Skip to main content

ஆறில் இருந்து அறுபது வரை

நான் இரவு வீட்டுக்கு திரும்பும் போது என் குடியிருப்பில் உள்ள மற்றொருவரும் கூட வருகிறார். அவரது வீடு முதல் மாடியில். நான் அவரை கடந்து தான் மூன்றாவது மாடிக்கு செல்ல வேண்டும். இன்று நான் மாடிப்படிகள் ஏறும் போது அவர் தன் வீட்டு வாசலை அடைந்து சிறுகுழந்தையான தன் மகனுக்கு குரல் கொடுப்பது கேட்டது. அவரது மகன் அப்பா என்று கூவியபடி ஓடி வருவதும் கேட்டது. அடுத்து பையன் அப்பாவிடம் ”நீ எனக்கு என்ன வாங்கி வந்தே?” என திரும்ப திரும்ப கேட்கிறான். இதை அடுத்து வீட்டில் உள்ளோரிடம் அப்பா தனக்கு முறுக்கு கொண்டு வந்துள்ளதை அறிவிக்கிறான். ஆனால் முறுக்கை அவன் அப்பாவிடம் தரக் கேட்கவில்லை. வாங்கி வந்த மகிழ்ச்சியே அவனை துள்ள வைக்கிறது. அவன் அவசரமாய் அப்பாவிடம் தனது அன்றைய நாளின் முக்கியமான அனுபவங்களை பகிர ஆவேசப்படுகிறான். கொய்யா மரத்தில் அணில் ஒன்றை பார்த்தது பற்றி சத்தமாய் தெரிவிக்கிறான். திரும்ப திரும்ப அணிலின் செயல்களை வர்ணிக்க முயன்று திணறுகிறான்.

எனக்கு அப்பையனின் நடவடிக்கைகள் ஒரு விசயத்தை புரிய வைத்தன. வளர்ந்த பின்னும் மனிதர்கள் தம்மை யாராவது சந்திக்க வரும் போது இந்த இரண்டு காரியங்களை தான் செய்கிறார்கள். ஒன்று, “நீ எனக்கு என்ன கொண்டு வந்துள்ளாய்?” என கேட்கிறார்கள். இது உணவுப்பொருள், மது, பரிசுப்பொருள், பணம், ஒரு நல்ல அனுபவம், சுவையான கதை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெறுங்கையுடன் வரும் நண்பர் கூட நம்மிடம் ஏதோ சில ஆர்வமூட்டும் சொற்களை பகிர வேண்டும் என முதலில் எதிர்பார்க்கிறோம். அந்த நண்பரை வெளியே சந்தித்தால் அவர் நம்மை ஒரு புது இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும், ஒரு இனிய புது நபரை அறிமுகப்படுத்த வேண்டும், சுவையான வித்தியாசமான உணவகத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என கோருகிறோம். இதையெல்லாம் நண்பர் செய்யாவிட்டாலும் நமக்கே தெரியாமல் எதிர்பார்க்கிறோம். இதில் ஏதாவது ஒன்றை செய்யும் நண்பரை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இதை செய்யத் தெரிந்தவர்கள் உற்சாகமான நட்பு வட்டம் கொண்ட பிரபலமான பலரும் விரும்பும் நபராக இருப்பார்.


எனக்கு இதை சொல்லும் போது நண்பர் மனுஷ்யபுத்திரன் மறைந்த கவிஞர் குமரகுருபரன் பற்றி கூறியது நினைவு வருகிறது. அவர் முதலில் குமரகுருபரனை சந்திப்பது மழைவெள்ளத்தின் போது தான். குருபரன் அப்போது மனுஷுக்காக கொஞ்சம் உணவுடன் ஒரு ஆட்டோவில் அவரை தேடி வருகிறார். “நீங்கள் தனியாய் சிரமப்படுகிறீர்கள் என கேள்விப்பட்டேன். அது தான் வந்தேன்” என்கிறார். அது போல் குருபரன் தன்னை பார்க்க வரும் போது ”உங்களுக்காக தேடி வாங்கி வந்தேன்” என வித்தியாசமாய் ஏதாவது ஒரு பரிசுப்பொருளை கொண்டு வரும் வழக்கம் வைத்திருந்ததாய் சொன்னார். அந்த பொருட்கள் முக்கியமில்லை. ஆனால் ஒருவர் நமக்காய் அக்கறையுடன் ஒன்றை கொண்டு வருகிறார் எனும் உணர்வு தரும் அணுக்கம் மிக ஆழமானது.
நீங்கள் உங்கள் நண்பர்களுடனான மறக்க முடியாத நினைவுகள் ஏதாவது ஒரு அனுபவத்தை, உணவை, மதுவை, சுவையான சம்பவங்களை பகிர்ந்ததாகவே இருக்கும்.

நான் முதலில் சொன்ன குழந்தைக்கு வெளியே செல்ல முடியாது. அதற்கு பரிசு கொண்டு வரும் ஒரே வெளியுலக பிரதிநிதி அப்பா தான். ஆனால் வளர்ந்து நாம் வெளியே செல்ல துவங்கிய பின்னரும் அது போல் ஒரு அப்பாவை நம் நண்பர்களிடம் எதிர்பார்க்கிறோம்.

இரண்டாவதாய் ஒருவர் நமக்காக ஏதோ ஒரு தனிச்சிறப்பான பரிசு கொண்டு வந்ததாய் அறிந்ததும் நாம் மடை திறந்தது போல் நம் அன்றைய நினைவுகளை, அனுபவங்களை, உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். நம் பேச்சை அப்படி தொந்தரவின்றி ஆர்வமாய் கேட்பவர்களை நாம் உள்ளார நேசிக்கிறோம்.

ஊரில் எனக்கு ஒரு பாட்டி இருக்கிறார். அவரால் நடக்க முடியாது. நிறைய உடல் உபாதைகள். ஒரு அறையில் அடைந்து கிடப்பார். அவரைப் பார்க்க என் அம்மா செல்லும் போது நான் வாங்கி அளித்ததாய் சொல்லி ஏதாவது ஒரு தின்பண்டத்தை தன் காசில் வாங்கி கொடுப்பார். அது போக தான் வாங்கி கொணர்ந்ததாய் சொல்லி ஏதாவது துணி மணியும் கொடுப்பார். இவற்றையெல்லாம் கையில் வாங்கியதும் பாட்டி பூரித்து போய் விடுவார். அடுத்து அரைமணி நேரம் தனக்கு கை கால் உளைச்சல் எடுக்கிறது, தன்னை யாரும் சரிவர கவனிப்பது இல்லை என புலம்புவார். அதை என் அம்மா மறுக்காமல் கேட்டிருந்து விட்டு திரும்ப வருவார். அந்த மகிழ்ச்சி பாட்டிக்கு ஆறு மாதங்களுக்கு போதும்.


மனிதன் பிறந்ததில் இருந்து கடைசி வரை மாறுவதில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...