Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பேலியோ உணவு ஏன் நம்மை உற்சாகமாக வைத்திருக்கிறது?

பேலியோ உணவு நம் மனநிலையை சீராக வைக்கிறது. Mood swing எனப்படும் அதிரடி மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, களைப்பு ஆகியவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. இதற்கு ஒரு காரணம் பேலியோ உணவு ரத்த சர்க்கரையை அதிரடியாய் உயர்த்துவதில்லை என்பது. வேறு சில காரணங்களும் உள்ளன.
உணவு நமது சுபாவத்தை தீர்மானிக்கிறது என்பது பற்றி இந்திய மரபில் பல நம்பிக்கைகள் உண்டு. சில வாழ்க்கை மார்க்கங்கள் கொண்டோருக்கு குறிப்பிட்ட உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. (இன்னொரு பக்கம் உணவின் வழி இங்கு சாதியம் நிறுவப்பட்டுள்ளது.) உடலின் குளிர்மை, வெப்பம் பொறுத்து உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. காந்தி உணவின் உளவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது ஜைன மதப் பின்னணி காரணமாயும், இங்கிலாந்தில் அவர் கலந்து கொண்ட சைவ உணவு குழுக்களின் தாக்கம் காரணமாயும் உணவில் சைவத்தை அவர் வலியுறுத்தினார். அவர் உணவு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். காந்தி இயல்பில் கொந்தளிப்பான சுபாவம் கொண்டவர். இளமையில் தனது கட்டுக்கடங்காத காமம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது தத்தளித்தவர். மனதை நிலைப்படுத்துவதில் உணவுக்கு பங்கு உண்டு என அவர் நம்பினார். அவர் அடிக்கடி விரதம் இருந்ததன் ரகசியம் இது தான். எந்த அரசியல் சிக்கல் ஏற்படும் போதும் உண்ணாநோன்பு தன் மனதை தெளிவுபடுத்தி உடலையும் வலுப்படுத்துவதாய் அவர் உணர்ந்தார். (இன்னொரு பக்கம் அவர் தன் உடலை வருத்துவது மக்களுக்கு பெரும் மன எழுச்சியை அளித்து காந்தியத்தின் பின் லட்சக்கணக்கானோரை ஈர்த்தது.) 

