Skip to main content

பேலியோ உணவு ஏன் நம்மை உற்சாகமாக வைத்திருக்கிறது?

பேலியோ உணவு நம் மனநிலையை சீராக வைக்கிறது. Mood swing எனப்படும் அதிரடி மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, களைப்பு ஆகியவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. இதற்கு ஒரு காரணம் பேலியோ உணவு ரத்த சர்க்கரையை அதிரடியாய் உயர்த்துவதில்லை என்பது. வேறு சில காரணங்களும் உள்ளன.
உணவு நமது சுபாவத்தை தீர்மானிக்கிறது என்பது பற்றி இந்திய மரபில் பல நம்பிக்கைகள் உண்டு. சில வாழ்க்கை மார்க்கங்கள் கொண்டோருக்கு குறிப்பிட்ட உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. (இன்னொரு பக்கம் உணவின் வழி இங்கு சாதியம் நிறுவப்பட்டுள்ளது.) உடலின் குளிர்மை, வெப்பம் பொறுத்து உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. காந்தி உணவின் உளவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது ஜைன மதப் பின்னணி காரணமாயும், இங்கிலாந்தில் அவர் கலந்து கொண்ட சைவ உணவு குழுக்களின் தாக்கம் காரணமாயும் உணவில் சைவத்தை அவர் வலியுறுத்தினார். அவர் உணவு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். காந்தி இயல்பில் கொந்தளிப்பான சுபாவம் கொண்டவர். இளமையில் தனது கட்டுக்கடங்காத காமம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது தத்தளித்தவர். மனதை நிலைப்படுத்துவதில் உணவுக்கு பங்கு உண்டு என அவர் நம்பினார். அவர் அடிக்கடி விரதம் இருந்ததன் ரகசியம் இது தான். எந்த அரசியல் சிக்கல் ஏற்படும் போதும் உண்ணாநோன்பு தன் மனதை தெளிவுபடுத்தி உடலையும் வலுப்படுத்துவதாய் அவர் உணர்ந்தார். (இன்னொரு பக்கம் அவர் தன் உடலை வருத்துவது மக்களுக்கு பெரும் மன எழுச்சியை அளித்து காந்தியத்தின் பின் லட்சக்கணக்கானோரை ஈர்த்தது.) 

