம்பல் உண்டு. அதை அவர் கைவிட வேண்டும் என இங்கே வேண்டுகோள் வைக்கிறேன்.

விஜய மகேந்திரனுக்கு இன்று பிறந்த நாள். என் அன்பும் வாழ்த்துக்களும். கொண்டாடுவோம் நண்பா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...