அது மட்டுமல்ல, காந்தி உணவை குறைக்க குறைக்க தன் ஆரோக்கியமும் மன உறுதியும் தெளிவும் அதிகரிப்பதையும் கண்டார்.
 இது குறித்து ஏற்கனவே சில ஆய்வுகள் நடந்துள்ளன. அதாவது, மனிதர்கள் எந்தளவு குறைவாக உணவருந்துகிறார்களோ அந்தளவு அவர்களின் ஆயுள் நீடிக்கிறது. பஞ்ச காலத்தில் மனிதர்கள் அதிக காலம் வாழ்ந்ததாய் ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது ஒருவேளை உணவு கிடைக்கும் சூழலில் உடல் ஒரு battery saving modeக்கு செல்கிறது. உடல் ஆற்றலை எரிக்கும் வேகம் குறைகிறது. உடலின் வளர்ச்சி வேகமும் மெத்தனமாகிறது. விளைவாக ஆயுள் அதிகமாகிறது. ஏன்? ஏனென்றால் உணவு குறையும் போது மனிதன் குழந்தை பெற்று வம்சாவளியை நீடிக்க வாய்ப்புகளும் குறைகின்றன. (பொதுவாக பொருளாதார நெருக்கடிகள் குழந்தைப்பேறு ஆர்வத்தை மனிதரில் குறைக்கிறது.) நம்மை மரணத்தை நோக்கி விரைவுபடுத்தும் பொத்தான் ஒன்று நம் மரபணுக்குள் உள்ளது. முப்பது வயது நெருங்கும் போது இந்த பொத்தான் தானே செயல்படத் துவங்குகிறது. ஆனால் உணவை மிகக்குறைவாக உண்ணும் மனிதர்களில் இந்த பொத்தான் off நிலையில் இருக்கிறது. விளைவாக அவர்கள் நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள். இதனால் தான் உணவு அபரிதமாய் கிடைக்கும் இன்றைய தலைமுறையில் பலரும் ஐம்பது வயதுக்குள் மரிக்கிறார்கள். காந்தி தன் உணவை வெகுவாய் குறைத்து உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தினார். கோட்சே சுடாவிட்டால் மனிதர் நூறு வயதை எளிதில் தொட்டிருப்பார்.
இந்தியர்கள் நம்புவது போல் உணவு நம் ஆளுமையை வடிவமைக்கிறதா என்பது குறித்து தீர்க்கமான அறிவியல் ஆய்வுகள் இல்லை. ஆனால் சிக்மண்ட் பிராய்ட் ஒரு விசயத்தை குறிப்பிடுகிறார். நமது அஜீரணத்துக்கும் துர்கனவுகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதாவது வயிற்று தொந்தரவுகளுடன் தூங்கினால் கனவில் ரத்தக்களறி தோன்றும்; அச்சுறுத்தும் காட்சிகள் மனத்திரையில் ஓடும். நள்ளிரவில் அலறி எழுவோம். குடல் பகுதியில் உள்ள நரம்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளதாய் பிராயிட் கணிக்கிறார்.
பேலியோ நிபுணர்கள் இது சம்மந்தமாய் இரண்டு விசயங்களை சொல்கிறார்கள். ஒன்று leaky gut. அவர்களின் கருத்துப்படி, தானிய உணவுகள் குடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. விளைவாக குடலில் ஓட்டைகள் தோன்றுகின்றன. சரியாக செரிக்கப்படாத உணவுத் துகள்களும், விஷப்பொருட்களும் ரத்தத்தில் கலக்கின்றன. நாம் உண்ணும் பெரும்பாலான சத்தான உணவுகள் உடலில் ஒட்டாமல் போகின்றன. கல்லீரல் ரத்தத்தில் இருந்து அசுத்தங்களை அகற்ற கடுமையாய் முயலும். ஆனால் ஒரு கட்டத்தில் அதுவும் சோர்ந்து போகும். இப்போது நம் உடலின் தற்பாதுகாப்பு சக்தி விழித்துக் கொள்ளும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அது தொற்றுவியாதி கிருமிகளாய் கருதி தாக்க துவங்கும். இந்த தாக்குதல் நமது உடல் உறுப்புகள் எதிராக நடக்கும் என்பது தான் சிக்கல். அதாவது உடல் தன் கண்ணுக்கு தெரியாத சக்தியை தாக்க முயன்று தன்னையே கடுமையாய் காயப்படுத்தும். விளைவாக உடல் முழுக்க நமக்கு வீக்கம் ஏற்படும். மனம் எப்போதும் பனிமூட்டத்தில் இருப்பது போன்ற குழப்ப நிலை, கசப்புணர்வு, மறதி, தலைவலி ஆகியவை அடிக்கடி ஏற்படும். இப்படி குடலில் ஏற்பட்ட சிக்கல் (பிராயிட் சொன்னது போல்) நம் மனதை வந்து தாக்கும்.
அடுத்து நமது தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்குள் மற்றொரு தற்பாதுகாப்பு சக்தி செயல்படுகிறது. இந்த விதைகள் நாம் உண்பதற்கானவை அல்ல. இவை முளைத்து செடியாக வேண்டியவை. தம் குழந்தைகளை மனிதர்களும் மிருகங்களும் மொத்தமாய் கபளீகரம் செய்வதை விரும்பாத செடிகள் விதைகளுக்குள் சில ஒவ்வாமை ஏற்படுத்தும் ரசாயனங்களை ஒளித்து வைக்கின்றன. இந்த தானியங்களை உண்ணும் நமக்குள் இவை ஒவ்வாமையையும், வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
 இன்றைய மனிதர்கள் எப்போதும் களைப்பாக, தூக்க சடவோடு இருக்கிறார்கள். இதை போக்க மதுவருந்துகிறார்கள். புகைக்கிறார்கள். பார்ட்டிகள், கொண்டாட்டங்கள் என தம்மை மறக்க முயல்கிறார்கள். ஆனால் களைப்பு அவர்களை விடாமல் துரத்துகிறது. நமது உணவு மூளையை பாதிப்பது தான் இந்த சடவுக்கு காரணம் என்கிறார்கள் பேலியோ நிபுணர்கள்.
பேலியோ உணவுமுறைக்கு மாறும் போது பெரும்பாலானோர் உணரும் முதல் மாற்றம் அபாரமான ஆற்றலும் மனத்தெளிவும் உற்சாகமும். இது குறித்து இணையத்தில் நிறைய பதிவுகள் கிடைக்கின்றன. நானும் என் அனுபவத்தில் உணர்ந்தேன். என் நிரந்தர களைப்பும் உடல் அலுப்பும் மறைந்தன.

 ஆனாலும் இவ்விசயத்தில் போதுமான அறிவியல் ஆய்வுகள் இன்னும் நடத்தப்பட வில்லை தான். அறிவியல் தன் முத்திரையை குத்தினாலும் இல்லாவிட்டாலும் செயற்கையான உணவுகளையும் தானியங்களையும் தவிர்ப்பது தமக்கு மனதளவில் நன்மை பயக்கிறதா என்பதை அவரவர் தனிப்பட்ட முறையில் முயன்று பார்ப்பது தான் சரி. நன்மை விளைந்தால் மகிழ்வோம். இல்லாவிட்டால் கடந்து செல்வோம். நஷ்டம் இல்லையே!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...