அது மட்டுமல்ல, காந்தி உணவை குறைக்க குறைக்க தன் ஆரோக்கியமும் மன உறுதியும் தெளிவும் அதிகரிப்பதையும் கண்டார்.
 இது குறித்து ஏற்கனவே சில ஆய்வுகள் நடந்துள்ளன. அதாவது, மனிதர்கள் எந்தளவு குறைவாக உணவருந்துகிறார்களோ அந்தளவு அவர்களின் ஆயுள் நீடிக்கிறது. பஞ்ச காலத்தில் மனிதர்கள் அதிக காலம் வாழ்ந்ததாய் ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது ஒருவேளை உணவு கிடைக்கும் சூழலில் உடல் ஒரு battery saving modeக்கு செல்கிறது. உடல் ஆற்றலை எரிக்கும் வேகம் குறைகிறது. உடலின் வளர்ச்சி வேகமும் மெத்தனமாகிறது. விளைவாக ஆயுள் அதிகமாகிறது. ஏன்? ஏனென்றால் உணவு குறையும் போது மனிதன் குழந்தை பெற்று வம்சாவளியை நீடிக்க வாய்ப்புகளும் குறைகின்றன. (பொதுவாக பொருளாதார நெருக்கடிகள் குழந்தைப்பேறு ஆர்வத்தை மனிதரில் குறைக்கிறது.) நம்மை மரணத்தை நோக்கி விரைவுபடுத்தும் பொத்தான் ஒன்று நம் மரபணுக்குள் உள்ளது. முப்பது வயது நெருங்கும் போது இந்த பொத்தான் தானே செயல்படத் துவங்குகிறது. ஆனால் உணவை மிகக்குறைவாக உண்ணும் மனிதர்களில் இந்த பொத்தான் off நிலையில் இருக்கிறது. விளைவாக அவர்கள் நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள். இதனால் தான் உணவு அபரிதமாய் கிடைக்கும் இன்றைய தலைமுறையில் பலரும் ஐம்பது வயதுக்குள் மரிக்கிறார்கள். காந்தி தன் உணவை வெகுவாய் குறைத்து உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தினார். கோட்சே சுடாவிட்டால் மனிதர் நூறு வயதை எளிதில் தொட்டிருப்பார்.
இந்தியர்கள் நம்புவது போல் உணவு நம் ஆளுமையை வடிவமைக்கிறதா என்பது குறித்து தீர்க்கமான அறிவியல் ஆய்வுகள் இல்லை. ஆனால் சிக்மண்ட் பிராய்ட் ஒரு விசயத்தை குறிப்பிடுகிறார். நமது அஜீரணத்துக்கும் துர்கனவுகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதாவது வயிற்று தொந்தரவுகளுடன் தூங்கினால் கனவில் ரத்தக்களறி தோன்றும்; அச்சுறுத்தும் காட்சிகள் மனத்திரையில் ஓடும். நள்ளிரவில் அலறி எழுவோம். குடல் பகுதியில் உள்ள நரம்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளதாய் பிராயிட் கணிக்கிறார்.
பேலியோ நிபுணர்கள் இது சம்மந்தமாய் இரண்டு விசயங்களை சொல்கிறார்கள். ஒன்று leaky gut. அவர்களின் கருத்துப்படி, தானிய உணவுகள் குடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. விளைவாக குடலில் ஓட்டைகள் தோன்றுகின்றன. சரியாக செரிக்கப்படாத உணவுத் துகள்களும், விஷப்பொருட்களும் ரத்தத்தில் கலக்கின்றன. நாம் உண்ணும் பெரும்பாலான சத்தான உணவுகள் உடலில் ஒட்டாமல் போகின்றன. கல்லீரல் ரத்தத்தில் இருந்து அசுத்தங்களை அகற்ற கடுமையாய் முயலும். ஆனால் ஒரு கட்டத்தில் அதுவும் சோர்ந்து போகும். இப்போது நம் உடலின் தற்பாதுகாப்பு சக்தி விழித்துக் கொள்ளும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அது தொற்றுவியாதி கிருமிகளாய் கருதி தாக்க துவங்கும். இந்த தாக்குதல் நமது உடல் உறுப்புகள் எதிராக நடக்கும் என்பது தான் சிக்கல். அதாவது உடல் தன் கண்ணுக்கு தெரியாத சக்தியை தாக்க முயன்று தன்னையே கடுமையாய் காயப்படுத்தும். விளைவாக உடல் முழுக்க நமக்கு வீக்கம் ஏற்படும். மனம் எப்போதும் பனிமூட்டத்தில் இருப்பது போன்ற குழப்ப நிலை, கசப்புணர்வு, மறதி, தலைவலி ஆகியவை அடிக்கடி ஏற்படும். இப்படி குடலில் ஏற்பட்ட சிக்கல் (பிராயிட் சொன்னது போல்) நம் மனதை வந்து தாக்கும்.
அடுத்து நமது தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்குள் மற்றொரு தற்பாதுகாப்பு சக்தி செயல்படுகிறது. இந்த விதைகள் நாம் உண்பதற்கானவை அல்ல. இவை முளைத்து செடியாக வேண்டியவை. தம் குழந்தைகளை மனிதர்களும் மிருகங்களும் மொத்தமாய் கபளீகரம் செய்வதை விரும்பாத செடிகள் விதைகளுக்குள் சில ஒவ்வாமை ஏற்படுத்தும் ரசாயனங்களை ஒளித்து வைக்கின்றன. இந்த தானியங்களை உண்ணும் நமக்குள் இவை ஒவ்வாமையையும், வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
 இன்றைய மனிதர்கள் எப்போதும் களைப்பாக, தூக்க சடவோடு இருக்கிறார்கள். இதை போக்க மதுவருந்துகிறார்கள். புகைக்கிறார்கள். பார்ட்டிகள், கொண்டாட்டங்கள் என தம்மை மறக்க முயல்கிறார்கள். ஆனால் களைப்பு அவர்களை விடாமல் துரத்துகிறது. நமது உணவு மூளையை பாதிப்பது தான் இந்த சடவுக்கு காரணம் என்கிறார்கள் பேலியோ நிபுணர்கள்.
பேலியோ உணவுமுறைக்கு மாறும் போது பெரும்பாலானோர் உணரும் முதல் மாற்றம் அபாரமான ஆற்றலும் மனத்தெளிவும் உற்சாகமும். இது குறித்து இணையத்தில் நிறைய பதிவுகள் கிடைக்கின்றன. நானும் என் அனுபவத்தில் உணர்ந்தேன். என் நிரந்தர களைப்பும் உடல் அலுப்பும் மறைந்தன.

 ஆனாலும் இவ்விசயத்தில் போதுமான அறிவியல் ஆய்வுகள் இன்னும் நடத்தப்பட வில்லை தான். அறிவியல் தன் முத்திரையை குத்தினாலும் இல்லாவிட்டாலும் செயற்கையான உணவுகளையும் தானியங்களையும் தவிர்ப்பது தமக்கு மனதளவில் நன்மை பயக்கிறதா என்பதை அவரவர் தனிப்பட்ட முறையில் முயன்று பார்ப்பது தான் சரி. நன்மை விளைந்தால் மகிழ்வோம். இல்லாவிட்டால் கடந்து செல்வோம். நஷ்டம் இல்லையே!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...