முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று பேட்டிகள்


இம்மாத புத்தகம் பேசுது இதழில் மூன்று இளம் எழுத்தாளர்களின் பேட்டிகள் வந்துள்ளன: லஷ்மி சரவணகுமார், ஆத்மார்த்தி, போகன் சங்கர். தமிழ் பத்திரிகைகள் பொதுவாய் உங்களுக்கு முடி நரைக்கும் வரை பொருட்படுத்தி பேட்டி எடுக்காது (முடி நரைத்து டை அடித்திருந்தாலும் பரவாயில்லை) இது பத்திரிகைகள் என்றில்லை பொதுவாகவே இந்தியர்களின் ஒரு மனவியாதி தான். இளம் வயதுக்காரனுக்கு என்ன ஞானம் இருக்கக் கூடும் எனும் ஒரு துச்ச உணர்வு நம் சமூகத்துக்கு உண்டு. மாறாக ஒருவர் 1952இல் இரண்டு கதைகளும் 1972இல் நான்கு கவிதைகளும் 1991இல் ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதியிருப்பார். அவருக்கு மூத்த எழுத்தாளர் பட்டம் கொடுத்து நாம் மேடையில் அமர வைத்து மாலை சாத்துவோம். இறந்தால் அவருக்கு கொத்துக் கொத்தாய் அஞ்சலிக் கட்டுரைகள் சமர்ப்பிப்போம். ஒரு சமகால எழுத்தாளன் வருடத்திற்கு 500 பக்கங்கள் எழுதினாலும் அவனை ஒத்திப்போ என்று தான் நடத்துவோம். மூத்த எழுத்தாளர்கள் அவர்களை தம் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள். அப்படியே ஒரு பாராட்டு விழாவில் அவரைப் பற்றி பேசும் நிர்பந்தம் ஏற்பட்டாலும் மூத்த எழுத்தாளர் தன் சொந்த கதை, பார்வையாளர்கள் மத்தியில் தலை காட்டும் தன் நண்பர்கள், தான் வாசித்த எழுத்தாளர்கள் பற்றி முக்கால் மணிநேரம் உரையாற்றி விட்டு “ஆதனால் இந்த இளம் எழுத்தாளரை மனதார பாராட்டுகிறேன்” என முடித்து விடுவார்.

எஸ். செந்தில் குமார் புத்தகம் பேசுது இதழில் செய்து வரும் முக்கியமான புரட்சி இந்த சமகால எழுத்தாளர்கள் மீது ஒளி பாய்ச்சும் இப்பேட்டிகள். அவ்விதத்தில் என் பாராட்டுகள்.

என்னை கவர்ந்த சில விசித்திரங்களையும் குறிப்பிட வேண்டும். ஆத்மார்த்தி தான் ஏழு வயதிலேயே புத்தகம் வாசிக்க ஆரம்பித்ததாய் கூறுகிறார். போகன் சங்கரிடம் அவர் எழுத்தில் உள்ள ஜெயமோகனின் தாக்கம் பற்றி கேட்கிறார்கள். அவர் அது இயல்பு தான், எல்லா எழுத்தாளனுக்கும் ஒரு “அண்ணன்” எழுத்தாளர் இருப்பார், தவிர்க்க முடியாதது என்கிறார். அடுத்து அவரிடம் அவரைக் கவர்ந்த மூத்த எழுத்தாளர்கள் பற்றி கேட்கிறார்கள். அவர் தரும் பட்டியலில் ஜெயமோகன் பெயர் இல்லை.  

கருத்துகள்

ஏகாந்தன் ! இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் எழுதியிருப்பது சரிதான். பெரிசுகளில் பலருக்கு சொந்தப் புலம்பலுக்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. மேடையில் ஏறிப்பேசமாட்டோமா, டிவி நிகழ்ச்சியில் வந்துவிடமாட்டோமா எனப் பலர் ஏங்குபவர்கள். அதனால் எதற்காகத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிட்டு தன் புராணத்தை ஆரம்பித்து ஓதிக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் கேட்டுத் தொலைக்கவேண்டிய துர்பாக்கியம் வந்திருப்பவர்களுக்கு. என்ன செய்ய?

போகன் சங்கரையே கவனியுங்கள். அவர் இந்தத் தலைமுறையைச் சார்ந்தவர். ஜெயமோகனைக் குறிப்பிடுவதில் அவருக்கு இஷ்டமில்லை. பொதுவாகப் பிறரை பாராட்டும் பக்குவம், ஆசை இல்லாதவர்கள் நாம். தத்தம் விருப்பு, வெறுப்புகள்தான் மிக முக்கியம்! இந்தத் தமிழ்ச் சூழலில் பெரிசாக மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...