Skip to main content

மூன்று பேட்டிகள்


இம்மாத புத்தகம் பேசுது இதழில் மூன்று இளம் எழுத்தாளர்களின் பேட்டிகள் வந்துள்ளன: லஷ்மி சரவணகுமார், ஆத்மார்த்தி, போகன் சங்கர். தமிழ் பத்திரிகைகள் பொதுவாய் உங்களுக்கு முடி நரைக்கும் வரை பொருட்படுத்தி பேட்டி எடுக்காது (முடி நரைத்து டை அடித்திருந்தாலும் பரவாயில்லை) இது பத்திரிகைகள் என்றில்லை பொதுவாகவே இந்தியர்களின் ஒரு மனவியாதி தான். இளம் வயதுக்காரனுக்கு என்ன ஞானம் இருக்கக் கூடும் எனும் ஒரு துச்ச உணர்வு நம் சமூகத்துக்கு உண்டு. மாறாக ஒருவர் 1952இல் இரண்டு கதைகளும் 1972இல் நான்கு கவிதைகளும் 1991இல் ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதியிருப்பார். அவருக்கு மூத்த எழுத்தாளர் பட்டம் கொடுத்து நாம் மேடையில் அமர வைத்து மாலை சாத்துவோம். இறந்தால் அவருக்கு கொத்துக் கொத்தாய் அஞ்சலிக் கட்டுரைகள் சமர்ப்பிப்போம். ஒரு சமகால எழுத்தாளன் வருடத்திற்கு 500 பக்கங்கள் எழுதினாலும் அவனை ஒத்திப்போ என்று தான் நடத்துவோம். மூத்த எழுத்தாளர்கள் அவர்களை தம் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள். அப்படியே ஒரு பாராட்டு விழாவில் அவரைப் பற்றி பேசும் நிர்பந்தம் ஏற்பட்டாலும் மூத்த எழுத்தாளர் தன் சொந்த கதை, பார்வையாளர்கள் மத்தியில் தலை காட்டும் தன் நண்பர்கள், தான் வாசித்த எழுத்தாளர்கள் பற்றி முக்கால் மணிநேரம் உரையாற்றி விட்டு “ஆதனால் இந்த இளம் எழுத்தாளரை மனதார பாராட்டுகிறேன்” என முடித்து விடுவார்.

எஸ். செந்தில் குமார் புத்தகம் பேசுது இதழில் செய்து வரும் முக்கியமான புரட்சி இந்த சமகால எழுத்தாளர்கள் மீது ஒளி பாய்ச்சும் இப்பேட்டிகள். அவ்விதத்தில் என் பாராட்டுகள்.

என்னை கவர்ந்த சில விசித்திரங்களையும் குறிப்பிட வேண்டும். ஆத்மார்த்தி தான் ஏழு வயதிலேயே புத்தகம் வாசிக்க ஆரம்பித்ததாய் கூறுகிறார். போகன் சங்கரிடம் அவர் எழுத்தில் உள்ள ஜெயமோகனின் தாக்கம் பற்றி கேட்கிறார்கள். அவர் அது இயல்பு தான், எல்லா எழுத்தாளனுக்கும் ஒரு “அண்ணன்” எழுத்தாளர் இருப்பார், தவிர்க்க முடியாதது என்கிறார். அடுத்து அவரிடம் அவரைக் கவர்ந்த மூத்த எழுத்தாளர்கள் பற்றி கேட்கிறார்கள். அவர் தரும் பட்டியலில் ஜெயமோகன் பெயர் இல்லை.  

Comments

நீங்கள் எழுதியிருப்பது சரிதான். பெரிசுகளில் பலருக்கு சொந்தப் புலம்பலுக்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. மேடையில் ஏறிப்பேசமாட்டோமா, டிவி நிகழ்ச்சியில் வந்துவிடமாட்டோமா எனப் பலர் ஏங்குபவர்கள். அதனால் எதற்காகத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிட்டு தன் புராணத்தை ஆரம்பித்து ஓதிக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் கேட்டுத் தொலைக்கவேண்டிய துர்பாக்கியம் வந்திருப்பவர்களுக்கு. என்ன செய்ய?

போகன் சங்கரையே கவனியுங்கள். அவர் இந்தத் தலைமுறையைச் சார்ந்தவர். ஜெயமோகனைக் குறிப்பிடுவதில் அவருக்கு இஷ்டமில்லை. பொதுவாகப் பிறரை பாராட்டும் பக்குவம், ஆசை இல்லாதவர்கள் நாம். தத்தம் விருப்பு, வெறுப்புகள்தான் மிக முக்கியம்! இந்தத் தமிழ்ச் சூழலில் பெரிசாக மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...