Skip to main content

“ஆணுறைகள் வாங்குவது தொடர்பாக”


இம்மாத உயிர்மையில் வெளிவந்துள்ள “ஆணுறைகள் வாங்குவது தொடர்பாக” எனும் மனுஷ்யபுத்திரன் கவிதை நீண்ட நேரம் என் நினைவில் இருந்து நீங்க மறுத்தது. அதில் ஒரு இளம் பெண் சூப்பர் மார்க்கெட்டில் நீண்ட நேரமாய் அவஸ்தையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஆணுறை ஒன்று வாங்க வேண்டும். ஆனால் யார் கண்ணிலும் படாமல் வாங்க வேண்டும். விலைப்பட்டியல் போடும் போது அது தனியாய் தெரியக் கூடாது என தேவையற்ற சில பொருட்களையும் சேர்த்து வாங்குகிறாள். அவளுக்கு ஒரு ஜோடி அரவணைத்து நிற்கும் படம் கொண்ட ஆணுறை பாக்கெட் வாங்க ஆசை. ஆனால் கூச்சப்பட்டு படம் இல்லாத பாக்கெட் ஒன்றை தேர்வு செய்கிறாள். அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக விலை போடும் பெண் ஆணுறை பாக்கெட்டை வேறு எல்லா பொருட்களையும் போன்று அக்கறையின்றி கையாள்கிறாள். அவள் கையில் பொருட்களின் பையுடன் அபரிதமான சுதந்திரத்துடன் வெளியே வீதியில் இறங்குகிறாள்.

 கவிதை இவ்வளவு தான். ஆனாலும் ஒரு அழுத்ததுக்காக, உணர்வுரீதியாய் வாசகனாய் ஒன்ற வைப்பதற்காக அப்பெண் பின்னாளில் தற்கொலை செய்வதாகவும் அவள் அம்மா அப்போது அவளது புத்தகத்தின் இடையே மகள் பயன்படுத்தாமல் வைத்திருந்த ஆணுறையை கண்டு அதிர்வதாகவும் மனுஷ்யபுத்திரன் எழுதுகிறார்.
அந்த பெண் ஏன் ஆணுறையை வாங்க வேண்டும்? அதுவும் பயன்பாட்டு நோக்கம் இல்லாதபட்சத்தில்? இது தான் கவிதையின் மையம்.
அவளுக்கு சமூக கண்காணிப்பை மீறி ஒரு செயலை செய்வதில் ஒரு த்ரில் உள்ளது. அவள் அபரிதமான சுதந்திரத்தை அச்செயல் வழி அடைகிறாள். இக்கவிதை சமூக கண்காணிப்பு பற்றினது. மீறல் வழி மனிதர்கள் அனுதினம் எவ்வாறு தம் சுதந்திரத்தை சிறுக சிறுக மீட்கிறார்கள் என அவதானிக்கிறது இக்கவிதை.
இக்கவிதையின் பிரதான உணர்வு கழிவிரக்கம். அதுவும் பலவீனமான ஒற்றை மனுஷியின் அவலமான மீறல், அவளது அபத்தம், தடுமாற்றம் மீதான நமது பரிவு.
சமீக காலமாய் மனுஷ்யபுத்திரன் 20 வருடங்களுக்கு முந்தைய தன் கவிதை பாணிக்கு திரும்புவதாய் எனக்கு தோன்றுகிறது. குறிப்பாய் அவரது “நீராலானது”, “என் படுக்கைறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” தொகுப்புகளின் பாணிக்கு. அப்போது அவர் தான் சொல்ல வரும் சிக்கல், அனுபவம், அபத்தம் எதுவென குறி வைத்து அதன் மீது லேசர் கதிர் பாய்ச்சுவது போல் எழுதுவார். ஸ்ருதி ஹாசன் போன்று கொழுப்பேயற்ற கவிதைகள் எழுதினார். அதன் பின்னர் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் குறிப்பாய் அவர் கவிதைகள் இன்னொரு தளத்திற்கு சென்றன. ஒரு நாவலின் அடர்த்தியான அத்தியாயம் ஒன்றிற்கு நிகரான கவிதைகள் எழுதினார். நிறைய அடுக்குகள், சம்பவங்கள், கேள்வி பதில்கள், நியாய தர்க்கங்கள் நிறைந்ததாய், சிதறலான சித்திரங்கள் கொண்டவையாய் கவிதைகளை மாற்றினார். ”பசித்த பொழுது”, “இதற்கு முன்பும் இதற்கு பிறகும்” ஆகிய தொகுப்புகளை இவ்வகை கவிதைகளின் உச்சம் எனலாம். இந்த முன்னகர்வின் மூலம் தன்னுடன் எழுத ஆரம்பித்த நவீனத்துவ எழுத்தாளர்களை அவர் நிச்சயம் தாண்டி சென்றார்.
ஆனாலும் எனக்கு அவரது “நீராலானது” காலத்துக்கு பாணி மீது ஒரு நினைவேக்க மயக்கம் உண்டு. மனுஷ்யபுத்திரனின் அக்காலத்துக்கு கவிதைகளில் ஒரு விசித்திரம், அந்நியத்தன்மை தூக்கலாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் ஐரோப்பிய தன்மை தனியாக தெரியும். இப்போது அவர் எழுதும் கவிதைகளில் மீண்டும் அந்த ஐரோப்பிய தன்மை தலைதூக்குகிறது. அதே போல் ஜிம்மில் இருந்து துள்ளி வெளியேறும் இளம்பெண்ணைப் போன்ற வடிவம் கொண்டவையாய் இவை உள்ளதும் சிறப்பு.
நான் குறிப்பிட்ட குணாதசியங்களுக்கு மேற்சொன்ன கவிதையே உதாரணம். அதில் வருகிற அந்நியமாதல், தனிமை ஐரோப்பிய கவிதைகளில் தோன்றுபவை. இந்திய கவிதை ஐரோப்பிய தன்மை கொண்டதாக இருக்கலாமா? ஆம் நிச்சயமாய். கவிதை எப்போதுமே எதார்த்தம் நோக்கி நகரத் தேவையில்லை. மலையாள சாயலில் எழுதப்படும் ஒரு தமிழ்க் கவிதை தமிழ் வாழ்வை பேசும் தமிழ்க்கவிதையை விட துலக்கமாய் தனித்தன்மை கொண்டதாய் இருக்கும். கவிதையில் இப்படி வேறொரு கலாச்சார புள்ளியில் இருந்து நம் உலகை பார்க்கும் தோரணை முக்கியமானது. நாம் நேரடியாய் பார்க்கும் தமிழ் வாழ்வை சிறுகதையில், நாவலில் சித்தரிக்கும் போது படிக்க பிடிக்கிறது. ஆனால் கவிதையில் அது அலுப்பூட்டும். கவிதையின் ஒரு தனித்துவமான பிரச்சனை இது. தமிழ் வாழ்வை எந்தளவு தமிழற்ற புலத்தில் இருந்து எழுதுகிறீர்களோ அந்தளவு அக்கவிதைகள் அபாரமாய் அமையும்.
இம்மாத உயிர்மை கவிதைகளில் மற்றொரு குட்டிக்கவிதையும் என்னை கவர்ந்தது. மேற்சொன்ன விசித்திரம், அபத்தம், எளிமை இக்கவிதையிலும் உள்ளது.
மீனாவின் சுயசரிதை

“மீனாவாக வாழ்வது
எவ்வளவு கஷ்டமென்று
மீனாவுக்கு தெரியும்”
என்றாள் மீனா

பிறகு எதையோ
யோசித்தவளாக
“மீனாவாக வாழ்வதைக் கூட
சகித்துக் கொள்ளலாம்
மீனாவுக்காக வாழ்வது
அதைவிட துயரமானது”
என்றாள் சிரித்துக் கொண்டே.


இக்கவிதையில் தனது நெருக்கடி ஏன் வருகிறது என மீனா யோசிக்கிறாள். தனது மிதமிஞ்சிய தன்னுணர்வே அதற்கு காரணம் என உணர்கிறாள். இதை உணர்ந்து கொண்டதும் அவள் தன்னை நோக்கி தானே நகைக்கிறாள். தனிமையில் தனக்குள் பேசிக் கொள்வது, சுயபிரக்ஞையுடன் தன்னை மதிப்பிட்டு பகடி செய்வது, அவள் தனது தன்னுணர்வு எனும் சிறைக்குள் தானே மாட்டி கொண்டிருப்பது ஆகியவற்றில் ஒரு ஐரோப்பிய தன்மை உள்ளது. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் எழுதிய கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் மீனாவை ஒரு சராசரி இந்தியப் பெண்ணாக, உணர்ச்சிகரமானவளாய், நாடகீய சித்திரங்கள் நிரம்பியவளாய், சதா உடைந்து உருகி மன்றாடுகிறவளாய் மாற்றியிருப்பார். இக்கவிதை வழி இப்போது மீனா தன் ”ஆதிநிலைக்கு” மீள்கிறாள். எனக்கு இந்த மீனாவை பிடித்திருக்கிறது. இந்திய மீனா ரொம்ப எதார்த்தமாய் இருக்கிறாள் எனக்கு அவளை கவிதையில் பார்க்க “பிடிக்கவில்லை”.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...